Tuesday, June 10, 2014

2014 குடியரசுத்தலைவர் உரையின் தொகுப்பு

இன்றைய குடியரசு தலைவரின் உரையை முழுதும் படிக்காதவர்கள் அவசியம் படியுங்கள் என்பேன். 

நீண்ட காலத்துக்கு பிறகு தன்னம்பிக்கை மிளிரும், நாட்டின் எல்லாத்தரப்பு மக்களையும் உள்ளடக்கிய, வளர்ச்சியை மட்டுமே பேசும், சவால் விடாத, அண்டை நாட்டினரை தூண்டிவிடாத, வேறுவகையில் சொன்னால் அண்டை நாட்டு மக்களுக்கு நமக்கு இப்படி ஒரு அரசு அமையாதா என ஏங்க வைக்கும் உரை.

கல்வியை ஊக்குவிப்பதில், ஐஐடிகளை மாநிலத்துக்கு ஒன்றாய் நிறுவ திட்டங்கள்..

தொலைதூரக்கல்வி.தொலைதூர வாசகசாலைகள்,

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க புதிய புதிய திட்டங்கள்.

மாநிலங்களுடன் இணைந்த வளர்ச்சி திட்டங்கள் தீட்டப்படும். (மத்திய அரசு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுக்கொண்டிருந்த காலம் போய் இணைந்து செயல்பட திட்டங்கள்)

விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த, கட்டுபடியாகும் விலை கிடைக்க, விளை பொருட்களை சேமிக்க, அதை தொலைதூரங்களுக்கு கொண்டு செல்ல தனி ரயில் பாதைகள், ரயில்கள்

கிராமங்களிலும் நகரங்களில் கிடைக்கும் வசதிகளை தருதல் இதன் முக்கிய விளைவாக நகரங்களுக்கு மக்கள் குடிபெயர்தல் தவிர்க்கப்படும்.

எல்லா கிராமப் பள்ளிகளுக்கும் இண்டர்நெட் வசதியுடன் இணைக்கப்படும்.

கருப்புப் பணத்தை மீட்க குழு அமைக்கப்பட்டு விட்டாலும் வெளி நாடுகளுடன் தீவிரமாக தொடர்பு கொண்டு துரிதமாக மீட்க நடவடிக்கை

நீதித்துறையில் காலியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும். தற்போதைய நீதிமன்றங்களின் எண்ணிக்கை படிப்படியாக இருமடங்காக்கப்படும்.

இளைஞ்சர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வெளிநாட்டு முதலீட்டுத்திட்டங்களுக்கு முன்னுரிமை.

நாட்டின் 75வது சுதந்திர தினத்துக்குள் நாட்டின் எல்லா மக்களுக்கும் 24 மணி நேர மின்சாரம், கழிவறை வசதிகள், தண்ணீர் இணைப்புடன் கூடிய,உறுதியான வீடுகள், கட்டித்தரப்படும்.

ராணுவ வீரர்களின் நலன் பேணப்படும் ஒரு ரேங்க், ஒரு பென்சன் என்ற திட்டம் அமல்படுத்தப்படும். அவர்களுக்கென ஒரு தனி கமிஷன் அமைக்கப்படும்.

ப்ராண்ட் இந்தியா - பாரம்பரியம்,(Tradition) திறன், (Talent) சுற்றுலா ( Tourism), வணிகம், (Trade) தொழில்நுட்பம் (Technology) இந்த 5 விஷயங்களைக் கொண்டு கட்டமைக்கப்படும்.

இது தவிர பல்வேறு மொழிகளில் இருக்கும் இலக்கியங்களை எல்லோருக்கும் கிடைக்கும்படி செய்ய ஈ பாஷா (E Basha)

ஆண்டு முழுதும் தண்ணீர் ஓடும் சுத்தமான கங்கையை உருவாக்க அரசாங்கம் முழு முயற்சி எடுக்கும்.

இருக்கும் துறைமுகங்களை நவீனப்படுத்தப்படும், உலகத்தரத்துடன் புதிய துறைமுகங்கள் கட்டப்படும். அனைத்து துறைமுகங்களையும் இணைக்கும் வகையில் சாலை மற்றும் ரயில் கட்டமைப்புகளும் உருவாக்கப்படும்.

அதிவேக ரயில்திட்டங்கள் Diamond
Quadrilateral project of high speed trains.என்ற பெயரில் செயல்படும்.

தொழில், விவசாயம், வேலைவாய்ப்பு, நகர கட்டமைப்பு, உள்நாடு பாதுகாப்பு, இந்தியாவின் கிழக்கு பகுதி மேம்பாடு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, ராணுவம், அண்டை நாடுகள் மற்றும் உலக நாடுகளுடனான உறவு இப்படி எல்லா விஷயங்களையும் உள்ளடக்கிய மிக அருமையானதொரு உரை.

நிச்சயம் இதைச் செய்து முடிக்கும் தைரியமும், தொலைநோக்குப் பார்வையும், அதற்குண்டான வழிகாட்டுதலும் உடைய நமது பிரதமர் திரு. நரேந்திர மோதி அவர்கள் இந்த உரையில் சொல்லப்பட்டுள்ள அனைத்தையும் செய்து முடிப்பார் என நம்பலாம்.

முழுவதையும் ஆங்கிலத்தில் படிக்க கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.

http://www.pmindia.gov.in/President_Address.pdf

No comments: