Sunday, March 27, 2011

ஜெர்மனியும் இந்தியாவும்



ஜெர்மனிக்கும், இந்தியாவுக்குமான குடிமக்களின் ஒழுங்கு பற்றிய ஒப்பீடு.. நெட்டில் கிடைத்தது.. நம்மைக் கிண்டல் செய்வதுபோல பட்டாலும் நம் இன்னும் அவ்வாறுதான் இருக்கிறோம். பொது இடங்களில் நம் பழக்கங்களை மாற்றிக்கொள்ளவில்லையெனில் வெளிநாடுகளில் நமக்கு அவமானம் காத்திருக்கிறது.

Saturday, March 26, 2011

குவைத்தில் ஒரு மணற்சுனாமி..


நாங்க சுனாமியிலேயே சும்மிங்கபோடுறவைங்க என ஆடுகளத்தில் தனுஷ் சொல்வார். ஜப்பானில் சுனாமி வந்ததைப் பார்த்திருந்தால் அவருக்குத் தெரிந்திருக்கும், அவர் சும்மிங் போடுவாரா இல்லை சுனாமி அவரை சாப்பிடுமா என்பது.. நேற்று குவைத்தில் வந்திருந்த மணற்சுனாமி வந்து சென்றது.

நேற்று ( 25.03.2011) திடீரென ஐந்து மணியளவில் நான் குடியிருக்கும் மங்காஃப் ஏரியாவில் மொத்தமும் இருட்டிவிட்டது. வீடு முழுதும் திரைச்சீலை என்பதால் வெளியே நடப்பது எதுவுமே தெரியவில்லை. ஆனால் சிறிது நேரத்தில் ஒரு போன் வந்து வெளியே பாருங்கள் எனச் சொன்னார்கள். கிட்டத்தட்ட மணலை தொடர்சியாக கொட்டி விடுவதுபோல எங்கெங்கும் சுழற்காற்றுடன் கூடிய தூசி மட்டுமே.

வீட்டுக்குள்ளேயே எளிதாக மூச்சுவிட சிரமப்பட வேண்டியிருந்தது. எனக்கு தொடர்ச்சியாக தலைவலி தூசியினால். வெளியே ரோட்டில் நடந்து சென்றவர்கள் எவ்வளவு அவதிப்பட்டார்களோ? மணலை மட்டுமே சுவாசிக்க முடியும். அவ்வளவு மணற்சுனாமி.

அடிக்கடி ஜன்னலைத் திறந்து எவ்வளவு குறைந்திருக்கிறது எனப் பார்த்தால் வீட்டுக்குள் தூசி வருகிறது.

கிட்டத்தட்ட எதையுமே பார்க்க இயலாத நிலை. Zero Visibility என்பதை நேரில் பார்த்தேன். வீட்டிலிருந்து பார்த்த எனக்கே இப்படியெனில் சாலையில் வண்டியோட்டிக்கொண்டிருந்த எத்தனை பேர் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருப்பார்கள் என நினைக்கவே பயமாய் இருக்கிறது.

நேற்றைக்கு க்ரை சார்பாக ( CRY -Children Rights and You)கிரிக்கெட் போட்டி நடந்தது. நிறையக்குழந்தைகள் பெற்றோர்கள் துணையின்றி ஆசிரியரின் கண்காணிப்பில் வந்திருந்தன. ஐந்து மணிக்கு மேலும் ஆட்டம் நீடித்துக்கொண்டிருந்தது. அவர்களின் பெற்றோர்கள் பட்ட அவஸ்தையை வர்ணிக்க இயலாது. மனற்புயலால் கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் தொலைபேசிகள் இயங்கவில்லை. பக்கத்து வீட்டுப் பையனும் கிரிக்கெட் விளையாட சென்றிருந்தான். அவனது அம்மா ஒரே அழுகை. போன் லைன் வேறு கிடைக்கவில்லை. ஒருவழியாக லைன் கிடைத்த பிறகு வேறு ஒரு குழந்தையின் தகப்பனார் பக்கத்துவீட்டுப் பையனை வீட்டில் கொண்டுவந்து விட்டுச் சென்றார்.

காலையில் எல்லாம் தெளிந்து வானம் தெளிவாய் இருந்தது. நிறுத்தி வைத்திருந்த எனது வண்டியின் மீது 1 இன்சுக்கு மனல்பொடி. வைப்பர் இட்டால் கண்ணாடி முழுதும் கோடுகள் விழும். துணியை வைத்து கொஞ்சம் துடைத்துவிட்டு வண்டியை எடுத்து வேகமாக ஓட்டியதில் எல்லா தூசிகளும் போயே போச்சு.

வீடெல்லாம் ஒரே தூசி. வீட்டுக்காரம்மாதான் இன்று முழுக்க வீட்டை பெருக்கி, துடைத்துக் கொண்டிருப்பார். இன்று மாலை தூசிப்புயல் வராமல் இருக்க வேண்டும்.

இப்படி ஒரு நிலைமை வந்தால் எப்படி சமாளிப்பது என யாராவது சொல்லித்தரலாம்.

இன்றைக்கு அராப் டைம்ஸில் இந்த செய்தியும் வந்திருக்கிறது. 50 கிமி வேகத்தில் மனற்புயல் அடித்ததாம்.

குவைத்தின் வடக்குப் பகுதியில் கனமழை பெய்ததால் தூசியெல்லாம் குறைந்துவிட்டதாம். 60 வயது பெண்ணும் அவரது மகனும் சால்மி பாலைவன ஏரியாவில் காணமல்போய்விட்டார்கள். இப்போதுவரை அவர்கள் கிடைக்கவில்லை. மற்றபடி பெரிய சேதங்கள் ஏதுமில்லை எனினும், ஒரு மாலை நேரத்தை அதி பயங்கர மாலையாக்கிவிட்டு சென்றுவிட்டது மனற்புயல்.

குவைத்துக்கா கானூன், குவைத்கா மோசம், குவைத்திக்கா திமாக் கபிபி பதலி ஹோசக்தாகை ( குவைத்தின் சட்டங்கள், குவைத்தின் காலநிலை, குவைத்தியின் மூளை அல்லது மூட் எப்போது வேண்டுமானாலும் மாறிவிடும்) என நண்பர்கள் இங்கு அடிக்கடி சொல்லும் சொலவடையை நேற்று காலநிலை விஷயத்தில் பார்த்தேன்.

தொடர்புடைய சுட்டி இங்கே

படம் அராப் டைம்ஸ் - குவைத் பத்திரிக்கையிலிருந்து