Monday, April 11, 2011

தலைவர் ஜோக்குகள்



ரஜினியைப் பற்றிய செய்திகள் இந்தியா முழுக்க எப்போதும் இருக்கும். ரஜினி ஒண்றுமே செய்யாமல் சும்மா இருந்தாலும் அதுவும் செய்திதான்.

சமீபத்தில், ரஜினி உங்கள் மீது எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறார். அவரை நீங்கள் கிண்டலடிப்பது போல எஸ்எம்எஸ் அனுப்பியிருப்பது நியாயமா?' என ரஜினி ரசிகர்கல் சிலர் வருத்தப்பட்டு அமிதாப்புக்கு எழுத, பதறிப் போய் பதில் சொல்லியிருக்கிறார் அமிதாப்.

எந்த ஜோக்கும் ரஜினியை கிண்டலடிப்பது போல இருக்காது. இவை அனைத்திலுமே கற்பனை கூட செய்ய முடியாத அளவு உயர்வாக சித்தரிக்கப்பட்டிருப்பார் ரஜினி. போஸ்புக், ட்விட்டர், எஸ்எம்எஸ் என எங்கும் இந்த ரஜினி ஜோக்குகள்தான்.

தலைவர் ரசிகர்கள் அமிதாப்புக்கு வருத்ததுடன் எழுதிய ஜோக் இதுதான்

"கிரகாம் பெல் டெலிபோனைக் கண்டுபிடித்த போது, அவருக்கு ரஜினியிடமிருந்து இரு மிஸ்டு கால்கள் வந்திருப்பதைக் கண்டாராம்"

இது ஒரு நல்ல கற்பனை என்றே எழுதியிருந்தாராம்..

மேலும் ரஜினி எந்த அளவு உயர்வானவர், அவரால் முடியாத விஷயமே இல்லை என்பதை உணர்த்துவதாகவே உள்ளன. மிகவும் உன்னதமான மனிதர், மிகச் சிறந்த மனிதாபிமானி, கடவுளுக்கு நிகரானவர், அன்பு மிக்கவர்", என்று குறிப்பிட்டுள்ளார்


எந்திரன் வெற்றிக்குப் பிறகு ரஜினி குறித்த ஜோக்குகள் வட இந்தியாவில் அதிகம் புழங்குகின்றன.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியான சில ரஜினி ஜோக்குகளை கீழே தமிழ்படுத்தி இட்டிருக்கிறேன்.


-----------



01. சமீபத்தில் சீன விமானநிலையம் புகைமண்டலம் காரனமாக மூடப்பட்டது. புகைமண்டலத்திற்கான காரனம் கண்டறியப்பட்டது - இந்தியாவில் ரஜினி புகைபிடிக்கிறார்.


02. குழந்தையாக இருக்கும்போது ரஜினி 7 வெவ்வேறு பள்ளிகளில் படித்தார்..அவைகள் இன்று ஐ.ஐ.டி என அழைக்கப்படுகின்றன.


03. ரஜினிகாந்த் இந்தியாவில் வாழ்வதற்காக இந்திய அரசு ரஜினிக்கு வரி கட்டுகிறது.


04. ரஜினிகாந்த் சூரியனை கோபப்பட்டு நோக்கும்போது சந்திரனுக்குப் பின்னால் சூரியன் ஒளிந்துகொள்கிறது. அதுவே சூரியகிரகனம் என்றழைக்கபடுகிறது.


05. ஒருநாள் தூங்கி எழுந்தபின்னர் ரஜினி தனது அறிவில் 1 சதவீதத்தை உலகிற்கு கொடுத்தார். கூகிள் பிறந்தது.


06. ரஜினி 150 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? பிரிட்டிஷார் சுதந்திரப்போராட்டம் நடத்திக்கொண்டிருந்திருப்பார்கள்.


07. கஜினிகூட ரஜினிய மறக்க மாட்டார்.


08. நிலநடுக்கம் எப்போது உண்டாகிறது? ரஜினியின் மொபைல் போன் வைப்ரேஷனில் இருக்கும்போது.


09. ரஜினி ஒரு நாள் பள்ளிக்கு மட்டம் போட்டு விட்டார், அப்போதிலிருந்து அந்த நாள் ஞாயிற்றுக்கிழமை என அழைக்கப்படுகிறது.


10. எகிப்திய பிரமிடுகள் என்பவை ரஜினிகாந்த் சிறுகுழந்தையாய் இருக்கும்போது பள்ளியில் செய்த பிராஜக்ட்டுகள்.


11. இஸ்ரோவே இனி கிடையாது. எல்லா ராக்கெட்டுகளையும் தலைவர் தீபாவளிக்காக வாங்கிவிட்டார்.


12. தலைவர் ஏன் நாலுபக்கமும் கினறு இருப்பதுபோல ஒரு ஏக்கர் நிலத்தை வாங்குகிறார்? கேரம் விளையாடுவதற்காக.


13. மிஷன் இம்பாஸிபிள் படத்திற்கு ரஜினிகாந்த் தான் முதலில் நடிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார். ஆனால் படத்தின் தலைப்பு அவரை அசிங்கப்படுத்துவடுபோல இருந்ததால் வேண்டம் எனச் சொல்லிவிட்டார். ( ரஜினியால முடியாததா??)


14. ரஜினி ஒரு அறைக்குள் நுழையும்போது விளக்கை ஏற்றுவதில்லை, இருட்டை விரட்டி விடுகிறார்.


15. ரஜினிகாந்த் உங்களை நோக்கி விரலைக் காண்பிக்கும்போது நீங்கள் பிழைத்திருக்க இன்னும் எத்தனை விநாடிகள் இருக்கிறது என்பதைச் சொல்கிறார்.


16. குளோபல் வார்மிங் அப்படின்னு ஒண்ணு கிடையவே கிடையாது. ரஜினி அப்படி ஒரு குளிர்ச்சி, அதனால சூரியன மேல பாத்து திருப்பி விட்டுட்டார்.


17. தலைவர் ஒருவாட்டி ஜெர்மன் ஃபைட்டர் ஜெட் விமானத்தை விரலாலேயே சுட்டுத்தள்ளினார். செஞ்சதெல்லாம் ”பேங்” (Bang) குனு கத்தியதுதான்..


18.கிழக்கிந்தியக் கம்பெணி இந்தியாவை விட்டு 1947ல் கிளம்பியது. ஏனெனில் ரஜினி 1949ல் பிறக்க வேண்டியது.


19. இந்தி கஜினியில் ரஜினி நடிப்பதாய் இருந்தது.. ஆனால் மறுத்துவிட்டார். ஏனெனில் ரஜினி மற்றவர்களுக்குத்தான் ஞாபக மறதியைக் கொடுப்பார்.


20. வரம் கொடுக்கும் பூதங்கள் ரஜினியை தேய்த்து மூன்று வரங்களை பெற்றுச் செல்லும்.


21. டெல்லி ராஜதானி ரயில் ஒருமுறை ரஜினியை விட்டுச் சென்றுவிட்டது. அதன் பின்னர் எத்தனை வேகமாய் ஓடியும் அவரைப் பிடிக்கமுடியவில்லை.

இன்றைய தேதிக்கு இந்தியாவிலேயே எல்லோருக்கும் தெரிந்த/ பிடித்த ஒரு நடிகர் இருக்கிறாரெனில் ரஜினிகாந்த் மட்டுமே. நமக்குத்தெரிந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத்திலும் அவரது திரைப்படங்கள் சக்கைப்போடுபோடுகின்றன. இத்தனைக்கும் பக்கத்து மாநிலங்களில் ரீமேக்கூட செய்யாமல் வெறும் டப்பிங் படங்களே பட்டையைக் கிளப்புகின்றன. அவரைப் பற்றிய செய்திகளுக்கும் குறைவில்லை. ஐஸ்வர்யாவுடன் ஜோடியாக நடித்துவிட்டு அதே கையோடு இமயமலைக்குச் செல்லும் பக்குவம் அவருக்கு மட்டுமே உண்டு.

எனது நூறாவது பதிவு இது..

மொத்தத்தில் உருப்படியாய் எத்தனை பதிவு தேறும் எனத் தெரியவில்லை. இனிமேலாவது ஒழுங்காய் எழுதவேண்டும் என்ற வைராக்கியத்துடன்..

ஜெயக்குமார்

2 comments:

ஆயில்யன் said...

//ரஜினி ஒரு அறைக்குள் நுழையும்போது விளக்கை ஏற்றுவதில்லை, இருட்டை விரட்டி விடுகிறார்/

:))))))))))))

ஆயில்யன் said...

//இனிமேலாவது ஒழுங்காய் எழுதவேண்டும் என்ற வைராக்கியத்துடன்..//

அதான் தலைவர் எண்ட்ரீ போட்டாச்சுல்ல இனி எல்லாமே கலக்கல்தான் :)))