Friday, March 28, 2014

ஆம் ஆத்மியும், அதன் புது வேட்பாளரும்...




ஞாநியின் இட்லிவடைக்கான பேட்டியில் தெரிந்த ஒரே விஷயம் அரசியல்வாதியாகி விட்டால் யாரையும், எதையும் ஆதரிக்கும் தைரியமும், தலைவர் என்ன செய்தாலும் அதற்கான சப்பைகட்டும் கட்ட தெளிவும் வந்துவிடும் என்பதே.

ஞாநி சங்கரனைப் போன்றோர் அரசியலுக்கு வந்து முகமூடி இழப்பது நல்லது. அவரையெல்லாம் அறிவுஜீவி என சொல்வோர்களுக்காவது உண்மை புரியும்.

இன்னும் அவரை எல்லாவற்றுக்கும் கருத்துச் சொல்லும் அளவு ஞாநி என நம்பிக்கொண்டிருப்போருக்கும் ஒரு தெளிவு கிடைக்கும்.. இந்தாளையா நாம கருத்து கந்தசாமி என நினைத்துக்கொண்டிருந்தோம் என..

அந்தவகையில் ஞாநி சங்கரன் அரசியலுக்கு வந்ததை அன்புடன் வரவேற்கிறேன்.. 

---------------- 


 ட்ரெயின்ல போனா கேமெரா


சும்மா கைய பொடனியில கட்டிகிட்டு ஹாயா உக்காந்திருந்தா கேமெரா

ரோட்டுல உக்காந்தா, படுத்தா, நடந்தா கேமெரா,..

பல்லுவெளக்குனா, சாப்டா, கைகழுவுனா கேமெரா

நேத்தைக்கு காசியில குளிக்கிறாருன்னு ஒரு படம்..

அப்புறம் பட்டைய போட்டு அண்ணாமலை மாதிரி ஒரு படம்..

இன்னும் ரெண்டே ரெண்டு படம்தான் வரலை.. அதப்போட்டுட்டீங்கன்னா அர்விந்த கேசரிவாலு ஒரு முழு திறந்த புத்தகமா ஆகிருவாரு..

மீடியா மக்களே கொஞ்சம் பாத்துச் செய்யுங்க..


(26.03.2014 at Face Book)

No comments: