Tuesday, June 10, 2014

இந்து தீவிரவாதத்திற்கான வெற்றியா?

பெருமாள் தேவன் என்பவர் ஃபேஸ்புக்கில் எழுதியது.. மிக முக்கியமான கருத்தும் கூட..

இந்து தீவிரவாதத்திற்கான வெற்றியா? 

மத்தியில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் போலி மதச்சார்பின்மைக்கு, ஊழலுக்கு, மக்கள் மீது அக்கறையின்மைக்கு கிடைத்த மரண அடியாகும். 

இந்த ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியதில் இந்துக்கள் மட்டுமல்லாது இஸ்லாமியர், கிறிஸ்தவர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் என்று அனைவருக்கும் பங்குள்ளது. 

எனவே இந்து மதம் மீது பற்று வைத்துள்ளவர்கள் இந்த ஆட்சி மாற்றத்தை தங்களது தான்தோன்றித்தனமான செயல்களுக்கு பயன்படுத்தலாம் என்று நினைக்கக் கூடாது. பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். 

சிறுபான்மையினர் மீது தேவையில்லாமல் குற்றம்சாட்டவோ, காழ்ப்புணர்வுடன் நடந்துகொள்ளவோ தேவையில்லை. 

இல்லாவிட்டால் அதுவே மீண்டும் போலி மதச்சார்பின்மைவாதிகள் ஆட்சிக்கு வர வழிவகுக்கலாம்.

No comments: