Tuesday, June 10, 2014

விருமாண்டி (கமலின் மிகத்தேர்ந்த நடிப்பு)

விருமாண்டியில் கெளவி செத்த பிறகு புதைக்குறதுக்குள்ள கமலஹாசன் செய்யுற அளும்புக்கே இந்தப் படத்தை ஒரு 10 வாட்டி பாத்திருப்பேன்... கலக்கல் நடிப்பு..

கொத்தாளன் வீட்டுக்குள்ள நுழையும்போதே ஒப்பாரிக் கெளவி மாடவிளக்கேன்னு சுதி இல்லாம ஆரம்பிச்சிருது...

அப்டியே பேய்க்காமன் வந்து நிலத்தை நல்லமநாயக்கருக்கு கைமாத்தி விட பேச ஆரம்பிக்கிறது..

கமல்: தண்ணிய போட்டுட்டு சம்சாரம் வேனும்னு இருந்தா அவுசாரிட்ட போறேன் ..

கமல் (கழுத்தக் காட்டி) இந்த இங்கையும் ஒரு வெட்டு வெட்டிரு.. ஐயா சொன்னமாதிரி அப்பத்தா கூட குழியில எறங்கிர்ரேன்...

பேய்க்காமன்: அடக்கம் எங்க கெணத்துலையா? நம்ம வழக்கத்துலையே இல்லயேப்பா.. அப்பத்தா என்ன பிள்ளையாரா?

கமல்: அப்பத்தாள இந்த நெலத்துல பொதச்சா போலிஸ் என்ன கைது பன்னுமா? நீ என்னைய கைது பன்னுவியா?

கமல்: நல்லமநாயக்கனா இருந்தாலும் சரி.. கொத்தாள தேவனா இருந்தாலும் சரி,..

எங்க அப்பத்தா எனக்கு 5 சாமி கும்புடச் சொல்லி சொல்லிக்குடுத்திருக்கு.. நிலம் நீர் ஆகாசம் நெருப்பு காத்து... ஒரு சாமிய தப்ப விட்டாலும் பஞ்சம் வந்திரும்..

இங்க இருக்குற பணக்கார பயலுவல்லாம் ரத்தக்காட்டேரி மாதிரி தண்ண்ய உறிஞ்சி உறிஞ்சி இந்த வட்டாரத்துலையெ 250 அடில பம்பு செட்டு போட்டு உறிஞ்ச வேண்டியதா இருக்கே..



பெரிய மனுஷங்களா.. தப்பா பேசிட்டேன் .. மன்னிச்சிருங்கடா... 
( இந்த டயலாக் சொல்லும்போது கொத்தாளனும், நாயக்கரும் மண்டைய ஆட்டுறதும்..)

இங்கதான் வெவசாயம், போங்கடா... (இதச் சொன்னதும் தலையில அடிச்சிட்டு போறதும்.. )

(கெளவிய பொதைக்கிற குழியில தண்ணி வந்ததும்..) இது தண்ணி இல்லடா.. எங்க அப்பத்தா ரத்தம்டா என அழுவதும்,இந்த நெலத்த யாருக்கும் தரமாட்டண்டா எங்க அப்பாத்தா உடம்புடா என அழுவதும்...

நல்ல தமிழில் சொல்வதாய் இருந்தால் அமேசிங்.. சான்ஸே இல்லை..

உலக்க நாயகன் என அளும்பு செய்யும் கமலஹாசன் எப்பவாச்சும் இப்படி மனதை தொட்டு விடுகிறார்...

No comments: