Tuesday, June 10, 2014

கல்லுப்பட்டி எனும் தனி நாடு அல்லது மாநிலம்

இந்தியாவுல மாநிலங்கள் பிரியும்போது தமிழ்நாட்டில் எங்களுக்கு ஏன் தனி கல்லுப்பட்டி கூடாது?

எல்லைகள்...

குஞ்சுபட்டி குறுக்கு ரோடு கிழக்கெல்லை

தேவன்குறிச்சி கிராம குறுக்கு ரோடு மேற்கெல்லை

கொட்டாணிபட்டி தெற்கெல்லை

சோலபட்டி வடக்கெல்லையாக கொண்ட தனிக்கல்லுப்பட்டி நாடு அல்லது மாநிலம் அடைந்தே தீருவோம்..

ஊரின் சிறப்புகள்..

தண்ணீர் கிடையாது (மிக முக்கிய தகுதி)

உழுந்தவடை - அதன் தேசிய அடையாளம்

நன்னாரி சர்பத் - தேசிய பானம்

காக்கா - தேசிய பறவை

கருவேலம் - தேசிய மரம்

தனி மனித வருமானம் : 50 டாலர்கள் (ஆண்டுக்கு)

மக்கள் தொகை : 1 லட்சம் ( 2025ல்)

எங்களுடன் இணைந்துகொள்ள திருமங்கலம், மோதக்ம் சுப்புலாபுரம், காடநேரி, சத்திரப்பட்டி, வில்லூர், குண்டத்தூர், பேரையூர் ஆகிய ஊர்களையும் (மாநிலமாக ஆகாமல் இருக்கும் பட்சத்தில்) அழைப்போம்.

வாருங்கள் உறுதியான மாநிலம் அமைப்போம்.. 

இது தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் எனகோரிக்கை வைத்துள்ள மக்களை கிண்டல் செய்வதற்கு அல்ல என்பதை நீங்கள் உணர்ந்தே இருப்பீர்கள்..

---
ஜூன் 3, 2014ல் எழுதியது

No comments: