Sunday, November 24, 2013

துபாயின் சுவாரசியங்கள்..

எவ்வளவு ரூபாய் வேண்டுமென்றாலும் எந்த நாட்டுக்கும் ஹவலாவில் அனுப்பி வைக்க ஆட்கள் கிடைப்பார்கள். பெரும்பாலும் மலையாள, குஜராத்திய, பாகிஸ்தானிய, பங்களாதேஷ் ஏஜெண்டுகளாக இருப்பார்கள். அவர்களின் அலுவலக்ம் என்பது 10 க்கு 8 ல் இருக்கும். இரண்டு பணம் என்னும் மிஷினும், 2 கள்ள நோட்டா எனக் கண்டுபிடிக்கும் மெஷினும் வைத்திருப்பார்கள். நேர்மையும், குறித்த நேரத்தில் பணம் போய்ச் சேர்வதும் உத்திரவாதத்துடன் நடக்கும்.

உயர்ரக கார்களில் ( மெர்சிடிஸ், பென்ஸ், லெக்ஸஸ்போன்ற) சென்று எந்த ஹோட்டலில் நிறுத்தினாலும் அரைமணி நேரத்திற்குள் வெறும் மொபைல் நம்பரும், அந்த பெண்ணின் அரைநிர்வானப்படமும் போட்டு 5 விசிட்டிங் கார்டுகள் மஸ்ஸாஜ் எனப் பெயரிட்டு வைப்பரில் சொருகப்பட்டிருக்கும்.

எந்த எலெக்ரானிக் பொருளும் உடனே கிடைக்கும், அது உலகின் எந்த மூலையில் தயாரிக்கப்பட்டிருந்தாலும். இல்லையெனில் 24 மணி நேரத்தில் தருவித்துக் கொடுப்பார்கள்.

கிட்டத்தட்ட 150 நாடுகளைச் சேர்ந்த மக்கள் வாழ்ம் ஒரே இடம் அமீரகம். குறிப்பாய் துபாய்.

ஒருவேளை உணவை 5 திர்ஹாமிலிருந்து 5000 திர்ஹாம் வரை சாப்பிடலாம். அதுவும் அருகருகே. ( 1 திர்ஹாம் = 17.30 இந்திய ரூபாய்கள் இன்றைய நிலவரப்படி)

எல்லா விதமான போக்குவரத்து வசதிகளும் துபாயில் உண்டு. கார், பஸ், ரயில், ட்ராம், வாட்டர் டாக்ஸி, கப்பல், விமானம், ஹெலிகாப்டர், ஆம்பிபியன் வகை வாகனங்கள் எல்லாம்.

எந்தப் பொருளுக்கும் உலகின் எந்த நாட்டுத்தயாரிப்பும் கிடைக்கும்.

எல்லா நாட்டு மக்களுக்கும் அவரவர் நாட்டுப் பொருட்கள் விற்கும் கடை இருக்கும்.

உலகின் எல்லா நவ நாகரீக மங்கையரை துபாயில் மட்டுமே பார்க்கலாம்.

ஏழை, பனக்காரன் என்ற வித்யாசம் விமான நிலையத்தில் துவங்கி எல்லா இடத்திலும் பார்க்கலாம். ஒரே நாளில் விசா சம்பந்தப்பட்ட வேலைகளை கூடுதல் பணம் கொடுத்து முடிக்கலாம். நம்மூரில் லஞ்சம் கொடுத்துச் செய்தல்போல. ஆனால், இங்கே அரசாங்கமே கூடுதல் பணம் வாங்கிக்கொண்டு முடித்துக்கொடுக்கிறது.

அரபு நாடுகள் எல்லாம் பாலை நிலங்கள் என நம்பிக்கொண்டிருப்பவர்களுக்கு அப்படியே முற்றிலும் மாறான பிம்பத்தை துபாய் மட்டுமே அளிக்கும். பாலைவன நாட்டின் நடுவே ஸ்கீயிங் செய்ய இடமும், ஐஸ் ஸ்கேட்டிங்கும், மிகப்பெரிய மீன் தொட்டியும் இருப்பது வித்தியாசமாய் இருக்கும்.

காசிருந்தால் அம்மா அப்பா தவிர எதையும் வாங்கலாம் என்பது துபாயைப் பொருத்தவரை முற்றிலும் உண்மை.

எனது பார்வையில் பட்டதை எழுதி இருக்கிறேன். மற்ற அமீரக நண்பர்கள் பின்னூட்டத்தில் சொல்லலாம்.

No comments: