Sunday, November 24, 2013

இமாம் ஹுஸ்ஸைன் இறந்த நாள் மற்றும் கசப்பான சம்பவங்கள்

இமாம் ஹுசைனின் கொடியை இரண்டாக கிழித்து காலில் போட்டு மிதித்தவரை அடையாளம் கண்டுபிடித்து தர்ம அடி கொடுப்பதை வீடியோவாக்கி ஈரொநியூஸ் வெளியிட்டிருக்கிறது. 

இந்த பிரித்தானிய செக்யூரிட்டி அட்வைசரை கோபமான கும்பல் படுத்தும்பாடு காணசகிக்கவில்லை. ஆனால், ஒரு நாடே அவரது இறப்பை துக்கமாக அனுஷ்டித்துக்கொண்டிருக்கும்போது இப்படி அவமரியாதை செய்பவனுக்கு கிடைத்த தர்ம அடி அவன் செய்த புண்ணியம். இலையெனில் செத்து சுண்ணாம்பாகி இருப்பான் இந்நேரம். உன்மையில் அந்த கோபக்கார கும்பலிடமிருந்து அவனைக் காப்பாற்றுவதும் ஈராக்கியர்களே, அவர்களும் ஷியாக்களே.

இன்னும் 28 நாளில் அரபயீன் என அழைக்கப்படும் இமாம் ஹுசைனின் 40 ம்நாள் நினைவுதினம் வருகிறது. அதற்கு உலகம் முழுக்க ஷியாக்கள் 2 முதல் 3 மில்லியன் வரை குவிவார்கள்.

இந்த கசப்பான நிகழ்வு இப்படியே மறக்கப்பட்டுவிட்டால் நல்லது. இல்லையெனில் அடுத்து ஒரு வம்பு இருக்கிறது.

ஈராக்கிய பிரதமர் நூர் அல் மாலிக்கியும் இரு அமெரிக்க கம்பெணிகளையும், பிரித்தானிய கம்பெணியையும் ஒழுங்காக நடந்துகொள்ளும்படி அறிவுறுத்தி இருக்கிறார்.

நம்மூரில் குறிப்பாய் தமிழகத்தில் ராமாவமி ஆனாலும், விநயகர் சதுர்த்தி ஆனாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் நமது இந்து தெய்வங்களை. ஒருவர் கும்பிடும் தெய்வங்களை சட்டவிரோதமாக அவமதிப்பதும் நம்மூரில்மட்டும்தான் நடக்கும். அந்த கும்பல்களையும் தலைவன் என அழைத்து பின்னால் சொல்லும் கூட்டம் இருக்கிறது. அந்த மூர்க்கர்கள் கூட்டத்தில் மாநில முதலமைச்சரும் இருப்பதும் நம்மூரில்தான். ஈராக்போல எளிதில் உணர்ச்சிவயப்படும் சமூகமாய் இருந்திருந்தால் இந்தக்கூட்டம் இன்றைக்கு இருந்த இடம் தெரியாமல் ஓடி இருக்கும்.

இப்படி அவமதிப்பதை பொறுத்துக்கொள்ளுதல்கூட சுரனையற்ற தன்மையோ என எண்ணத்தூண்டுகிறது.

அரசாங்கமும், அதன் தலைவனும் பெரும்பான்மைக்கு எதிராக செயல்படுவது நம் நாட்டில் மட்டும்தான் நடக்கும் என நினைக்கிறேன்.

கடந்த சில நாட்களாக இந்த விஷயம் மனதைக் குடைந்துகொண்டே இருக்கிறது.

No comments: