Monday, December 28, 2015

பொறாமை பிடித்த காங்கிரஸ் Vs நரேந்திர மோதியும்

குண்டு துளைக்காத கூண்டிற்குள் நின்றுகொண்டு வீரவசனத்தையும் மென்று முழுங்கி் பேசிக்கொண்டிருந்த காங்கிரஸ்காரனுக்கு, அப்படியெல்லாம் இல்லாமல் தைரியமாய் என் நாட்டிற்குள் வந்து எவனடா என்னை என்ன செய்துவிடுவான் என தைரியமாய் திறந்த மேடையில் நின்று தேசியக்கொடியை ஏற்றும் நரேந்திரமோடியைக் கண்டால் பொறாமை வருவதும்...
அமெரிக்கா சென்று சொன்ன இடத்தில் கையெழுத்து போட்டுவிட்டு, கொடுத்த சாப்பாட்டை தின்றுவிட்டு அமெரிக்க அதிபரிடம் ஆட்டோகிராஃப் வாங்கி நாட்டை கேவலப்படுத்திய காங்கிரஸ்காரனுக்கு நீங்க சொல்ற இடத்திலெல்லாம் கையெழுத்து போட முடியாது, நாங்க சொல்றமாதிரி மாத்துங்க என ஆண்மையுடன் சொல்லும் நரேந்திர மோதியைக் கண்டால் பொறாமை ஊறுவதும்...
10 ஆண்டுகளாக பாக்கிஸ்தானை எதிர்த்து அறிக்கை விடுவதுகூட சிறுபான்மையின முஸ்லிம்களின் ஓட்டு வங்கியை பாதிக்குமோ என நம் நாட்டின் ராணுவ வீரர்களை சாகடிக்க விட்டு வேடிக்கை பார்த்த காங்கிரஸுக்கு, ஒரு குண்டு நம் எல்லையில் வீழ்ந்தால் 30 குண்டுகளை பாக்கிஸ்தானை நோக்கி செலுத்த உத்தரவிடும் நரேந்திரமோதியைக்கண்டால் பொறாமை வருவதும்..
ராஜதந்திரம் என்றால் கட்சித்தலைவியின் முந்தானையை பிடித்துக்கொண்டு அந்தம்மாள் சொல்லும் உளரல்களைக்கேட்டு நடந்து கொள்வதுதான் என இருக்கும் காங்கிரஸ்காரனுக்கு, உண்மையான ராஜரீக நடவடிக்கைகள் நாட்டில் நடப்பதைக்கண்டால் பொறாமை வருவதும் இயற்கையே..
உன் நாட்டிற்குள் நட்புடன் வருகிறேன் எனச் சொல்லிவிட்டு எதிரி நாட்டுக்குள் காலைவைக்கும் தைரியம் வேண்டும், அதையெல்லாம் மோடியை அகற்ற உதவி செய்யுங்கள் எனக்கேட்கும் மூளையற்ற, பதவி வெறி பிடித்த காங்கிரஸ்காரன் மூளைக்கு எட்டாத விஷயங்கள்..
எனவே அவர்களின் கட்சித்தலைவி சொல்வதைக் கேட்டுக்கொண்டு மீடியாவில் உளரிக்கொட்டுவதே அவர்கள் இப்போதைக்கு செய்ய வேண்டிய முக்கியமான பணி.
அதைச் செய்யுங்கள் காங்கிரஸ் கட்சியின் அடிமைகளே....

No comments: