Monday, December 28, 2015

திருமாவளவன் சாதிவெறி பேச்சு





ஒரு சமூகம் முட்டிமோதி மேலெழ உறுதுனையாய் இருக்கவேண்டியது அந்த ஜாதி அல்லது ஜாதிகளின் கூட்டமைப்பின் தலைவர்கள். அவர்களுக்கு நல்ல வழிகாட்டியாய், எப்படி உயரவேண்டும் என்பதற்கு தன்னையே எடுத்துக்காட்டய் கொள்ளுமளவு வாழ்ந்து காட்டுதல் அச்சாதியினரை முன்னேற்ற உதவும்.
ஆனால், நாம் பார்க்கும் தலைவர்கள் ஜாதிக்கட்சியின் தலைவராய் தன்னை முன்னிறுத்திக்கொண்டு, அந்தச் சமூகத்தை குறித்து என்னென்ன குற்றச்சாட்டுகள் பொதுவில் உண்டோ அத்தனையையும் மெய்ப்பிக்கும் விதமாக மேடையில் கைதட்டலுக்காக பேசி இதர சமூகத்தினரிலிருந்து அந்நியப்படுத்தும் வேலையை கனகச்சிதமாக செய்கின்றனர்.
இந்தச் செய்கையை நான் நல்லா இருந்தா போதும், என்னை நம்பி வருபவர்கள் அழிந்தாலும் பரவாயில்லை என நினைக்கும் எண்ணம் கொண்ட தலைவர்கள் மட்டுமே செய்வர்.
இன்றைய எடுத்துக்காட்டு தொல்.திருமாவளவன்,
உண்மையில் தலித் சகோதரர்கள் இப்படிப்பட்ட தலைவர்களை நம்பி தங்கள் வாழ்க்கையையே இழந்துகொண்டிருக்கின்றனர்.
இனியேனும் நல்ல தலைவர்களை தேடாமல் அச்சமூகத்திலிருந்தே தன் சமூகத்தை காட்டிக்கொடுக்காத, பிற கட்சியினரிடம், பிற சமூகத்திடம் அடகு வைக்காத தலைவர்கள் உருவாவதே ஒரே வழி.
தொல்.திருமாவளவனின் வீடியோ கிடைத்ததால் நாம் இதை பேசுகிறோம். இதைப்போல இன்னும் யார் யாரெல்லாம் தங்கள் சமூகத்தை இவ்வாறாக “வழிநடத்தி”க்கொண்டிருக்கிறார்களோ...அவர்களுக்கே வெளிச்சம்.


No comments: