Monday, December 28, 2015

பாக்கிஸ்தானில் இரு வல்லவர்கள்

யு டியூபில் பார்த்தால் பாக்கிஸ்தான் டீவிக்களில் இந்தியா குறித்து நடந்த விவாதங்களில் 90 சதவீதம் நரேந்திர மோதியின் நல்லாட்சியை மரியாதையாக பார்ப்பதும், அதே சமயம் என்ன செய்வார் என்றே அனுமானிக்க முடியாத ஆள் என நரேந்திர மோதியைக் குறித்தும், அஜித் டோவல் என்ற மிகப்பெரிய எதிரி என்னென்ன செய்ய காத்திருக்கிறானோ என விவாதிப்பதுமே நிறைய கிடைக்கும்.
பாக்கிஸ்தான் மக்களுக்கும், பயங்கரவாத குழுக்களுக்கும், பாக்கிஸ்தானிய ராணுவத்திற்கும் அஜித் டோவல் மட்டும் கையில் கிடைத்தால் பச்சையாக தின்றுவிடும் அளவு வெறியேற்றப்பட்டிருக்கிறது. ஏனெனில், இந்தியாவில் பல பல்கலைக்கழகங்களிலும், கூட்டங்களிலும் பாக்கிஸ்தானுக்கு நேரடியாகவே எச்சரிக்கை விடுக்கிறார். அதிலும் குறிப்பாய் நீ என்னவெல்லாம் எனக்கு செய்கிறாயோ அதையெல்லாம் உனக்கும் செய்வோம், அதற்கு மேலும் செய்வோம் என பேசுகிறார்.
பாக்கிஸ்தானுக்கு சவாலாக “ மும்பையில் நடத்தியது போன்ற தாக்குதலை இன்னொருமுறை செய்து பார், நீ பலுச்சிஸ்தானத்தை இழப்பாய்” எனச் சொல்கிறார்.
இன்றைக்கு பாக்கிஸ்தானுக்கு சென்ற இருவர் யாரென பார்த்தால் நரேந்திர மோதியும், அஜித் டோவலும்தான். smile emoticon
எதிராளியின் குகைக்குள் சென்று எதிரியின் பிடறியை பிடித்து ஆட்டுவதென்பது இதுதான். ஆனால், எதிரிக்கும் நம் பிடறியை பிடித்து ஆட்டுகிறார்கள் என்பதே தெரியாமல் செய்துவிட்டு வந்திருக்கிறார்கள் இருவரும்..
ஒருசில பாக்கிஸ்தானிகள் மிகச்சரியாக பிடித்துவிட்டார்கள், இந்த விஷயத்தை.
இந்தியா வழக்கம்போல அட்டகாசமாக திட்டமிட்டு நவாஸ் ஷெரிப்புக்கு ஏர்போர்ட்டுக்கு வந்து அழைத்துச் செல்ல சம்மன் அனுப்பி அதில் வெற்றியும்கண்டிருக்கிறது என்கிறது ஒரு டிவீட்.
அதுதான் காங்கிரஸ் கட்சிக்கு எரிச்சலும், பொறாமையும்.

No comments: