Thursday, January 22, 2015

ஸ்டிக்கர் பொட்டு Vs குங்கும பொட்டு

 டிஸ்கி 1 : கடவுள் என்பதும், கனவன் என்பதும் வெறும் கற்பிதங்கள் என்ற முற்போக்குகள் அதே போக்கில் செல்லும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

டிஸ்கி 2 : தினமும் நாலுவாட்டி தலைவாரவே நேரமில்லை, இதுல போய் குங்குமப்பொட்டாம்ல என்பவரும் தாண்டிச் சென்றுவிடவும் 

டிஸ்கி 3 : குங்குமப் பொட்டு வைப்பதால் மதச்சார்பின்மை கெட்டுவிடும் என்ற அளவில் மதச்சார்பின்மை கடைப்பிடிப்பு மஹாத்மாக்களும் ஓடிவிடலாம்

கலர் கலராக ஸ்டிக்கர் பொட்டு வைக்கும் நவயுக மங்கைகளுக்கு தெரியுமா? 80களில் ஸ்டிக்கர் பொட்டு செய்யும் செயற்கை துணியில் ஹேண்ட்பேக்கும், காலணிகளும் வந்து சக்கைப்போடு போட்டது என்பது? அப்போது பேக் மற்றும் செருப்பு செய்து மிச்சம் இருந்த துணியில் ஸ்டிக்கராக செய்து நெற்றியில் ஒட்டிக்கொள்ள வசதியாக பசையை தடவி மார்கெட்டுக்கு அனுப்பினர். குழந்தைகளும் போடும் உடைகளுக்கு பொருத்தமாக இந்த ஸ்டிக்கர்களை விளையாட்டாக அணிந்து திரிந்தனர். 

தினமும் மூன்று, நான்குமுறை இறைவனையும், கணவரையும் நினைத்து குங்கும பொட்டு வைத்துக்கொண்டிருந்த மங்கையர் திலகங்கள் இந்த ஸ்டிக்கர் பொட்டை ஒருமுறை வைத்தால் போதும். குளித்தால்கூட கவலையில்லை, அழியாது என்ற வசதியை மட்டும் கருத்தில் கொண்டு இந்த ஸ்டிக்கர் பொட்டுக்கு மாறினர். 

தேவை அதிகரிக்கவும் செருப்பு செய்து விற்றுக்கொண்டிருந்தவர்கள் முழுநேரத்தொழிலாக ஸ்டிக்கர் பொட்டு வியாபாரம் செய்ய ஆரம்பித்துவிட்டனர். குங்குமம் தரும் மஞ்சள் மற்றும் தாழம்பூ மணத்தை அனுபவிக்காமல் இப்படி செயற்கை பொருட்களின் பின்னால் செல்ல சோம்பேறித்தனம் மட்டுமே காரனம் என நான் நினைக்கிறேன். 

ஆகாத போகாத 100 பொருட்கள் ஹேண்ட்பேக்கில் உங்களுடன் ஊரெல்லாம் உலா வரும்போது சிறிய குங்குமப் பொட்டும் கூட வந்தால் என்ன ஆகிவிடும்? பாரம்பரியத்திற்காகவும், குங்குமம் தரும் மகிழ்ச்சிக்காகவும் இன்றும் குங்குமம் அணிவோருக்கு என் வணக்கங்கள். 

உங்கள் குலம் பெருகுவதாக.. __/\__

No comments: