Friday, January 9, 2015

மேற்குலகை குறைசொல்லும் இஸ்லாமியருக்கு ஒரு பாக்கிஸ்தானியின் பதில்

மேற்கைப் பற்றி குறைகூறும் பாக்கிஸ்தானிய டீவியினருக்கு சரியான செருப்படி தருகிறார் இந்த ஹஸ்ஸன் நிஸார். 

பாக்கிஸ்தானிகளுக்கு இஸ்லாமிய நாடுகளில் முக்கியத்துவமே இல்லையா எனக் கேட்கிறார்.. ஹஸ்ஸன் நிஸ்ஸார் :- சிம்பாலிக் முக்கியத்துவம் கூட கிடையாது. அல்லா மன்னிக்கட்டும், இஸ்லாமியர்களைப் பற்றி பேசுவதை விடுங்கள். 

எந்த இஸ்லாமிய நாட்டிலும் சென்று எந்த முஸ்லிமும் சொத்து பத்து வாங்க இயலாது. அந்த நாட்டு குடியுரிமை வாங்க இயலாது. அந்த நாட்டு பெண்களை திருமணம் செய்ய இயலாது தனது பெயரில் தொழில் செய்ய இயலாது 

மேற்குலகிற்குச் சென்று மேற்சொன்ன அனைத்தையும் செய்கிறீர்கள், செய்ய இயலும். அந்த நாட்டு குழந்தைகளை திருமணம் செய்துகொள்கிறீர்கள், அந்த நாட்டு நாட்டுகாரனாக (நீ) இல்லாமலிருந்தபோதும்.. அந்த குழந்தைகள் உங்களுடன் இணைந்தும் விடுகின்றன அங்கே சென்று தொழில் செய்கிறீர்கள், இதன் பின்னரும் உங்களுக்கு வெட்கமாக இருப்பதில்லை.. (மேற்குலகை குறைசொல்ல) 

இன்றைக்கு இஸ்லாமிய நாடுகள் எனச் சொல்லப்படும் நாடுகளில் சென்று முகத்தைக் காட்டித்தான் பாருங்களேன்.. எந்த நாடு என ஏன் பெயர் சொல்ல வேண்டும்?,நான் என்ன சொல்றேன்னு உனக்கு விஷயம் புரியுதில்லையா? மரியாதையை முழுதும் அழித்து விடுகின்றனர்.. காஃபில் என்ற பெயரில் எவனாவது ஒருவனின் கீழே உன்னைச் சேர்த்து விடுகின்றனர்..கொஞ்ச நாளில் வியாபாரம் நன்றாக ஆனபின்னர் அவன் உன்னை வெளியே தள்ளி விடுவான்.. இதெல்லாம் நீ ”உம்மா” என அழைக்கும் நாடுகள்தான் செய்கின்றன. அவர்கள் நேற்றுவரை பிச்சையெடுத்துக்கொண்டிருந்தவர்கள்தான். 

பாக்கிஸ்தான் சுதந்திரம் பெறும் முன்னர் பிச்சைக்காரர்களைப்போல இங்கு வந்துகொண்டிருந்தனர். பெட்ரோல் கிடைக்க ஆரம்பித்ததும்.... அதுவும், பெட்ரோலையும் யார் எடுத்தார்கள்? யார் சொன்னா இந்த இடத்திலிருந்தும், இந்த சகதியிலிருந்தும் இத்தனை பொருட்களை (பெட்ரோலிய) செய்ய முடியும் என? இதன் பயன் இதுவென? எந்த ”உம்மா” சொன்னான்? (இப்படி காசு வந்ததும்) ஆங், நூத்துல ஒன்னு ரெண்டு நல்லவன் இருக்கலாம், 30, 40 வருஷமா வேலை செய்றான் அந்த நாட்டுல, (பாக்கிஸ்தானிகள்) ஆனா, குடியுரிமை கிடையாது..(இத்தனை ஆண்டுகள் அங்கிருந்த பின்னரும்) தனது பெயரில் தொழில் செய்ய இயலாது.. தனது பெயரில் சொத்து வாங்க இயலாது.. காஃபில் இல்லாமல் உனது சொந்த பெயரில் வங்கிக்கணக்கு ( தொழில் செய்ய) கூட தொடங்க இயலாது.. உங்களுக்கு வெட்கமாக இல்லையா, மேற்கை குறை சொல்லிப் பேசுவதற்கு? உங்களுக்காக கதவை அகலத்திறந்து வைத்துக்கொண்டு, வாருங்கள், இங்கே வந்து பிழைத்துக்கொள்ளுங்கள் என (சொல்பவனைப்பார்த்து) என்ன செய்யனுமோ இங்கே செய் எனச் சொல்பவனைப் பார்த்து.. (மேற்கின் பெண்களை) பெண்களை எக்ஸ்ப்ளாயிட் செய்தாலும் அவர்களுடன் திருமணம் செய்துகொண்டு, நாட்டின் குடியுரிமையைப் பெற்றபின்னர் அவர்களை விவாகரத்து செய்தாலும் என்ன தொழிலும் செய்தாலும்.. ஃப்ராடுத்தனம்கூட செய்தாலும்.. அவர்கள் (உங்களை உள்ளே வரவேண்டாம் எனச் சொல்லி) கதவை மூடுவதில்லை.. 

இதுல பெரிய ஜோக் என்னன்னா, அவங்க சாப்பிடுற விஷயங்களில் இருந்து நாற்றம் ஏதும் அடிப்பதில்லை. ஆனால், நம்மாட்கள் அங்கே சென்று பெருநகரங்களில் சமைத்து, துப்பி ஊரையே நாறடித்தாலும் உங்களுக்கு அவர்கள் வாசலை காண்பிப்பதில்லை, மாறாக உங்களை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். அரவு உலகில் இருப்போர்களுக்கு வசதி வாய்ப்புகளுக்கு என்ன குறை? அவர்கள் ஏன் பத்திருபது லட்சம் பாக்கிஸ்தானியர்களுக்கு இடமளிப்பதில்லை? அவர்களுக்கு தெரியும் அங்கே இடமளித்தால் ஆனியடித்தாற்போல உட்கார்ந்துவிடுவார்கள் என.. 

உம்மா (Ummah) - நாடு அல்லது தேசம் --------------- மனசாட்சியுடன் பேசும் ஒரு பாக்கிஸ்தானியை நீண்ட நாட்களுக்கு பிறகு பார்க்கிறேன். 

No comments: