Wednesday, August 19, 2015

ஈராக்கும் இந்திய சுதந்திரமும்

ஈரான் எல்லையை ஒட்டிய சிறு கிராமம் அபுல் கசீஃப்.
இரு வீடுகளுக்குள் சண்டை.
ஒருவர் எப்போதும் சட்டையை கழற்றிவிட்டு டவுசருடன் மைனர் போல சுற்றி இருக்கிறார், அதை எதிர் வீட்டுக்காரர் பெண்கள் இருக்கும் பகுதியில் இப்படி சுற்றாதே என பலமுறை சொல்லி இருக்கிறேன் மீண்டு செய்கிறாயா என கோபத்தில் கேட்க, அப்படித்தான் செய்வேன், முடிஞ்சதை செய்துகொள் என்பதுதான் சண்டைக்கு காரனம்.
இப்போது அது இரு இனக்குழுக்களுக்கான சண்டையாகி நேற்று இரு ஜாதியினரும் துப்பாக்கியால் சண்டையிட மாடியில் காயப்போட்ட துணியை எடுக்கச் சென்ற சம்பந்தமே இல்லாத பெண் பலி.
இப்போது இந்த சண்டை மூன்று இனக்குழுக்களுக்கு என மாறியுள்ளது.
சுதந்திரம் அடைஞ்சி என்னகிடைத்தது எனக் கேட்போர்களுக்கு, இப்படி காட்டுமிராண்டி கூட்டம்போல ஆகாததும், நாம் வாழ விரும்பும் வகையில் வாழ முடிவதும், நம் பாதுகாப்பை அரசு உறுதி செய்திருப்பதும் ஆகும்.
நம் வீட்டருகில் குண்டு வந்து விழும்வரையோ, குடும்பத்தில் யார் தலையிலாவது துப்பாக்கி குண்டு வெடிக்கும்வரைக்கும் என்னத்த பெருசா சுதந்திரம் வாங்கிட்டோம் எனக் கேட்டுக்கொண்டுதான் இருப்போம்.
ஏனெனில் சுதந்திரம் இல்லாத வாழ்க்கையை நாம் வாழ்ந்ததில்லை என்பதால் நமக்கு அதன் அருமைகள் புரிவதில்லை.

No comments: