Thursday, April 21, 2011

சில எண்ணங்கள் ( நாவரசு, மன்மோகன் மற்றும் அண்ணா ஹசாரே )

நாவரசுவை ஜான் டேவிட் கொலை செய்தது உண்மைதான், அவனுக்கு இரட்டை ஆயுள் தண்டனைதான் சரி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. தற்போது ஜான் டேவிட் ஆஸ்திரேலியாவில் இருப்பதாக் தெரிகிறது. அதுவும் எப்படி, கிறிஸ்தவ மத போதகராக. இந்தியாவில் கொடூரக் கொலை செய்துவிட்டு ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்று அங்கு யேசுவின் கருணையையும், அன்பையும் ஆஸ்திரேலியர்களுக்கு போதிப்பான் போல.


முதலில் ஜான் டேவிட்டுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தபோது முழுக்க முழுக்க ”யேசுவின் கருணை”யால் என்றான் அந்தக் கொலைகாரன். இப்போது அந்த யேசு கருணையற்றவர்போல. இப்படி ஒரு தீர்ப்பு வரும் முன்னரே நாட்டை விட்டு ஓடியிருக்கிறான்.


முதலில் சாதகமாக தீர்ப்பு வரும்படி ஆதாரங்களை சரியாக சமர்ப்பிக்காத போலீசுக்கு என்ன தண்டனை? அவனது பாஸ்போர்ட்டை கேஸ் முடியும்வரை முடக்க உத்தரவிடத நீதிபதிகளுக்கு என்ன தண்டனை?


இவ்வளவு தாமதித்த தீர்ப்பு வந்தும் தனது மகனைக் கொன்றவன் தண்டனையிலிருந்து தப்பித்து ஓடியிருக்கிறானே என புலம்பும் நாவரசுவின் பெற்றோருக்கு யார், எப்படி ஆறுதல் சொல்வார்கள்?

செத்தது இந்து என்பதாலும், கொலையாளி சிறுபான்மையினத்தைச் சேர்ந்த கிறிஸ்தவன் என்பதாலும் இனி பிரதமரின் ராத்தூக்கம் பறிபோகுமே, அதையெல்லாம் தாண்டி எப்படி ஜான்டேவிட்டை இந்தியா கொண்டுவந்து தீர்ப்பை நிறைவேற்றப்போகிறது காவல்துறையும், நீதித்துறையும்?


தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி என்றார் அண்ணல் காந்தியடிகள். இன்றைக்கு தாமதித்தோடல்லாமல், குற்றவாளியை தப்பிக்கவும் விட்டு அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதியை முழுதும் மறுத்து விட்டது, .



எப்போதும் எதற்காகவாவது எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டெ இருக்கும் இந்து முன்ணனி மனதைத் தொடும் ஒரு நல்ல காரியம் செய்திருக்கிறது.


கீழே உள்ள படத்திற்கு விளக்கம் தேவையில்லை.




கணையாழி மீண்டும் வந்திருக்கிறது.சுஜாதாவின் கணையாழியின் கடைசிப் பக்கங்கள் மூலமே கணையாழி என்ற ஒரு புத்தகம் இருப்பதை தெரிந்துகொண்டவன் நான்.


புதிய இதழில் எஸ்.ராவின் புத்தனாவது சுலபமும், இமையம் எழுதிய எது இலக்கியம், எது தலித் இலக்கியம் கட்டுரையும் அருமை.


அண்ணா ஹசாரேவின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஜெயமோகன் எழுதிய இந்த இரு பதிவுகளும் ( அண்ணா ஹஸாரே 1 & அண்ணா ஹஸாரே 2 முக்கியமானவை. எனது முந்தைய பதிவிற்கு முற்றிலும் வேறுபட்ட கருத்தை ஜெயமோகனின் கருத்துக்கள் கொண்டிருந்தாலும் மிகவும் கவர்ந்தன இப்பதிவுகள். இன்னும் தெளிவாய், தீர்க்கமாய் எடுத்துச் சொல்கிறார், ஜெயமோகன்.



எஸ்.ராவிற்கு அவரது யாமம் நாவலுக்காக தாகூர் இலக்கிய விருது கிடைத்திருக்கிறது. அவருக்கு வாழ்த்துக்கள். அவரது புத்தனாவது சுலபம் சிறுகதை புதிதாக வெளிவந்திருக்கும் கணையாழியில் வந்திருக்கிறது. அருமையான சிறுகதை. பதின்மவயதில் இருக்கும் ஆண் குழந்தைகள் குறித்த தகப்பனின் பார்வையும், தாயின் பார்வையும்.



மே 13 வரையில் நகத்தைக் கடித்து துப்பிக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கு ஒரு வேண்டுகோள். பாரதீய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையில் ஆட்சியைப் பிடிக்கும் என்றெல்லாம் கனவு காண்பதில்லை நான். எனவே அடுத்து யார் வந்தாலும் தயவு செய்து இலவசங்களை நிறுத்தி வேலைவாய்ப்பை பெருக்குங்கள். உங்களிடம் பிச்சை வாங்காமலேயே தமிழக மக்கள் வாழ்ந்துகொண்டுதானிருந்தனர். நீங்கள் கொள்ளை அடிப்பதற்காக மக்களுக்கு இலவசம் என்ற பெயரில் பிச்சை இடுவதால் ஒரு சமூகமே இலவசங்கள் பின்னால் அலையும் கூட்டமாக மாற்றியிருக்கிறீர்கள். இனிமேலாவது உங்களுக்காக மட்டும் சிந்திக்காமல் மக்களுக்காகவும் சிந்தியுங்கள்.



இஸ்ரோவின் சமீபத்திய சாதனை பி.எஸ்.எல்.வி-சி16 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவி அதை சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தியும் விட்டது.


நமது விஞ்ஞானிகளை வாழ்த்துவோம். ஆனால் வழக்கம்போல சோனியாவின் ஜால்ரா சோனியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் வேலை செய்தால் கிடைக்கும் மரியாதையையும், கைநிறையக்கிடைக்கும் பணத்தையும் உதறிவிட்டு நாட்டுக்காக உழைக்கும் இந்திய விஞ்ஞானிகள் எங்கே? இந்தியாவையே அடகுவைக்கும் சோனியா எங்கே? இவர்களது உழைப்பிற்கு சோனியாவுக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் ஈனர்கள்தான் நாட்டைக்கெடுக்கும் கயவர்கள்.


ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை துணிச்சலுடன் மேற்கொள்ள மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.

மன்மோகன்சிங் தவிர வேறுயாருக்கும் இப்படிச் சொல்ல ஒரு தைரியம் வராது. இதுவரை ஊழலுக்கு எதிராக துணிச்சலுடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என ஒப்புதல் வாக்குமூலம் தரவும் ஒரு தைரியம் வேண்டும். அப்படியே சுப்ரமணியசாமி உங்களின் தங்கத்தலைவி மீது வழக்கு நடத்த அனுமதி கேட்டு அனுப்பிய கடிதத்திற்கு ஒப்புதல் அளித்து முதல் துணிச்சலைக் காட்டுங்கள். மடியில் கனம் இல்லையெனில் என்ன பயம்?


மீண்டும் சந்திப்போம்..

No comments: