Wednesday, April 13, 2011

தமிழ்ப் புத்தாண்டு மற்றும் அம்பேத்கர் ஜெயந்தி வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு( ஸ்ரீ கர )நல்வாழ்த்துக்கள். இந்த இனிய நாளில் எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் என வாழ்த்தி, உலகில் அமைதியும், உலகெங்கும் வாழும் தமிழர்களின் வாழ்வு செழிக்கவேண்டும் எனவும் மனமார வாழ்த்துகிறேன்.

கருணாநிதி காலம் உள்ளளவும் தனது பெயர் நிலைப்பதற்காகச் செய்த கோமாளித்தனம் தை முதல்நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்தது. அந்த ஆண்டுமுதலே யாரும் கடைப்பிடிக்காமல் போய் காலம் உள்ளவரை அவருக்கு இந்த கிறுக்குத்தனத்தைச் செய்தவர் என்ற பெயர் நிலைபெற்றுவிட்டது.

உலகத் தமிழர்கள் அனவைரும் செய்யவேண்டிய மிக முக்கியமான கடமை தனது அடுத்த தலைமுறைக்கு தமிழை கடத்துவது. இது ஒரு தலையாய கடமை என எண்ணிச் செயல்பட வேண்டும். இல்லையெனில் தமிழ் மெல்லச் சாகாது.. வெகு சீக்கிரம் சாகும்..

தமிழ் புத்தாண்டைத் தவிர இன்றைக்கு அண்ணல் போதிசத்வ அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினமும் கூட. எனவே அம்பேத்கர் ஜெயந்தி வாழ்த்துக்களும்.

ஹிந்துத்துவம் என்பது எந்த அளவு மேல்சாதி என தம்மை நினைக்கும் இந்துக்களுக்கு சொந்தமோ அதே அளவு தாழ்த்தப்பட்ட இந்துக்களுக்கும் சொந்தம் என்று சொன்னவர்.



எல்லா நலன்களும் தமிழகத்திலும், இந்தியாவிலும் இருக்கும் அனைவருக்கும் கிட்டுவதாக.

No comments: