Sunday, April 17, 2011

மந்திரத்தில் மழை பெய்யுமா? பெய்திருக்கிறது கேரளத்தில்..

அதிராத்ர மஹா யாகத்தால் கேரளத்தில் மழை.

வெயில் கொழுத்தும் நாளில், நட்சத்திரம் மிகுந்த இரவொன்றில் காற்றுடன் கூடிய மழை பொழிந்தால் எப்படி இருக்கும்? கேரளாவில் பாஞ்சல் என்ற இடத்தில் இப்படி ஒரு அதிசயம் நடந்திருக்கிறது. ஆனால் மழை சாதாரனமாக வராமல் வரவைக்கப்பட்டுள்ளது. அதுதான் இதில் விசேஷம்.

அன்றைய இரவில் கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் நம்பமுடியாத ஆச்சரியத்தில் மூழ்கினர். நட்சத்திரம் மிகுந்த இரவில் திடீரென காற்றும், பின்னர் மழையும் பெய்தால் எப்படி ஆச்சரியப்படாமல் இருக்க முடியும்?

கேரளத்தில் பாஞ்சல் என்ற இடத்தில் சமீபத்தில் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் கலந்துகொண்ட அதிராத்ர மஹா யாகம் நடைபெற்றது. 12 நாட்கள் நடக்கும் இந்த அதிராத்ர மஹா யாகம் உலக அமைதிக்காகவும், தூய்மைப்படுத்தலுக்கும், விளைச்சல் பெருகவும், நலன்கள் பெருகவும், மழைபொழியவும் வேண்டி செய்யப்படுவது. 2011 ஏப்ரல் மாதம் நான்காம் தேதியிலிருந்து நடத்தப்பட்ட இந்த யாகத்தால் பாஞ்சலைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், கொச்சி மற்றும் திருச்சூர் அருகிலும் அதன் சுற்றுப்புறத்தைச் சேர்ந்த பகுதிகளிலும் கனத்த மழை பெய்திருக்கிறது.

மழை பெய்த இரவு வானம் நட்சத்திரங்களுடன் காணப்பட்டதாம். பொதுவாக நட்சத்திரங்கள் இருக்கும் இரவுகளில் மழை பெய்வதில்லை. ஊரில் மழை மீண்டும் வருமா என்பதற்கு அடையாளம் வெள்ளி வந்திருச்சா பாரு எனச் சொல்வதுதான். வெள்ளி வந்துவிட்டது எனில் மழை நின்றுவிட்டது எனப் பொருள். ஆனால் நட்சத்திரம் மிகுந்த இரவில் பெய்த இந்த மழை வேத உச்சாடனத்தாலும், ஹோமப்புகையின் மூலமும் உருவாக்கப்பட்ட அலைகளினாலும் ("The rain was caused by the strong convection current generated by the smoke rising from the altar and the continuous chanting of the mantras,")தருவிக்கப்பட்டது என்கிறார் இந்த யாகத்தை நடத்தும் வி.பி.என் நம்பூதிரி என்பவர். இவர் கொச்சி சர்வகலா சாலையின் முன்னாள் ஆராய்ச்சியாளர். தொழில் மற்றும் ஆராய்ச்சி கூட்டமைப்பின் முக்கியமான விஞ்ஞானியும் ஆவார்.

4000 ஆண்டுகள் பழமையான இந்த யாகத்தால் பெய்த முதல் மழைத்துளியை நேரடியாகக் கண்ட 2 லட்சம் மக்கள் கைதட்டல் ஓசையின் மூலம் மழையை வரவேற்றனர்.
காற்றும், மழையும் யாகசாலை குண்டங்களை நனைத்துச் சென்றுவிட்டது. அப்படி ஒரு மழை. இதற்குக் காரணம் மிகப்பழமையான அதிராத்ரம் என்ற அக்கினி யாகம்.

மழை பெய்த அன்று காலையிலிருந்தே கொளுத்தும் வெயிலாக இருந்ததாகவும், காற்று மிகவும் வறட்சியாக இருந்ததாக்வும் குறிப்பிடுகின்றனர். அப்படிப்பட்ட ஒரு நாளின் இரவில் காற்றுடன் கூடிய மழை பெய்தது அந்தப்பகுதி மக்களை ஆச்சரியம் அடையச் செய்ததுடன், இந்த யாகத்தால் ஏற்படும் நல்விளைவுகளைக் குறித்து அறிந்தும் கொண்டனர்.

1901, 1918, 1956, மற்றும் 1975ல் இதே போன்று யாகம் செய்து மழையை தருவித்தது போன்றே இந்த ஆண்டும் செய்திருப்பதாக நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.


தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தி இது

அதிராத்ரம் குறித்து அறிந்து கொள்ள ஒரு தளம் இது


ஒருமுறை சென்னையில் தண்ணீர் பஞ்சம் வந்த போது, புழல் ஏரியில் நின்னு வயலின் வாசிச்சார் குன்னக்குடி வைத்தியநாதன்! ஓரளவு மேகம் திரண்டு, மழையும் பெய்தது! அமிர்தவர்ஷினி ராகம் வாசித்தார் அன்று.

No comments: