Wednesday, December 31, 2014

மோதியும் நிருபரும்..(குஜராத் கலவரத்தை முன்வைத்து)

இவரும் அரசியல்வாதிதான்.. மாநில முதலமைச்சர்தான்.. இவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது.. எங்கேயும் ஓடி ஒளியவில்லை. அவசியமின்றி வாய்தா எதுவும் கேட்கவில்லை. வழக்கை முழுமையாக சந்தித்தார். அவரை முழுதும் வீழ்த்திவிட அனைத்து விதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு, பொய்சாட்சிகளை வைத்து இல்லாததும் பொல்லாததும் சொல்ல வைத்தனர். அத்தனையையும் உண்மையால் வென்று மோதி குற்றமற்றவர் என உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். மக்களும் அவரை பிரதமர் ஆக்கினார்கள். அதன் பின்னரும் இந்த காசுக்கு குரைக்கும் மீடியா நாய்கள் விடாமல் அவரை துரத்துவது நடந்துகொண்டுதான் இருந்தது. 

அந்த நேரத்தில் ஒரு நிருபர் அப்ரண்டீஸ் மிகப்பெருந்தன்மையாக நடந்து கொள்ள அறிவுரை சொல்வதாக நினைத்து “ போனது போகட்டும், நடந்ததற்கு மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன், மேலும் முன்னேறுவோம் என நீங்கள் ஏன் சொல்லக்கூடாது என மோடியைப் பார்த்துக்கேட்கிறார்.. 

அதற்கு மோடியின் பதில்...(ஆங்கிலத்தில்) நான் ஏதும் தவறு செய்திருந்தால் எனக்கு தண்டனை வேண்டும். ஒரு படி மேலேயே கேட்கிறேன்.. மேலும், இந்தியாவில் குற்றவாளிகளுக்கு வாய்ப்பளிக்காதீர்கள். அவர்களுக்கு தண்டனை கொடுங்கள். (இதன் பின்னர் ஹிந்தியில் பேசியது) மோதி தவறிழைத்திருந்தால், மோதிக்கு தண்டனை கிடைக்க வேண்டும். நீங்கள் ஏன் இந்த பாவிக்கு மன்னிப்பு வழங்கப்பார்க்கிறீர்கள் எனப்புரியவில்லை.அதில் உங்களுக்கு என்ன லாபம்? மோதியை ஏன் மன்னிக்கிறீர்கள்? நிச்சயம் (மன்னிக்க)கூடாது. மோதிக்கு தீர்ப்பு வழங்க வேண்டும். 125 கோடிப்பேர் பார்க்க இந்த ஆள் இப்படிப்பட்ட குற்றங்கள் இழைத்தார், அதனால் இந்த தண்டனை கிடைத்துள்ளது (எனத்தெரியும்படி தண்டனை வாங்கிக் கொடுங்கள்) அடுத்து வரும் 100 ஆண்டுகளுக்கு இன்னொருவர் இப்படி தப்பு செய்யாதபடிக்கு அப்படி செய்யுங்கப்பா...இப்படி மோதியை மன்னிக்கிற வேலையையெல்லாம் செய்துகொண்டிருக்காதீர்கள்.. நேராகவே சொல்கிறேன். இப்படிப்பட்ட வேலையைச் செய்யாதீர்கள். (அதற்கு பதிலாக) என்.டி.டி.வியுடன் கைகோர்த்து மோதிக்கு தண்டனை வாங்கிக்கொடுக்க பிரச்சாரம் செய்யுங்கள், அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். 




 இந்தியாவுல எத்தனை அரசியல்வாதிகளுக்குய்யா இந்த தில்லும், திமிரும், முதுகெலும்பும் இருக்கு? இவருக்கு இந்த தில்லும், திமிரும், முதுகெலும்புள்ளவனின் பதிலுமாக இருக்க காரனம் மடியில் கனமில்லை என்பதால் வழியில் பயமில்லை. 

No comments: