Thursday, December 25, 2014

வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது.

வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது..(தமிழ்நாட்டுலதான்) உலகின் எந்தக் கம்பெணி தொழில் தொடங்க வந்தாலும் அது சென்னையைத்தாண்டுவதில்லை.. அதிகபட்சம் திருச்சி தெற்கு தமிழகத்தில் குடிக்க தண்ணீரோ, மின்சாரமோ இல்லையெனில் கேட்க நாதியில்லை.. ஆனால், வடக்கிலோ கிட்டத்தட்ட 24 மணிநேர குடிநீர், தடையற்ற மின்சாரம். தென் தமிழகத்தில் விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்க வக்கில்லை, ஆனால் வடக்கு தமிழகத்தில் ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் மற்றும் ஆடம்பர விழாக்கள் நடத்த தடையில்லா மும்முனை மின்சாரம். சிங்காரச் சென்னையாம், ஆனால் மதுரை மட்டும் இன்னும் அதே குப்பைக்கூளங்களுடன். கட்சித்தலைமைகள் பலத்தைக் காட்டனுமா, ஓடு மதுரைக்கு.. புதுக்கட்சி ஆரம்பிக்கனுமா, ஓடு மதுரைக்கு.. புதுப்படம் ரிலீசானா ரிசல்ட் தெரியனுமா, மதுரையைக் கேளு,. புதுசா செய்தித்தாள் ஆரம்பிக்கனுமா, ஓடு மதுரைக்கு ஆனா, கரண்டு, தடையில்லா குடிநீர், அமைதியான சூழல், சட்டம் ஒழுங்குக்கு தெந்தமிழக மக்கள் சாலைக்கு வந்தாலும் மதுரைக்கு ஒன்றும் ஆவதில்லை. எனவே, திருச்சி மற்றும் திருச்சிக்கு தெற்கே உள்ள தமிழகத்தை மதுரை நாடு என பிரித்து வழங்கவேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். இவன், மாமதுரை நாட்டினர் (இது நகைச்சுவை பதிவல்ல.. )

No comments: