Tuesday, December 30, 2014

தமிழக முக்கிய செய்திகள். (நவம்பர் 2014)


01. நாடாளும் மக்கள் கட்சியின் பல லட்சம் தொண்டர்களுடன் காங்கிரஸில் இணைந்த கார்த்திக்கால் தமிழக அரசியல் நிலவரமே மாறிவிட்டதாகவும், அவரை அதிமுக, திமுக இரண்டும் தங்கள் கூட்டணியில் இணைய வ்ரும்படி தூது அனுப்பி இருப்பதாக கழுகார் / ஆந்தையார் / பூனையார் / எலியார் / பன்றியார் தெரிவிக்கின்றனர்.

02. வாசன் தனிக்கட்சி தொடங்கியதால் காங்கிரஸின் கோஷ்டிகளில் ஒன்று குறைந்ததாக காங்கிரஸ் கோஷ்டி மேய்ப்புக்குழு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. இனி அவர் தனிக்கட்சி கோஷ்டி என்ற பிரிவின் கீழ் செயல்படுவார் என காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது. 

03. பாஜகவின் தமிழிசை சவுந்தர்ராஜன் புதுக்கட்சி வரவேற்புக்குழு தலைவராக தன்னிச்சையாக நியமித்தது செல்லாது என அறிவித்துள்ளது, தமிழக தமிழிசை எதிர்ப்புப்பிரிவு பாஜக. 

04. கரடியே காரித்துப்பிய கட்சிகளில் தாங்களே முடலிடம் என திமுகவும் ( பாமக மற்றும் மதிமுக கரடிகள் துப்பியதால்) நாங்களே என பாஜகவும் ( வாசன் கரடி துப்பியதால்) அறிவித்துள்ளன. 

05. மக்கள் முதல்வரே இன்னும் ஆட்சியில் இருப்பதாகவும் தமிழக முதல்வர் என்ற பதவி இன்னும் உருவாக்கப்படவில்லை என்றும் ஏஜென்ஸியை மேற்கோள் காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன. 

06. அதிமுக தாடி வளர்ப்புக்குழுவின் தலைவராக திரு.ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளதாக நமது எம்ஜிஆர் செய்தி வெளியிட்டுள்ளது. 

07. நானே 2016ல் முதல்வர் என்ற சுப்ரமணியசாமியின் அறிவிப்பால் தமிழக பாஜக கோஷ்டிகள் ஒன்றிணைய வாய்ப்புள்ளதாகவும், அப்படி ஒன்று நிகழ வேண்டும் என்ற எண்ணத்திலேயே சு.சாமியை அமித்ஷா தூண்டிவிட்டதாகவும் டெல்லியில் இருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

08. நாம் தம்ப்ளர், நாம் டபரா கட்சியும் தாங்களே முதல்வர் என்றும், டெபாசிட் கிடைக்கும் நிலை ஏற்பட்டால் மக்கள் முதல்வராக செயல்படுவோம் என சைமன் அறிவித்துள்ளார். 

09. அரசியல் அநாதைகளாக தாங்கள் ஆனதற்கு திராவிடக் கட்சிகளே காரணம் என தாவீது பாண்டியன் அறிவித்துள்ளார், இருப்பினும் கோபாலபுரத்திலும், போயஸ் கார்டனிலும் ஒற்றர்களை அமைத்துள்ளதாகவும் கதவு திறந்தால் உடனே பாய்ந்து உள்ளே செல்லும்படியும் உத்தரவிட்டுள்ளதாகவும் செங்கதிர் செய்தி வெளியிட்டுள்ளது. 

10. யாருக்கு ஆதரவாக அறிக்கை விடுவது என விடுதலை உணர்வுடன் சிந்திப்பதாக வீரமணி அறிக்கை விடுத்துள்ளார். 

11. இன்றைய தமிழக அரசியல் சூழ்நிலையில் ”லட்சிய திராவிட முன்னேற்றக்கழக”த்தை புறக்கனித்துவிட்டு யாரும் ஆட்சியமைக்க முடியாது எனப்பாட்டுப்பாடி பேட்டி கொடுத்துள்ளார் டி.ராஜேந்தர். இதைச் சொல்லும்போது ராஜேந்தர் கண்ணீர் மல்க நின்றிருந்ததாகவும், என்னசார் தனியா நின்னு அழுதுட்டு இருக்கீங்க? என்று கேட்ட நிருபரிடம் How do you say, I am alone, I am a Green Tamilan, do you know? How do you say that I am alone,, ? இறுதியாக தமிழண்டா, தமிழண்டா, தமிழன் தமிழன் எனப் பல்வேறு மாடுலேஷன்களில் சொன்னதாக புதிய பறவை செய்தியாளர் அவரது பிளாக்கில் எழுதியுள்ளார். 11. 2016 நம்ம கையிலே, சந்திப்போம்டா தோளா நம்ம சட்ட சபையில என குருவி, கத்தி நடிகரும், ஜாதிவாரியாக உள்ள நடிகர்கள் அனைவரும் சொல்லி இருப்பதையும் தமிழகம் உன்னிப்பாக கவனித்து வருவதாக கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார். 

12. சமீபத்திய ஜாதி அரசியல் கட்சிகள் வெளியிட்ட மக்கள் தொகை எண்ணிக்கையை கூட்டிப்பார்த்த தமிழக மக்கள் தொகைக்கணக்கெடுப்பு குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். ஜாதிக்கட்சிகளின் கணக்குப்படி தமிழகத்தில் கிட்டத்தட்ட 70 கோடி மக்கள்தொகை இருப்பது தெரிய வந்துள்ளது. 

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தது.. வணக்கம்

No comments: