Sunday, December 28, 2014

வைகோவின் அரசியல் நிலைப்பாடுகள்..

ஐந்து இந்திய மீனவர்கள் கைதும், விடுதலையும் இலங்கை மற்றும் இந்திய அரசும் போடும் நாடகம்.. வைகோ. (12.11.2014)

வைகோ போன்றோர் எதற்காக அரசியலில் இருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை. திமுகவில் இருக்கும்போதும், வெளி வந்தபோதும், தனிக்கட்சி தொடங்கியபோதும், கட்சி பாக்கியில்லாமல் மாற்றி மாற்றி கூட்டணி அமைத்தபோதும், நீங்கள் செய்ததற்கு பெயர் என்ன மிஸ்டர் வைகோ? 

ஒரு கூட்டணியில் சேரும்போது சம்பந்தப்பட்ட கட்சித்தலைவரை இந்திரன், சந்திரன் என புகழ்வதும், வெளியேறியவுடன் ஒருமையில் பேசுவதும் என்ன வகையான நாடகம் வைகோ? சுயநினைவுள்ள ஒருவன் செய்யும் காரியங்களா நீங்கள் செய்வது.? 

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது இந்திய மீனவர்கள் அனுதினமும் செத்துக்கொண்டிருந்தபோதும், கைதாகிக்கொண்டிருந்தபோதும் வெற்றுக்கூச்சல்களையே உங்களால் போட முடிந்தது. கையாலாகாமல் பார்த்துக்கொண்டிருந்தீர்கள். 

இன்றைக்கு மத்தியில் அமைந்துள்ள பாஜக அரசின் கொள்கையால் மீனவர்கள் கைதாவது நின்றும், சுடப்படுவதும், சூறையாடப்படுவதும் நின்றபின்னரும் மத்திய அரசாங்கத்தையும், மோதி ஜியையும் வாய்க்கு வந்தபடி பேசுவது யாரைக்குளிர்விக்க? விசா கொடுங்கள், நாங்கள் சென்று அழைத்து வருகிறோம் எனச் சொல்கிறீர்களே, கைதானவர்கள் அங்கே அவர்களின் பாட்டி வீட்டில் அமர்ந்திருப்பதாக நினைக்கிறீர்களா? 

இலங்கைத்தமிழர் குறித்து உங்களைப்போன்றவர்கள் வாய் திறக்காமல் இருப்பதே அங்குள்ளவர்களுக்கு நல்லது எனவும், இங்கு இருக்கும் இலங்கை அதிகளை திருப்பி அனுப்புங்கள் என திரு.விக்னேஸ்வரன் கேட்கும் அளவில் இருப்பதே இந்தியாவில இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுப்பதாக சொல்லும் மக்களின் லட்சனத்தைச் சொல்லும். 

கைது செய்யப்பட்டுள்ள ஐவரும் போதை மருந்து கடத்திய குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டோர். உண்மையோ, பொய்யோ, ஆனால் கைதுசெய்திருப்பது ஒரு அரசாங்கம், வழக்கு நடந்து அளிக்கப்பட்ட தீர்ப்பு. இருப்பினும் பொது மன்னிப்பு வாங்கித்தரும் அளவு இந்தியாவுக்கு செல்வாக்கு இருக்கிறது, இது தவறான முன்னுதாரனத்தை ஆரம்பித்து வைக்கும் என்றாலும் எனக்கு மீனவர்கள் திரும்புவதில் மகிழ்ச்சியே. 

இன்றைய சூழலில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய நிலையில் இருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். உங்களிடம் இருக்கும் பெரும் செல்வம் நல்ல தமிழ். அதைக்கொண்டு தமிழகத்தில் தமிழை வளர்க்க பாடுபடுங்கள். தமிழின் உன்னதங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். வெற்றுக்கூச்சலை நம்பி ஓட்டுப்போடும் கூட்டமல்ல இன்றைய தமிழ் மக்கள் என்பதை உணர்ந்தால் உங்களுக்கு நல்லது. 

You have lost all your respect and credibility Mr.Vaiko, please go home.... and save your face. People are not as foolish as you think. Need an example? see your election results and political journey.. You have been continuously thrown in the corner for more than a decade.

12.11.2014ல் ஃபேஸ்புக்கில் எழுதியது.

No comments: