Tuesday, December 23, 2014

ஆண்டாள் கிளியின் கண்கள் - ராமச்சந்திரன் உஷா

மத்திய கிழக்கு வாழ்க்கை அல்லது ”காக்காப்பொன்” 

மத்திய கிழக்கு நாடுகளில் பெரிய கம்பெனிகளின் கேம்புகளில் ஆயிரக்கணக்கில் ஆட்கள் தங்கி இருப்பார்கள், பல அடுக்குகளில். அப்படிப்பட்ட கேம்புகளில் அவ்வப்போது கேள்விப்படும் விஷயமாக / முதுகுக்கு பின்னால் பேசும் விஷயமாக இருக்கும் இது. ஊர்ல இருந்து வந்து ஒருவருஷத்துக்கு மேல ஆகப்போகுது, குழந்த பொறந்துருக்குனு லட்டு தாராண்டா என லட்டு கொடுத்தவனை கேவலமாக பேசும் கும்பல் உண்டு. 

என்னுடன் வேலை பார்த்த ஒருவனின் மனைவியைப்பற்றி மிக மோசமாக வதந்திகள் உலவவிடப்பட்டதுண்டு. இத்தனைக்கும் அவனுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை 1 மாதம் லீவ் என்று வேலைபார்த்தவன் / ஊருக்கு சென்று வருபவன். 

வெளிநாட்டில் வேலைபார்ப்பதாலேயே ஆடம்பரமாக இருக்க நினைப்போரின் சிக்கல்கள், போலி பெருமை எல்லாம் தொட்டுச் செல்கிறார். 

”ஆண்டாள் கிளியின் கண்கள்” என்ற தலைப்பில் Ramachandran Usha எழுதி தினகரன் - வசந்தம் இதழில் வெளிவந்த தொடர் மத்திய கிழக்கில் வாழும் பலருக்கு நெருக்கமானதாக தோன்றும். 

”அவனுக்கென்னடா, வெளிநாட்டுல சம்பாதிக்கிறான்” என உள்ளூரில் இருந்துகொண்டு பேசும் நண்பர்களுக்கும் மத்திய கிழக்கில் இருப்போரின் வலி புரிய வாய்ப்பிருக்கும் என நினைக்கிறேன். 

இரு பகுதிகளுக்குத்தான் பதிந்திருந்தார். மீதமுள்ளதை விரைவில் பகிர்வார் என நம்புகிறேன். ஆண்டாள் கிளியின் கண்கள் - முதல் பாகம் 

ஆண்டாள் கிளியின் கண்கள் - இரண்டாம் பாகம் 

No comments: