Thursday, April 16, 2015

ஞாநி எனும் அஞ்ஞாநிக்கு ஒரு கேள்வி

எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாம்...
எங்கள் தலைமுறையின் ”ஞாநி”(?)யாம்....
சமூக நீதிக்காக குரல் கொடுக்கும் பார்ப்பனராம், (சட்டைக்குள் நெளியுது பூணூல் என கட்டுரை எழுதப்பட்டு கௌரவிக்கப்பட்டவர்)
அணு விஞ்ஞானியாம்....
கடுகில் இருந்து கக்கூஸ் வரைக்கும் எதற்கும் கருத்துச் சொல்லும் அறிவுச்சுடராம்...
”ஞாநி” என்ற சங்கரனுக்கு கருங்குளம் மா முருகன் என்பவர் ஒரு கேள்வி கேட்டிருக்கிறார், மழுப்பாமல் பதில் சொல்ல முடியுமா ஞாநி என தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் ஞானசூன்யத்திற்கு?
கருத்துச்சுதந்திரம் குறித்து காதுகிழியப்பேசும் இந்த ஞாநி சங்கரன் தன்னை ஃபேஸ்புக்கில் எதிர்த்து எவன் கேள்வி கேட்டாலும் ”பிளாக் பாண்டி”யாக மாறி வாயை அடைக்கும் கருத்து புர்ச்சிவாதி..
இன்னும் இந்தாளெல்லாம் கருத்துச் சொல்லி நாலுபேர் கேக்குறான்னா, சமூகம் போகவேண்டிய தூரம் எவ்வளவோ இருக்கு.
சில முட்டாள்கள் பெரியார் படத்துக்கு மூத்திராபிஷேகம் செய்கிறார்கள். 93 வயதிலும் மூத்திரம் போகக் குழாய் வைத்தப் பையைக் கூட தூக்கிக் கொண்டு கடைசி வரை சமூக நீதிக்காக பிரசாரம் செய்த பெரியாருக்கு மூத்திராபிஷேகம் செய்தாலும் அவருக்குப் பெருமைதான். உங்கள் பாலாபிஷேகம் சந்தனாபிஷேகங்களை விட ! சமூக இழிவைப் போக்க உழைப்பவர்களுக்கு வேறு எதுவும் இழிவாகாது.
-ஞாநி சங்கரன்
# நாத்திகர்களைப் பொருத்தவரை காலாதீத மெய்ப் பேரறிவுப் பேரின்பப் பேருணர்வாம் பிரபஞ்ச பேரான்மாவோ அதன் பகுதியாய் பெருங்கடலின் பேரலை போன்ற ஜீவ ஆன்மாவோ இல்லை எனும் போது வெறும் காகிதமான ஈவெரா படத்திற்கு சிறு நீர் குளியல் செய்வித்தது எப்படி என்றோ இறந்து போன ஈவெராவை அவமதிப்பதாகும்..?
எந்த ஆத்திகனும் கருங்கல் சிலையே ஐம்பொன் சிலையே என்று வழிபடுவதில்லை..எங்கும் நிறைந்த கால தேச வர்தமானங்களைக் கடந்த மெய்ப் பேரறிவுப் பேருணர்வையே ஒரு உருவில் வரித்து வழிபடுகிறான்...
அவன் வழிபடுவது கல் எனக் கூறி செருப்பால் அடிப்பதை நியாயப் படுத்திய ஈனர்கள் ஈவெரா சிலைகளும் படங்களும் கல்லும் காகிதமும் தானே என்பதை ஏன் ஒத்துக் கொள்ள மறுக்கிறார்கள்.?
கடவுள் இருந்தால் கடவுள் விக்ரகத்தை செருப்பால் அடிக்கும் போது வந்து தடுக்கட்டும் என்றவர்கள் வெறும் காகிதத்தை ஈவெரா எனக் கூறுவீர்களானால் அந்த ஈவெரா வந்து இப்போது தடுக்கட்டும் என்று மூத்ராபிஷேகம் செய்பவன் கேட்க மாட்டானா..?

No comments: