Tuesday, October 2, 2007

சீன போரில் இந்தியாவின் தோல்விக்கு காரனங்கள்

எத்தனையோ பேரு சொன்ன விஷயந்தான்னாலும் நாமளே படிச்ச பின்னாடி அத பத்தி தெரியாதவங்களுக்கு சொல்றதுதான முறை.. அய்யய்யோ உங்களுக்கு இது பத்தி எல்லாம் தெரியாது தெரிஞ்சுக்கங்க அப்டின்லாம் நான் சொல்லல.. படிச்சேன் புதுசா இருந்துச்சே உங்களுக்கும் தெரியட்டுமே அப்படினுதான் இந்த பதிவு..

முதல்ல என்ன காரனம் சன்டைக்கு:-

சன்டை நடந்து 45 வருஷம் ஆன பின்னாடி கூட நிறைய பேருக்கு ஏன் சன்டை, என்ன காரனம் ஏன் தோத்தோம் அப்படின்னு இன்னும் சரியாத்தெரியாது..

எல்லாரும் என்ன நெனச்சுக்கிட்டிருக்கோம்னா சீனா நம்மள நம்ப வச்சு கழுத்த அறுத்துருச்சு அல்லது நம்பிக்கை துரோகம் செஞ்சுருச்சு அப்படின்னுதான்..

ஆனா, நெலமயோ வேற மாதிரி..

நம்ம அப்போதைய பிரதம மந்திரி ஜவஹர்லால் நேருவும், ராணுவ மந்திரி வி.கே.கிருஷ்ன மேனனும் இந்த பிரசினைய ராஜாங்க ரீதியா அவங்க ரெண்டுபேரும் தீத்துரலாம்னு நம்புனதுதான்..

அதேபோல உளவுதுறை அதிகாரி திரு.முல்லிக்கும் கூட எந்த பிரச்சினை வந்தாலும் சீனா நம்மள தாக்காதுன்னு ஒரு தவறான தகவலை அப்போதைய பிரதமருக்கும் ராணுவ மந்திரிக்கும் குடுத்ததும் கூட காரனம்...

இது தவிர முக்கியமான காரனமா இந்த 3 விஷயத்த சொல்ராங்க...

1. சீனா இந்தியாவ வடகிழக்குலயும் லடாக் பகுதியலயும் நம்மள தாக்காதுன்னு ஒரு தப்பு கணக்கு போட்டது.

02. சரியான உபகரனங்களோ , ஆயுதமோ அல்லது தயார் நிலையோ இல்லாம இந்திய ராணுவம் இருந்தது இரண்டாவது காரனம்...

03. எங்கே இந்தியா திபெத்த வளைச்சு போட்டுருமோன்னு சீனா பயந்தது மூனாவது காரனம்..

லால்பஹதுர் சாஸ்திரி 1962 பெப்ரவரி 4 ல் "சீனா ஆக்கிரமித்துள்ள இடங்களை விட்டு வெளியேற வேண்டும்.. இல்லையெனில் கோவாவில் நடந்தது போல மீண்டும் நடக்கும்" என்று முழங்கினார்..

1962 அக்டோபர் 12ல் நேரு " சீனர்களை தூக்கி எறியுங்கள் என இந்திய ராணுவத்திற்கு கட்டளை இட்டார்..

ஆனால் உன்மை நிலவரம் வேறு மாதிரி இருந்தது...

அன்றைய நிலைமையில் இந்தியா சீனாவிற்க்கு எதிராக வெல்ல முடியாது என்பதே நிலை.

சீனர்கள் மலைப்பிரதேச சண்டையில் அதிக தேர்ச்சி பெற்றவர்களாயிருந்ததும் நம்மிடம் சரியான திட்டமிடல், அரசியல் தொலைநோக்கு, இல்லாமை எதிரியின் பலம் என்னவென்று தெரியாமல் நமது ராணுவத்தை ஒரு தீராப்பழிக்கு ஆட்படுத்தியதும், நமது நிலப்பரப்பை நாம் இழந்ததும்தான் மிச்சமானது....

அருனாச்சல் எங்களுடையது என்கிறது சீனா..

திபேத்தை ஏற்கனவே தனது கட்டுப்பாட்டில்தான் வைத்திருக்கிறது..

இப்படியே போனால்?????

முழு விவரமும் ஆங்கிலத்தில் படிக்க இங்கே சொடுக்கவும்...

http://www.ndtv.com/convergence/ndtv/showcolumns.aspx?id=COLEN20070022560

இது எனது முதல் பதிவு... உங்கள் கருத்துக்களை எனக்கு எழுதுங்கள்.. என்னை வளர்த்துக்கொள்ள உதவும்...


2 comments:

ஹரன்பிரசன்னா said...

பின்னால் இருக்கும் கருமை நிறத்தை மாற்றவும். எழுத்துப் பிழைகள் (ணக்கு பதில் ன போன்றவை) மாற்றிவிட்டுப் பதியவும்.

கானகம் said...

ப்ரசன்னா உங்கள் வருகைக்கும் அறிவுரைகளுக்கும் நன்றி. தொடர்ந்து கன்கானியுங்கள்..