Thursday, September 30, 2010

ராமஜென்மபூமி தீர்ப்பு குறித்துபரம பூஜனீய சர்சங்கசாலக் ஸ்ரீ.மோகன் பாகவத் அவர்களின் அறிக்கை

அலகாபாத் உயர்நீதி மன்றம் அயோத்தி ஸ்ரீ ராமஜன்ம பூமி சம்பந்தப்பட்ட தாவாவில் வழங்கிய தீர்ப்பு பற்றி பரம பூஜனீய சர்சங்கசாலக் ஸ்ரீ.மோகன் பாகவத் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை.
ஸ்ரீராமஜன்ம பூமிக்காக எழுந்த நியாயமான வாதங்களை முன் வைத்து அலகாபாத் நீதி மன்றம் 2010 செப்டம்பர் 30௦ அன்று அளித்துள்ள தீர்ப்பானது மரியாதா புருஷோத்தமன் ஸ்ரீராமன் மீதும் அவரின் ஜன்ம பூமியான அயோத்யாவின் மீதும் பாரத மக்கள் அனைவரும் வைத்துள்ள உயர்ந்த பக்த்திக்கும் உரிய மரியாதைக்கும் கிடைத்துள்ள அங்கீகாரமாகும். நீதிபதிகள், வழக்கறிஞர்கள், இந்த நியாயமான போராட்டத்திற்காக ஒத்துழைத்தவர்கள் பங்கேற்றவர்கள் ஸ்ரீராமஜன்ம பூமி அறப் போராட்டத்தில் தலைமை ஏற்று போராட்டம் நடத்திய சாதுக்கள், இப்போராட்டத்தில் பங்கேற்ற பொது மக்கள் என அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். ஸ்ரீராமஜன்ம பூமி அறப் போராட்டங்களில் பங்கு கொண்டு உயிர் நீத்த தியாகிகள், கரசேவகர்கள் என அனைவருக்கும் மிகப் புனிதமான ஸ்ரத்தாஞ்சலிகளை அர்ப்பணம் செய்கிறோம்.
ஆலயம் அமைக்க வேண்டும் என்பது இந்த தேசத்தின் தன்மானத்தின், பக்தியின், சுதந்திர வேட்கையின் கௌரவமான அடையாளங்களாகும். பாரத நாட்டில் சனாதன தர்மத்திற்கும் சமநோக்கு சிந்தனைக்கும் எல்லோரிடத்திலும் உள்ளார்ந்த அன்பு, பொறுமை, பண்பாட்டிற்கும் உரிய மகத்துவமான உதாரணம்தான் ஸ்ரீராமன். ஆலயம் நிர்மானிக்கப்பட வேண்டும் என்பது எதோ ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை விரோதிக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் எழுந்தது அல்ல. ஆகவே ஸ்ரீராமஜன்ம பூமியில் மரியாதா புருஷோத்தமன் ஸ்ரீராமனுக்கு ஆலயம் எழுப்ப நீதிமன்றம் நிர்ணயம் செய்து காட்டிய வழியானது சமுதாயத்தின் எந்தப் பிரிவினருக்கும் வெற்றி தோல்வியை ஏற்படுத்தியது என்ற எண்ணம் ஏற்படலாகாது.
நமது மகிழ்ச்சியின் வெளிப்பாட்டை கட்டுக்கோப்புடன் அமையுடன் நீதியை நியாயத்தை மதிக்கும் விதமாக தேவையற்ற உணர்ச்சிகளை அடக்கி அமைதியான முறையில் வெளிப்படுத்த வேண்டும். தேசப்பண் பாட்டிற்கு உரிய பொறுமையுடனும் சமநோக்கு சிந்தனையுடனும் பழைய நிகழ்வுகளை மறந்து ஒரு புனிதமான லட்சிய உணர்வின் அடிப்படையிலும் மொழி, கலாசாரம் மற்றும் இயற்கை அமைப்பில் இருக்கின்ற பல வேற்றுமைகளை மறந்து சமுதாய ஒற்றுமைக்கு முக்கியத்துவம் அளித்து இனபேதமில்லாத சமுகம் உருவாக்க ஒரு சந்தர்ப்பம் இன்று நமக்கு வாய்த்துள்ளது.
ஆகவே இத்தருணத்தில் இந்த தேசத்தில் வாழும் முஸ்லிம்களும் மற்றும் அனைத்து சமுதாயத்தினருக்கும் இதய பூர்வமான வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் பல ஆண்டுகளாக நம்மிடையே ஏற்பட்டிருக்கிற கசப்புணர்வுகளை மறந்து நீதிமன்றம் காட்டிய நியாயமான பாதையை ஏற்றுக்கொண்டு ஸ்ரீராமஜன்ம பூமியில் மரியாதா புருஷோத்தமன் ஸ்ரீராமனுக்கு அழகான அற்புதமான ஆலயம் எழுப்பிட நியாயத்தின் அடிப்படையிலும் செயலாக்கத்தின் அடிப்படையிலும் நாம் அனைவரும் ஒன்று திரண்டு செயல்படுவோம்.

3 comments:

எல் கே said...

nalla arikkai., intha thelivu matravagalukku illaye

கானகம் said...

எல்.கே வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நீங்கள் சொல்வதும் உண்மைதான்

snkm said...

அருமையான அறிக்கை! ஹிந்து தர்மத்தின் கொள்கைகளை வெளிப் படுத்தும் விதமாக அறிக்கை அமைந்துள்ளது! விரைவில் ஸ்ரீ ராமரின் ஆலயம் மக்கள் கண்களுக்கு தெரியும் விதத்தில் வெளிப்படட்டும்! நன்றி!