Thursday, September 9, 2010

மலர்மன்னனின் தி.மு.க உருவானது ஏன்?


அறிஞர் என திராவிட கட்சித் தலைவர்களாலும், தொண்டர்களாலும் அழைக்கப்படுபவரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனருமான சி.என்.அண்ணாத்துரையைப் பற்றி அவரது தீவிர விசுவாசிகளில்ஒருவரான மலர்மன்னன் எழுதியிருக்கும் புத்தகம் தி.மு.க உருவானது ஏன்?

திராவிடக் கட்சிகளின் தாய்க் கட்சியாக திராவிடர் கழகத்தைச் சொல்வார்கள்.. அதிலிருந்து பிரிந்தது தி.மு.க,

தி.மு.கவிலிருந்து பிறந்தது அ.தி.மு.க. மற்றும் ம.தி.மு.க.

மற்ற இதர பிரிவுகளுக்குக் காரணமான முதல் பிரிவான தி.க விலிருந்து, தி.மு.க உருவானதற்கான காரணங்களைச் சொல்லி அதன் வரலாற்றை பதிவு செய்கிறார்.

மிக முக்கிய காரணங்களாக மலர்மன்னன் சொல்வது

01. பரம வைரியான ராஜாஜியுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு கட்சியின் நிதியை தனது நிதியாக்கிக் கொண்டது, அதாவது சாவியை அண்ணாத்துரையிடம் கொடுப்பதாக மேடையில் சொல்லிவிட்டு, பெட்டியை தனதாக்கிக் கொண்டது.

02. இதுவரை ஊருக்குச் செய்துவந்த உபதேசத்துக்கு மாறாக தனது முதிய வயதில் ஈ.வே.ராமசாமி பொருந்தாத் திருமணம் செய்துகொண்டது.

03. கருஞ்சட்டை அணிய வற்புறுத்தியதும், முரட்டுப் பிடிவாதத்துடன், யாரையும் அனுசரித்துப் போகாத்தனத்துடன் இருந்ததும்...

04. அண்ணாத்துரை தன்னைக் கொல்ல முயற்சிப்பதாக ஈ.வே.ரா குற்றம் சாட்டியதும்..

தமிழகத்தின் முக்கிய பிராந்தியக் கட்சியான தி.மு.க, வைப் பற்றி 70களில் எங்களைப் போன்ற சிறுவர்களுக்கு கருணாநிதி கட்சி என்ற அளவில்தான் தெரியும்.

இன்றும் தி.மு.க என்றதும் நம் நினைவுக்கு வருவது கருணாநிதிதான்.

ஆனால் அவரைப் பறிய சிறுகுறிப்புகூட இல்லாத அவரது கட்சியைப் பற்றிய புத்தகம் இது.

ஏன் இப்படி? ஏனெனில் தி.மு.க உருவானபோது கருணாநிதி என்பவர் தலைவர்கள் பட்டியலில் எந்த இடத்திலும் இல்லை என்பதே உண்மை.

ஆனால் அதை உருவாக்கியதில் ஈடுபட்ட அனைவரையும் பின்தள்ளி இன்று தி.மு.க என்றாலே கருணாநிதிதான் என்ற அளவிற்கு கட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது கருணாநிதியின் சாதனை.

நான் சிறுவனாய் இருந்த காலகட்டத்தில் வழக்கமாக தி.மு.கவின் பிரச்சாரக்கூட்டங்களில் ஈ.வே.ராமசாமி, அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோர் கொண்ட படங்கள் இருக்கும். இன்று கருணாநிதி தவிர்த்த இரு இடங்களையும் இதர போட்டோக்கள் அலங்கரிக்கின்றன.

பள்ளியில் படிக்கும் காலத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் உருவாகியிருந்தது. எனது இளமைக்காலம் எப்போதும் தி.மு.கவைப் பற்றிய எதிர்மறை விமர்சனங்களையே கேட்டு வளர்ந்திருக்கிறேன். எங்கள் தெருவின் பொதுக்கழிப்பிடச் சுவற்றில் பல ஆண்டுகள் இருந்த வாசகம் இன்றும் மனதைவிட்டு அகலாதிருக்கிறது.

கருணாநிதி ஆட்சிக்கு வந்தால்

வாணம் வறண்டு விடும்
ஊழல் பெருகிவிடும்
மக்காச்சோளம் கிடைக்கும்
கப்பக் கிழங்கு கிடைக்கும்
அரிசியை பொருட்காட்சிகளில் காணலாம்.

இவன்
மாணவர் அமைப்பு.

எப்படிபட்ட வெறுப்பு இருந்திருந்தால் இப்படி எழுதி வைத்திருப்பார்கள். அதற்குத் தக்காற்போலவே கருணாநிதியின் ஆட்சிக்காலம் இருந்திருக்கிறது. காலம் சென்ற எனது பாட்டிக்கு உயிரோடு இருந்தவரை கருணாநிதியின் ஆட்சிக் காலம் குறித்த கசப்பான ஞாபகங்களே இருந்தன.

இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சி எப்படி இருக்கிறது? அதை உண்மையில் யாருக்காக செயல்படுகிறது என்பதெல்லாம் ஊரறிந்த உண்மைகள்.

அப்படிப்பட்ட தி.மு.க ஏன் உருவானது? என்பதைப் பற்றிய புத்தகம் இது. ஈ.வே.ரா.வின் கட்டுப்பாட்டிலிருந்த பகுத்தறிவு இயக்கமான திராவிடர் கழகம் என்ற அமைப்பிலிருந்து எப்படி அண்ணா வெளியேற்றப்பட்டார்? அல்லது வெளியேறும்படியாக என்ன நடந்தது என்பதை மலர்மன்னன் விவரிக்கிறார்.

இதைப் படிக்கப் படிக்க சரித்திரம் திரும்புவதை நாம் உணர்ந்து கொள்ள முடியும். அன்றைக்கு அண்ணா என்ற அண்ணாத்துரை ஏன் திராவிடர் கழகத்திலிருந்து வெளிவந்தாரோ, அதன் காரணங்களின் ஒன்றினால்தான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உருவானது என்பதையும் உணர்ந்து கொள்லலாம்.

இரும்புப் பெட்டியை தான் வைத்துக் கொண்டு சாவியை மட்டும் அண்ணாத்துரையிடம் கொடுத்தார் ஈ.வே.ரா. ... தி.மு.க பிறந்தது.

எம்.ஜி.ஆர் கட்சியின் கணக்குக் கேட்டதால் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அது இன்னொரு திராவிடக் கட்சிக்கு அடிகோலியது.

தன்னை கொலைசெய்யப் பார்க்கிறார் அண்ணாதுரை என்றார் ஈ.வே.ரா

தன்னை கொலை செய்யப்பார்க்கிறார் வை.கோ என்றார் கருணாநிதி.

தனது பேத்தி வயதில் ஒருத்தியை திருமணம் என்ற பெயரில் ஒன்றை செய்தார் ஈ.வே.ரா

மணைவி, துணைவி மற்றும் வேறு ஒன்று என மூவரைத் திருமணம் செய்தவர் கருணாநிதி.

இப்படியாக திராவிடக் கட்சியும், தலைவர்களும் ”கொள்கை”களுடன் வலம்வந்தனர், வருகின்றனர்.

அண்னாவைப் பற்றிய சிறிதளவுகூட எதிர்மறை எண்ணமே இல்லாத, அப்படி ஒரு பகுதியை இருப்பதைப் பற்றி கிஞ்சித்தும் பேச விரும்பாத அண்ணாவின் பக்தரால் எழுதப்பட்டிருக்கிறது இப்புத்தகம் என்பதை நாம் புத்தகத்தின் எல்லாப் பகுதியிலும் காண முடிகிறது. எங்கெங்கு காணினும் அண்ணாத்துரை குறித்த புகழாரங்கள் மட்டுமே.

தமிழகத்தின் முதலமைச்சராக இருந்துகொண்டே சமூகத்தின் ஒரு பிரிவு சாதியினரை கீழ்த்தரமாக விமர்சிக்கும் கருணாநிதி, அந்தக் குணத்தை அவரது அண்ணாவிடமிருந்துதான் கற்றிருக்கிறார். அதைப் போன்ற மோசமான ஒரு இன அழிப்பிற்குத் துனைபோகக் கூடிய அளவிலான வெறுப்பை அண்ணாத்துரை அவரது ஆசிரியரான ஈ.வே.ராவிடமிருந்தும் கற்றிருக்கிறார்கள்.

ஈ.வே.ரா பார்ப்பானை ஒழிக்க வேண்டுமென்றார். பாம்பையும், பார்ப்பனையும் கண்டால் பாம்பை விட்டுவிடு, பார்ப்பானை அடி என்ற அன்பு உபதேசத்தை தனது சீடர்களுக்கு நல்கினார்.

அவரது அன்பின் நீட்சியான அண்ணாவும் அதே பிராமன சமுதாயத்தை வேரோடும், வேரடி மன்னோடும் அழிக்க விரும்பியதை, யூதர்களோடு ஒப்பிட்டு பார்ப்பனர்களை நீக்க விரும்பியதையெல்லாம் மலர்மன்னன் எங்கேயும் சொல்ல விரும்பவில்லை.

அண்ணாவின் வழித்தோன்றலான கருணாநிதி முதலமைச்சர் என்ற மிகப்பெரும் பதவியில் இருந்துகொண்டு அவரது எல்லா பிரச்சினைகளுக்கும் பார்ப்பனர்கள்தான் காரனம் என சொல்லிக்கொண்டிருக்கிறார். அவரைப் பற்றி எழுப்பபடும் கேள்விகளுக்கு நேர்மையாக பதிலளிக்க முடியாது என்பதால்தான் இப்படி ஜாதியைக் குறித்துப் பேசி தனது பிரச்சினைகளை சமாளிக்கிறர் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகிப் போனது.

ஈ.வே.ராவைப் பற்றி நல்லவிதமாக இந்தப் புத்தகத்தில் ஒன்றும் கிடையாது. அவரைப் பற்றி சொல்லியிருப்பதெல்லாம்

அவரது கண்டிப்பு,

பிறரது திறமையை மதிக்காத குணம் அல்லது அபூர்வமாக மட்டுமே பாராட்டும் குணம்,

கஞ்சத்தனம்,

திராவிடர்க் கழகம் என்ற அந்தக்காலத்தின் தேவையெனக் கருதப்பட்டு, பல இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தையே பனயம் வைத்து செயல்பட்ட இயக்கத்தை தனது சொத்துபோல பாவித்தது .

பணக்காரர்களின் ஊதுகுழலாக செயல்பட்டது.

பொருந்தாத் திருமணம் பற்றி ஊருக்கெல்லாம் உபதேசம் செய்துவிட்டு தானும் அதே தவறைச் செய்தது.

பரம வைரி என எவரை இதுவரை அழைத்து வந்தாரோ அவரை சுயநலத்திற்காக சென்று சந்தித்தது.

தனது சொத்துக்களுக்கு வாரிசாக தனது கழகத்திலிருந்த ஒருவரையும் நம்பாத குணம்.

என அவரைப் பற்றிய எதிர்மறை பிம்பங்கள் நிறைய..

அண்ணாவைப் பற்றிய நற்சான்றுகள் மிக அதிகம்.

அவரது ஆளுமை,

கூட்டத்தை வசீகரிக்கும் திறன்,

எத்தனை அவமானங்கள் பட்டாலும் தலைவனை விட்டு அகலாமல் இருந்தது

ஜனநாயக முறைப்படியே தனது கட்சி முடிவுகளை எடுத்தது,

பெரியாரின் இரட்டை வேஷங்கள் குறித்து காண நேரும்போது அவரைப்போன்று அண்ணாவும் தனது குணத்தை மாற்றிக்கொள்ளாமலிருந்தது.

என இப்படிப் பல..

மலர்மன்னன் கூற்றுப்படி, இனி பொறுப்பதில்லை என முடிவு செய்தபின்னரே அண்ணா புதிய கட்சியைத் தோறுவிக்கிறார் என்பதற்கான ஆதாரங்களை நிறையத் தருகிறார்.

அண்ணாவை கிட்டத்தட்ட தவறுகளே செய்யாத மனிதனாக காட்ட முயன்றிருக்கிறார் மலர்மன்னன். அண்ணாவைப் பற்றிய வாழ்க்கைக் கதை எழுதும்போது அவரது இதர குணங்களையும் பட்டியலிடுவாராயிருக்கும்.

கம்பரசம்எழுதி தான் யார் என எல்லோருக்கும் உரத்துச் சொன்னவர் அண்ணா.

அவரது சகாக்களாலேயே அவர் ”எதில் அறிஞர்” என ஏளனம் செய்யப்பட்டவர்.


அப்படிப்பட்ட அண்ணாவால் உருவாக்கப்பட்ட தி.மு.க தோன்றியது குறித்து ஏதுமறியாதவர்க்கு நிச்சயம் இந்த நூல் ஒரு வழிகாட்டி.

ஆனால் உன்னத நோக்கங்களுடன் எல்லோரையும் அரவனைத்துச் செல்லவேண்டும் என்ற குறிக்கோளுடன் தொடங்கப்பட்ட இந்த திராவிட முன்னேற்றக் கழகம் இன்றைக்கு சமுதாயத்தின் ஒரு பிரிவினரை மாநிலத்தின் முதலமைச்சராக இருந்து கொண்டே எளிதில் வன்முறைய உருவாக்கும் அளவு பேசி அவர்களை அழித்துவிடக் கூடிய அளவு தரம் தாழ்ந்து பேசுவதும், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற அண்ணாவின் முழக்கத்தினை இன்று சிறுபான்மையினர் தேவனே தேவன் மற்றதெல்லாம் ஒழிக்கப்படவேண்டியவைகள் என்ற மாற்றத்தையும் அடைந்திருக்கிறது.

கட்சியை, இயக்கத்தை தனது சொத்துபோல பாவித்த பெரியாரிடமிருந்து பிரிந்து உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகம் இன்று மீண்டும் ஒரு குடும்பத்தின் கட்சியாகிப் போனது காலத்தின் கோலமே.

கிழக்குப் பதிப்பகத்தின் வெளியீடான இப்புத்தகத்தை வாங்க இங்கே சொடுக்குங்கள்

2 comments:

snkm said...

நன்றி! ஏற்கனவே இந்தப் புத்தகத்தைப் பற்றி தமிழ் ஹிந்துவில் படித்திருந்தாலும் புத்தகத்தைப் படிக்கவில்லை! நன்றி!

கத்தார் சீனு said...

நல்ல பதிவு ஜெயக்குமார். நேர்மையா சொல்லி இருக்கீங்க...
நானும் "அண்ணா"ந்து பார் என்ற புத்தகத்தை நேற்றுதான் படித்தேன்.
விரைவில் அதை பற்றி ஒரு பதிவிட வேண்டும்.