Sunday, January 25, 2009

இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்.....

அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்.





இந்தியா என்றொரு நாடுண்டு ..அதில் ஏலம் கிராம்பு பெறுவதுண்டு.. பொன்னும் பொருளும் மிகவுண்டு .. அதன் போக்கறியாதார் பலருண்டு. எனப்பாடினான் வருமுன் குறிசொல்லிப்பாடிய வரகவி பாரதி.

இன்று இந்தியா அவன் கனவு கண்ட சுதந்திரமும் அடைந்து, குடியரசாக மலர்ந்து ஜனநாயகம் என்பதற்கு எடுத்துக்காட்டாகவும் அவன் கனவு கண்ட வலிமையான இந்தியாகவும் ஆகி வருகிறது. இந்த கட்டுக்கோப்பைக் குலைத்து நாட்டைத்துண்டாட நினைக்கும் அந்நிய சக்திகளுக்கும் அதற்கு துணைபோகும் சக்திகளுக்கும் பாரதியின் பாடலே பதில்..

நல்லற நாடிய மன்னரை வாழ்த்தி
நயம்புரிவாள எங்கள்தாய் - அவர்
அல்லவர் ஆயின் அவரை விழுங்கிப்பின்
ஆனந்தக் கூத்திடுவாள்.

ஐயா!

பேயவள் காண் எங்கள்தாய் - பெரும்
பித்துடையாள் எங்கள்தாய்
காயழல் ஏந்திய கையன் தன்னைக்
காதலிப்பாள் எங்கள்தாய்....

இது ஏதோ கவியின் கனவு இல்லை. 'நடைபெறும் காண்பீர் உலகீர், இது நான் சொல்லும் வார்த்தை என்றெண்ணிடல் வேண்டா! தடையற்ற தெய்வத்தின் வார்த்தை! இது சாதனை செய்க பராசக்தி!'

அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!!!!

ஜெயக்குமார்.

போட்டோ உதவி.. Friend Cuttack

No comments: