Wednesday, August 19, 2015

இந்திய ஜனநாயகத்தை அழிக்கும் களைகள்

மக்கள் செருப்பாலடித்து மூலையில் உட்கார வைத்தும்கூட இன்னும் திருந்தாமல் ஒரு உருப்படியான விவாதத்திற்குகூட உதவாமல் பாராளுமன்றத்தை முடக்கி நாட்டின் வளர்ச்சியைத்தடுப்பதன் மூலம் காங்கிரஸ் இந்திய நாட்டு மக்களுக்குச் சொல்லாமல் சொல்வது...
நாங்கள் மட்டுமே இந்த நாட்டைக் கொள்ளையடிப்போம்.
எங்களைத்தவிர வேறு யாரும் இந்தநாட்டை ஆளக்கூடாது. அதுவும் இந்தியாவில் பிறந்த காங்கிரஸ் கட்சியினர்கூட கிடையாது, இத்தாலி சோனியாவும், அவரது முட்டாள் மகனும் மட்டுமே ஆளவேண்டும்.
இந்த தேசம் நன்றாய் இருக்க விடமாட்டோம், முடிந்தவரை நாசமாக்குவோம்.
இந்திய ஜனநாயகம் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் எம்.பிகள் என்ற சும்பன்களால் கேவலப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. நேற்றைக்கு பூடானின் பாரளுமன்றக்குழுவினர் முன்னிலையில் கேவலப்படுத்தினர்.
காரியக்காரரான முலாயம்சிங்கூட பாராளுமன்ற முடக்கத்திற்கு எதிராய் பேசும் அளவு காங்கிரஸின் அராஜகம் இருக்கிறது.
ராஜ்யசபாவில் பலமில்லை என்பதற்காக இந்த அநியாயங்களையெல்லாம் சகித்துக்கொண்டிருக்கிறது பாஜக. பொய்க்குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பாக பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் பாஜக தலைகள்.
சுஷ்மா ஸ்வராஜ் நாக்கைப் பிடுங்கிக்கொள்வதுபோல கேவலமாகக்கேட்டும் இன்னும் கேவலமாக சப்தமிட்டுகொண்டிருக்கும் இந்தக் கும்பல்கள் நாட்டின் சாபக்கேடுகள்.
இந்திய ஜனநாயகம் மிக மோசமானதொரு காலகட்டத்தில் இருக்கிறது. இதுவும் கடந்துபோகும் என்றிருக்க வேண்டியதுதான்.

---------------
ராஜ்யசபாவில்  ராகுல்காந்திக்கு
சுயமாக பேசவராதென்றால்கூட தப்பில்லை. யாரோ எழுதிக்கொடுத்ததை வாசிக்கும் அளவுதான் திறமையுள்ளவர் பாரதத்தின் பிரதமராக ஆசைப்படுவது அவர் தப்பில்லை. ஆனால், ஊழல் செய்ய வாய்ப்புக்கிடைக்கும் என்பதற்காக அவரை பிரதமராக்கத் துடிக்கும் காங்கிரஸில் இருக்கும் தேசத்துரோகிகளை நினைத்தால்தான் வயிறு எரிகிறது.

No comments: