Wednesday, August 19, 2015

ஜாதி அரசியல் காவு வாங்கிய மாரியம்மனின் தேர்

தேரை எரித்தவர்கள் மறந்துபோனது அது எரித்தவனும் வணங்கும் தெய்வம் சென்ற தேர் என்பதை.
ஜாதி வெறியின் உச்சத்தில் சக மனிதனை இழிவுபடுத்துவோர் படிக்கவேண்டிய பாடம் ஒன்றுண்டு.
எத்தனையோ தலைமுறைகளுக்கு முன்னர் செய்த பிழைகளுக்கு இன்றுவரை தன்டனை அனுபவிக்கும் பிராமனர்களின் கதியே உங்களுக்கும் வரும்.
நீங்கள் செய்த பாவமெல்லாம் இன்னும் அடுத்த பல தலைமுறைகளுக்கான சுமை.
ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர்விசை ஒன்றுண்டு என்பதை மறவாதீர்கள்.
செய்த தவற்றுக்கு பிராயச்சித்தமாக தப்பு செய்த கயவாளி கூட்டத்தை போலிஸில் ஒப்படையுங்கள்.
இரு பிரிவினரும் இணைந்து இந்த தேரோட்டத்தை இணைந்து நடத்துங்கள்.
இதை அரசியல்வாதிகள் கையில் கொடுத்தால் இந்தப்பிரச்சினை அவர்களின் வாழ்வாதாரத்துக்கு கிடைத்த வாய்ப்பாக கொண்டு உங்களை என்றென்றைக்கும் சேராமல் செய்து விடுவார்கள். முடிந்தால் உங்களையே விற்று விடுவார்கள்.
நீங்களே சென்று பாதிக்கப்பட்ட தலித் சகோதரர்களிடம் மன்னிப்பை கோருங்கள். இனி இதுபோல நடவாது என்பதற்கான உத்தரவாதத்தை அளியுங்கள். மீண்டும் தேரோட்டம் இரு சாதியினரும் இணைந்து நடத்துவதாய் இருக்கட்டும்.
மிகக்கேவலமாய் உணரும் நாள் இது.

படம் - விழுப்புரம் மாவட்டம் - சங்கராபுரம் அருகே - சேஷசமுத்திரம் கிராமம்

No comments: