Saturday, June 12, 2010

ஓராண்டை நிறைவு செய்யும் - சொல்வனம்



இரண்டாமாண்டில் அடியெடுத்து வைக்கும் சொல்வனத்திற்கு வாழ்த்துக்கள்.

தரமான ஒரு இணைய இலக்கியப்பத்திரிக்கையை ஓராண்டு காலம் தொய்வின்றியும், இலக்கிய இதழ்களுக்கே உரித்தான சிண்டுமுடிதல்கள், உள் அரசியல்கள், பிற எழுத்தாளர்களை வசைபாடுதல் என்ற அக்கபோர்கள் ஏதுமின்றி ஒரு இலக்கியப் பத்திரிக்கையை "இப்படியும் நடத்தலாம்" என்று நடத்திக்காட்டியிருக்கும் சொல்வனம் குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சொல்வனம் மென்மேலும் சிறப்பாய் செயல்படவும், நல்ல இலக்கியக் கட்டுரைகளையும், ஆய்வுகளையும், கலைச்செல்வங்கள் யாவையும் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் அளிக்கவும் வாழ்த்துக்கள்.

சொல்வனத்தின் வெற்றிக்கான காரணங்களாக நான் நினைப்பது,

மிகச் சிறப்பான விமர்சனங்களையும், இலக்கியவாதிகளின் பேட்டிகளையும், இசைகுறித்தான கட்டுரைகளையும் சரிவிகிதத்தில் கலந்து கொடுத்ததும்...

வலைப்பக்கத்தை இளமைப் பொலிவுடன் கட்டியமைத்ததும், மகரந்தம் போன்ற பொதுத்தளத்தில் கிட்டாத பொதுஅறிவுச் செய்திகளை தவறாமல் வழங்கியதும்..

புன்முறுவலுடனே படிக்க வைக்கும் ராமன்ராஜாவின் அறிவியல் கட்டுரைகள் மற்றும், சுகாவின் அனுபவக் கட்டுரைகள்..

மொழிமாற்றக் கதைகளில் மிகச் சிறப்பானதொரு நேர்த்தியும், தொடர்ந்து அதை கடைப்பிடித்ததும்...

வழக்கமான கேலிச்சித்திரங்களாய் இல்லாமல் இன்றைய குழந்தைகளின் புத்திசாலித்தனத்தை பிரதிபலிக்கும் விதமாய் அமைந்த கேலிச்சித்திரங்களும் ...

தரமான கவிதைகளும், சினிமா விமர்சனங்களுமாக ஓராண்டை நிறைவு செய்துள்ளதே சொல்வனத்தின் வெற்றி.

குறைகளே இல்லையா என்றால்..

தரமான எழுத்தாளர்களாகவே இருப்பினும், தெரிந்த பெயர்களையே மீண்டும், மீண்டும் பார்க்கும்போது படிக்கும் ஆர்வம் சிறிது குன்றாமலில்லை.

இன்னும் கொஞ்சம் இறங்கிவந்து, தரத்தில் சமரசமின்றி அதேசமயம் பெருவாரியான வாசகர்களைக் கவர என்ன செய்யலாம் என்பதுகுறித்து சொல்வனம் குழு யோசிக்கலாம்.

ஆனால், இவையெல்லாம் தாண்டி இலக்கிய உலகில் வாராதுவந்த மாமணி “சொல்வனம்” என்றால் அது மிகை இல்லை.

சொல்வனம் இதழ்களை வாசிக்க இங்கே சொடுக்கவும்.

2 comments:

snkm said...

உண்மை! நன்றி!

பத்மகிஷோர் said...

கானகத்திற்கும் சொல்'வன'த்திற்கும் என்ன கனெக்ஷன்?