Tuesday, February 24, 2009

தாத்தா அப்பாவுக்கு சொன்ன கதைகள் - ஒன்று

தாத்தா அப்பாவுக்கு சொன்ன கதைகள் - ஒன்று

ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தானாம்.. முட்டா ராஜான்னு சொன்னாதான் சரியா வரும்.. அவனோட நாட்ல பகல்ல எல்லோரும் தூங்கனும்.. ராத்திரியில வேல செய்யணும்.. இந்த விதிமுறைய யார் மீறினாலும் கழுவிலேத்தி கொல்லும் தண்டனை தந்தாரு ராசா..

இப்படி போய்க்கிட்டிருந்தப்ப அந்த நாட்டுக்கு மூனுபேரு ராஜாவைப் பாத்து தங்களோட திறமைகள காமிச்சு வேலை வாங்குறதுக்காக வந்தாங்க.. நல்ல புத்திசாலி ஆளுகளும் கூட. ஊர்ல இருந்தவங்க இவங்ககிட்ட வந்து இந்த ராஜா பண்ற அநியாயத்தையும் அவங்களுக்கு ஒரு நியாயம் கிடைக்காதான்னு ஏங்கிக் கிட்டிருப்பதையும் சொன்னாங்க. சரி, முட்டாப்பய போல.. இவன ஒழிச்சிற வேண்டியதுதான்னு மூணு பேரும் தீர்மானம் செஞ்சாங்க.

புதுசா ஊருக்கு வந்த இவங்க வழக்கம்போல காலையில எந்திரிச்சி சமையல் செய்ய ஆரம்பிச்சாங்க .. உடனே ராசாவோட ஆட்கள் வந்து உங்களுக்கு இந்த ஊர் சட்டம் தெரியாதா?? எப்படி நீங்க காலை நேரத்துல சமையல் செய்யலாம்னு கேக்க அப்படித்தான் செய்வோம் அப்படின்னு சொன்னாங்க வந்த மூணு பேரும். காவலாளிக ராஜாகிட்ட கூப்டுட்டுப் போக, ராஜா இந்த நாட்டு சட்டம் தெரியாம செஞ்சிட்டோம்னு சொல்லுங்க விட்டுடுறேன் அப்படின்னார். உடனே அவங்க மூணு பேரும் இல்ல ராசா தெரிஞ்சேதான் செஞ்சோம் அப்படின்னாங்க.

மகாராஜா எங்களுக்கு சீக்கிரம் சொர்கத்துக்குப் போகனும்னு ஆசை அதனால இப்படி செஞ்சோம் அப்படின்னாங்க. உடனே ராஜா இந்த மூணு பேரையும் கழுவில ஏத்துங்க அப்படின்னு உத்தரவு போட்டாரு.

மூணு பேரும் சந்தோசத்துல துள்ளிக் குதிச்சாங்க.. அதுல ஒரு ஆளு முன்ன வந்து மஹாராஜா என்னைத்தான் மொதல்ல கழுவுல போடணும் அப்படின்னு விண்ணப்பம் வச்சார். அடுத்தாளு வந்து இல்ல மஹாராஜா என்னையத்தான் போடனும்னு கேக்க.. மூனாமத்து ஆளு வந்து என்னையத்தான் போடனும்னு கேக்க ராஜா கொழம்பிப் போயி ஏம்ப்பா கழுவுல சாகுறதுக்கு முந்துறீங்கன்னு கேக்க, வந்திருந்தவங்க மஹாராஜா இன்னைக்கு யாரெல்லாம் கழுவுல ஏறி சாகுராங்களோ அவங்கல்லாம் நேரா சொர்கத்துக்கே போயிருவாங்க அப்படின்னு சொன்னங்க. இந்த ராசாவோட கொடும பொருக்கமாட்டாம இருந்த மந்திரி மார்களும் ஆமா ராசா நீங்கதான் சொர்கத்துக்கு செல்ல தகுதியான ஆளுன்னு ஏத்திவிட மனுஷன் சந்தோசமா உசுர விட தயாராயிட்டாரு. உடனே ராஜா அந்த மூணு பேருக்கும் கழுவுல ஏத்துற தண்டனைய ரத்து செஞ்சுட்டு என்னையத்தான் மொதல்ல போடணும்.. நான்தான் மொதல்ல சொர்கத்துக்கு போவேன்னு சொல்ல மக்களே எல்லா ஏற்பாடும் செஞ்சு ஊரே பாக்க ராசாவ கழுவில ஏத்துனாங்க.


ஊரே சந்தோசத்துல துள்ளிக் குதிச்சது.. அந்த மூணு பேரையும் இனிமே நீங்கதான் எங்க ராஜா அப்படின்னு ஊர்க்காரங்களும், பழைய ராஜாவோட மந்திரிகளும் சொல்ல அவங்களும் அத ஏத்துக்கிட்டு ராசாவ இருந்து நாட்ட நல்லபடியா ஆண்டாங்க.

தாத்தா அப்பாவுக்கு சொன்ன முதல் கதை முற்றிற்று .

1 comment:

Anonymous said...

அப்படி போடு அருவாள,
இப்படியே நெறைய கதை சொல்லுவிங்களாம், நாங்களும்"ம்"கூட்டிகிட்டே இருப்பமாம்.......