Tuesday, February 24, 2009

எனது எண்ணங்கள்.

எனது எண்ணங்கள்.

சட்டத்துறைக்கும், காவல்துறைக்குமான தற்போது நடக்கும் மோதல் போக்கு விபரீதமானது. சட்டத்தை பாதுகாக்கும் வக்கீல்கள்தான் அதிக பட்ச வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

நம் நாட்டில் பொறுப்பின்மைக்கு தண்டனையே கிடையாதா.. குழ்ந்தைகளை ஆழ்துளைக் கிணறுகளில் தவறவிடவா பெற்றோர்கள் பிள்ளைகளைப் பெறுகிறார்கள். ??? பிள்ளையை இழந்த பெற்றோர்களின் சோகத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு சிரவணனின் பிதுர் பக்தி நாடகமும், தசரதனின் வாழ்க்கையும். இதைக் கேட்காமல் வளர்ந்த யாராவது இருக்க முடியுமா?? இருப்பினும் இது போன்ற சோகங்கள் தொடரத்தான் செய்கின்றன..

அந்நியன் படத்தில் மின்சாரம் பாய்ந்து இறந்த குழ்ந்தையின் தகப்பன் கோர்ட்டில் சொல்லும் வாதங்கள் அபத்தமாகப் பட்டது.. கோர்ட்டில் இருக்கும் நீதிபதியே இத்தனை பேரையும் எப்படி தண்டிக்க முடியும் எனக் கேட்பார். அப்படியெனில் பேருக்கு எவரையாவது பலிகடாவாக்கி பிரச்சினையை முடித்தால் போதும் என்ற மன நிலையில் தான் நாமும், நமது நீதித் துறையும் இருக்கின்றோமா, அல்லது அப்படி வளர்க்கப்படுகிறோமா??

அல்லா ரக்கா ரஹ்மான் ஆஸ்கார் விருது வாங்கி இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்துள்ளார். அவருக்கு நமது வாழ்த்துக்கள். ஆனால் ஸ்லாம் டாக் மில்லியநேரை விட சிறப்பான இசைக்கோவைகளை இவர் கொடுத்திருக்கிறார். ஆங்கிலப்படமாக இருந்தால்தான் ஆஸ்கார் கிடைக்கும் என்பதாலும், இந்தியாவை இழிவு படுத்தி எடுக்கப்படும் படங்களுக்கே ஆஸ்கார் கிடைக்கும் என்பது தெளிவாக தெரிந்து விட்டமையால் இனி இதுபோன்ற படங்களை அதிகம் எதிர்பார்க்கலாம். நம்ம உலகநாயகனுக்கும் ஒரு பிடி கிடைத்தது போல இருக்கும்..

இனி வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டு என்ற உலக முக்கியமான கூத்துக்கள் நடைபெறும். இந்திய கம்யூனிஸ்டுகள் முதல் பட்டியலை வெளியிட்டு விட்டார்கள்.. இனி யாருடன் கூட்டு சேர்ந்தால் பிழைக்கலாம் என்ற கணக்கைப் போட்டு கூட்டணி அமையும். நேர்மையாவது, கத்தரிக்காயாவது.. பிளடி இடியட்ஸ். குடுத்த காசுக்கு நாய் மாதிரி வந்து ஒட்டுப்போடுவானுங்க பரதேசிங்க.. (இப்படித்தான் காசு கொடுக்கும் ஒவ்வொரு அரசியல்வாதியும் நினைத்துக்கொள்வான்) நாமும் நமது கடமையைச் செய்யாமல் திண்ணையில் அமர்ந்துகொண்டு யார் யார் எங்கெங்கு சொத்து சேர்த்துள்ளார்கள் என செய்திகள் படித்து அதிகம் சொத்து சேர்த்தவனுக்கு ஓட்டுப்போடுவோம்..

இணையத்தில் எழுதும்போது சற்றுப் பொறுப்பாக எழுத வேண்டும். இல்லையென்றால் சட்டம் தான் கடமையை செய்யும் என உச்ச நீதிமன்ற நீதிபதி அறிவித்திருக்கிறார். இதுவரை எழுதியதற்கு என்ன கணக்கு என அவர் சொல்லவில்லை. யாராவது அந்த எழுத்தை எடுத்துக்காட்டி கேசுபோட்டால் எடுப்பார்கள் போல..


காஷ்மீரில் என்ன நடந்தாலும் அது சிறுபான்மையினருக்கு எதிரானது என்ற மாயை உண்டாக்கப்பட்டு அது திறம்பட செயல்படுத்தப்படுகிறது. இன்று யாசின் மாலிக்கின் சொந்தக்காரர் சந்தேகத்துக்கிடமான வகையில் இறந்து கிடந்ததால் உடனடியாக போராட்டம்.. நம்ம வீட்டுப்பிள்ளைகள் குழாயில் விழுந்து இறந்தாலும், குண்டு வெடித்து இறந்தாலும் கேக்க நாதியில்லை. ஸ்ரீநகரில் இந்திய ராணுவத்திற்கு எதிராக கொலைவழக்கு ஒன்று பதியப்பட்டுள்ளது. இத்தனை நேர்மையாய் அரசு நடந்தாலும்

கான்பூர் ஐ.ஐ டி. மாணவர்கள் சாடலைட் ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள். தீப்பூச்சி என்ற பொருள்படும் ஜுக்னு என்ற இந்த செயற்கை கோளை இயற்கை அழிவுகளின் தகவல்களை சேகரிக்கவும், வெள்ளம் மற்றும் வறட்சியை கண்காணிக்கவும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். இந்தியா என்னதான் கஷ்டத்தில் இருந்தாலும் இந்தியர்கள் எங்கும், எப்போதும் சொடைபோவதில்லை. வேலையிலாகட்டும், நிர்வாகத்திலாகட்டும், ஊழலில் ஆகட்டும். எப்போதும் எங்கும் பெஸ்ட் ..

அப்பப்ப இப்படி என்னத்தையாவது எழுதி வைக்கிறேன்.

ஜெயக்குமார்

1 comment:

bamaran said...

indian all are great but without (privinai)but we lower taking (privinai)for other counrries