Saturday, August 15, 2009

சுதந்திரதின வாழ்த்துக்கள்




கத்தாரில் சுதந்திர தினம்.

ஒவ்வொரு தேசிய விழாக்களும் இந்தியத் தூதரகம் சார்பாக சிறப்பாகக் கொண்டாடப்படும் கத்தாரில் இன்று 62வது சுதந்திர தினம் கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது.


கத்தாருக்கான இந்தியத் தூதர் திருமதி தீபா கோபாலன் வாத்வா இந்திய தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். பின்னர் கூடியிருந்தவர்கள் தேசியகீதம் பாடி மரியாதை செய்தனர்.



பின்னர் நிகழ்ச்சிகள் தொடங்கின. சுதந்திரதின உரையை இந்தியத்தூதர் ஆங்கிலத்தில் வாசித்தார். அதன் பின்னர் தோஹாவில் உள்ள இந்தியப்பள்ளியான பிர்லா பப்ளிக் ஸ்கூல் குழந்தைகளின் தேசபக்திப் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.


அதைத் தொடர்ந்து இந்திய சுதந்திரதினத்தை முன்னிட்டு கேக் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தியத்தூதர் கேக்கை வெட்ட அனைவருக்கும் அது விநியோகம் செய்யப்பட்ட்து.

அனைவருக்கும் இனிமையான சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வழக்கத்தைவிட சிறப்பாகவும், அதிக அளவு இந்திய மக்களின் பங்களிப்புடன் விழா நடைபெற்றது. ஜவகர்லால் நேருவைப்போல வேடமிட்ட ஒருவர் நிகழ்ச்சிக்கு வந்திருந்து சிறப்பித்தார்...



இந்திய சுற்றுலாத்துறையின் சார்பில் இந்திய சுற்றுலா குறித்து சிறு சிறு புத்தகங்கள் பொதுமக்களுக்காக வைக்கப்பட்டிருந்தது.

கத்தாரில் இருந்து வெளியாகும் தி பெனின்சூலா என்ற ஆங்கில நாளிதல் இந்திய சுதந்திரதின சிறப்பு மலரை வெளியிட்டிருந்தது.


அனைவருக்கும் இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள். வெல்க இந்தியா...

சுதந்திரதின நிகழ்ச்சிகளின் தொகுப்புப் புகைப்படங்கள் கீழே ஆல்பமாக..

No comments: