Friday, August 15, 2008

இந்திய சுதந்திர தினம்.

கத்தாரில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டங்கள்.


சுதந்திர தினம் இந்திய தூதரகத்தின்கீழ் வரும் இந்தியன் கல்சுரல் செண்டரில் நடைபெற்றது. கத்தாருக்கான இந்தியதூதர் டாக்டர் ஜார்ஜ் ஜோசப் மூவர்னக்கொடியை ஏற்றிவைத்தார்.






அதன் பின்னர் இந்திய பிரதமரின் உரையை தூதுவர் படித்த பின்னர் பள்ளிக்குழந்தைகளின் கூட்டுப்பாடல் (இந்தியில்) நடைபெற்றது. அதன் பின்னர் வழக்கம்போல கேக் வெட்டும் வைபவம் நடைபெற்றது.






இந்திய தூதரகத்தின் புதிய வலைப்பக்கம் இந்தியதூதரால் திறந்துவைக்கப்பட அதன் செயல்பாடுகள் மற்றும் விவரனங்கள் குறித்து உரை நிகழ்த்தப்பட்டது.

அதன் பின்னர் இனிய சிற்றுண்டியுடன் இந்திய தூதரகத்தின் நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன. இதன் பின்னர் தோஹாவில் உள்ள இந்திய பள்ளிகளில் கொடியேற்றும் நிகழ்ச்சிகளும் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

எல்லாதரப்பு மக்களும் கலந்துகொண்டது நல்ல விஷயம். காலை 7.30 மணிக்கு அதுவும் வெள்ளிக்கிழமை வருவதென்பது ஆச்சரியம்தான்.

கத்தாரிலிருந்து வெளிவரும் கல்ஃப் டைம்ஸ் இந்திய சுதந்திரதின சிறப்பு மலரை வெளியிட்டிருந்தது.



















வலைப்பதிவர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்.

ஜெயக்குமார்

1 comment:

Unknown said...

I have been reading your articles for quite sometime.It is very interesting. It is good to know that we are from the same school.
Very nostagic moments. I have been in contact with our school till now.If you are interested, keep in touch.