Sunday, November 15, 2009

ராமன் ராஜா எனும் புன்னகைக்க வைக்கும் அறிவியல் கதை சொல்லி.

ராமன்ராஜா என்ற பெயர் எழுத்துலகில் எனக்கு அறிமுகம் ஆனது சொல்வனம் இதழில்தான். அவரது கட்டுரைகள் அனைத்தும் அறிவியல் சம்பந்தப்பட்ட ஆனால் பொதுவாக அதிகம் விவாதிக்கப்படாத வறண்ட தலைப்புகள்.

அப்படிப்பட்ட விஷயங்களை கையில் எடுத்துக்கொண்டு வாசகனை மிகுந்த ஆர்வத்துடன் படிக்க வைப்பதென்பது சவாலான விஷயம், சொல்லப்போனால் ஓரிரு கட்டுரைகளுக்கு மேல் அப்படி சுவாரசியமாக எழுதிவிட முடியாது.

தமிழில் சுஜாதாவுக்கு அறிவியலை எளிய மக்களுக்கு புரியும் வகையில் கொண்டு சென்றவர் என்ற நற் பெயரும், இலக்கியத்தை தேவையில்லாமல் எளிமைப்படுத்தினார் என்ற கெட்ட பெயரும் உண்டு.

அவரது வரிசையில் அறிவியல் கட்டுரைகளை எழுதுவதிலும் அதை எளிதாய் மாற்றுவதிலும், ஜனரஞ்சகமாக்குவதிலும், சொல்லப்படும் விஷயம் எந்த விதத்திலும் நீர்த்துப்போகாமலும் வாசகர்களுக்குத் தருவதில் வெற்றி பெற்று வருகிறார் திரு.ராமன் ராஜா அவர்கள்.

அவரது சொல்வனம் கட்டுரைகளில் காணப்படும் வித்தியாசமான தலைப்புகளினால் ஈர்க்கப்படும் வாசகன் கட்டுரையைப் படிக்க ஆரம்பித்தால் அதன் சரளமான நடையிலும், நகைச்சுவையிலும் இருந்து வெளிவருதல் சாத்தியமில்லாத ஒன்று. ராஜன் ராமனின் விசிறியாக மாறிவிடுவார். அப்படிப்பட்ட சிறந்த நடையைக் கொண்டது அவரது எழுத்துக்கள்.

சில தலைப்புகள்..

சாத்தியத்தை மீறிய சத்தியங்கள்.

விழப்போகிறது

பளிச்சென்று எரிந்த பொருளாதாரம்

எறும்பு மூளையின் சிறந்த முடிவு.

மரணமில்லாத மனிதன் மகிழ்ச்சியாக இருப்பானா?

இன்னும் பல...

அவரது நான்கே நான்கு கட்டுரைகளை மட்டும் படித்துவிட்டு எனது கருத்தாக இதைப் பதிக்கிறேன். நிச்சயம் நீங்களும் நான் சொல்வதை உண்மை எனக் கண்டுகொள்வீர்கள்.

அவரது சொல்வனம் கட்டுரைகளின் சுட்டிகள் இங்கே.

No comments: