Wednesday, December 30, 2015

பாஜக அரசின் வெளியுறவுத்துறை

சவுதிகளால் கொடுமைப்படுத்தப்பட்ட இந்தியர்கள் மூவர் கேரளம் திரும்பினர்.
சுஷ்மாவுக்கு வாழ்த்தும், நன்றிகளும் குவிகின்றன.
உண்மையில் சுஷ்மா தன் கடமையைத்தான் செய்துகொண்டிருக்கிறார். ஆனால், பாராட்டு மழையில் நனைகிறார்,
காங்கிரஸ் ஆண்ட காலங்களில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அதிலும் குறிப்பாய் மத்திய கிழக்கில் வாழும் இந்தியர்கள் எல்லாம் மனிதர்களாகவே மதிக்கப்பட்டதில்லை. 
ஒரு பாஸ்போர்ட் ரெனிவலில் ஆரம்பித்து, ஒரு போலிஸ் க்ளியரன்ஸ் சர்டிஃபிகேட் தேவைக்கும், முதலாளி சம்பளம் தராமல் கொல்கிறான், சாப்பாடு இல்லாமல் 3 மாதங்களாக கஷ்டப்படுகிறோம், ஊருக்கு போகக்கூட வழியில்லை என்ற கோர்க்கைகளோடு வரும் இந்தியர்களை இன்றைக்கு குறைந்தபட்ச மரியாதையோடு கையாளும் தூதரகங்கள் அன்றைக்கு அத்தனை கேவலமாய் நடத்தின.வெளியுறவுத்துறை அமைச்சர் என்றால் யாரென்றே தெரியாத அளவுதான் நிலைமை இருந்தது. அல்லது அனுகமுடியாத அளவு.
படித்த மக்களுக்கே அதுதான் நிலையாக இருந்தது. இன்றைக்கு மத்த்ய மந்திரியை ஒரு ட்வீட் மூலம் தொடர்புகொள்ள முடிகிறது. வேலையும் நடக்கிறது.
கடமையைச் செய்தவர்களையே கைதட்டி பாராட்டும் அளவு நாம் இருந்தால் காங்கிரஸ் எப்படி மக்களைக் கையாண்டிருக்கும் என்பதற்கு வேறு ஆதாரங்கள் வேண்டாம்.
இந்த பாராட்டுகளால் மெய்மறந்துவிடாமல் மக்களை காகும் அரசாங்கம் நாம் என்பதை எப்போதும் மனதில்கொள்ளவேண்டியது பாஜக அரசின் கடமை. அதைச் செய்வார்கள் என நான் நம்புகிறேன். ( 27.12.2015ல் எழுதியது)

No comments: