Friday, March 6, 2015

படித்ததில் பிடித்தது..

கனடாவின் ஒரு ஷாப்பிங் மாலில் 100 சதவீதம் புர்கா அணிந்த ஈராக்கிய பெண் ஒருவர் பணம் வாங்கும் இடத்தில் இருந்த பெண்மனி அணிந்திருந்த கனடா நாட்டுக் கொடியைக் காண்பித்து ஏன் இதை அணிந்திருக்கிறாய் எனக் கேட்டிருக்கிறார். அவர் எனது மகன் ஐக்கிய நாடுகள் படையுடன் சேவை செய்ய சென்றிருக்கிறான் அவன் நினைவுடனும், கர்வமுடனும் அணிந்திருக்கிறேன் எங்கள் நாட்டுக் கொடியை என்றிருக்கிறார். 

உடனே ஈராக்கிய பெண்மனி எப்போது எங்கள் நாட்டின்மீது குண்டு வீசுவதை நிறுத்துவீர்கள் எனக் கோபமாக கேட்டிருக்கிறார்.. அப்போது பணம் கட்ட வரிசையில் நின்றிருந்த ஒரு வயதானவர் வந்து இந்தப்பெண்மனியின் மகனைப்போன்று நூற்றுக்கணக்கான கனடிய வீரர்கள் உங்களுக்காக போராடி உயிரை விட்டிருக்கிறார்கள். அதனால்தான் உங்களைப்போன்றோர் “எங்கள்” நாடான கனடாவில் நின்றுகொண்டு ஒரு கேஷியரை பார்த்து எங்கள் நாட்டின் மீது குண்டு வீசுகிறீர்கள் என “எங்கள்” நாட்டை அவமதிக்க முடிகிறது. 

உங்களைப்போன்றோர் இப்படி வெளிப்படையாக பேசும் உரிமை உங்கள் நாட்டில் இருந்திருந்தால் எங்கள் நாட்டு வீரர்கள் அங்கே சென்றிருக்க வேண்டிய அவசியமே இல்லை. இருப்பினும், இன்று எப்படி உங்கள் உரிமைக்கு, உங்களுக்கு தங்க இடம் கொடுத்த கனடிய மக்களை அவமரியாதையுடன் பேசத்தெரிந்துகொண்டுவிட்டதால் நீங்கள் ஈராக்குக்கு திரும்பிச் செல்லும் விமானக்கட்டணத்தை நான் அளிக்க தயாராய் இருக்கிறேன். அங்கே சென்ற உடன் இப்படி கனடாவில் வெளிப்படையாக பேசியதைப்போல அங்கு சென்றபிறகும் இப்படி வெளிப்படையாக பேசுங்கள். அப்படி பேசிய பிறகும் நீங்கள் உயிரோடிருந்தால், இப்படி உங்களை இந்த நெருக்கடிக்கு (அந்நிய நாட்டில் பிழைக்க வேண்டிய நிலைக்கு) உள்ளாக்கிய உங்கள் நாட்டு மக்களை திருத்துங்கள். அவர்கள்தான் கனடிய நாட்டு வீரர்கள் அங்கு (ஈராக்கிற்கு) வருவதற்கே காரனம் என்றார். 

நீதி.. உன் உரிமையை உன் நாட்டில் மட்டும்தான் பேச வேண்டும். இல்லையெனில், இப்படித்தான் அவமானப்பட நேரிடும்.

No comments: