Monday, December 20, 2010

நாஞ்சில் நாடனுக்கு சாகித்திய அகாதமி விருது


மனதிற்கு மிகப்பிடித்த எழுத்தாளர் ஓர் உயரிய விருதை வாங்கும்போது நாமே அவ்விருதைப் பெற்றதுபோல உணர்வோம்.

இன்று எனக்கு அப்படிப்பட்ட ஒரு நாள். நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்களையும், மிதவையையும் படித்து விட்டு சே, எப்படி எழுதுறார்யா என மனதில் மகிழ்ச்சியுடன் இருக்கும் இப்போதைய நாட்களில், அவருக்கு சாகித்திய அகாதமி விருது கிடைத்த செய்தி அளவிலா மகிழ்ச்சியைத் தருகிறது.

திரு.நாஞ்சில் நாடன், உங்களை நேரில் சந்திக்கும்போது தலைகீழ் விகிதங்களுக்காகவே கட்டிப்பிடித்து வாழ்த்துச் சொல்ல எண்ணியிருக்கிறேன். சாகித்திய அகாதமி விருதுக்காக இறுகக் கைப்பிடித்து ஒரு வாழ்த்து உங்களுக்கு.

உண்மையை எழுதுபவனுக்கு சுமை ஏதுமில்லை. அதனால், இந்த விருதின் மூலம் பொறுப்புகள் கூடும் என கவலை கொள்ளத் தேவையில்லை. ஏகாந்தமாக உங்களின் வாழ்க்கை அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டிருங்கள். அதுதான் இலக்கியம் என இன்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

1 comment:

ரைட்டர் நட்சத்திரா said...

எனக்கும் இதே எண்ணங்கள் .