Friday, December 16, 2011

விஷ்ணுபுரம் விருது விழா 2011


தமிழின் ஆகச்சிறந்த இலக்கிய கர்த்தாக்களில் ஒருவரான திரு.ஜெயமோகன் அவர்களின் மிகச்சிறந்த நாவலான “விஷ்ணுபுரம்” பெயரால் ஒரு இலக்கிய வாசகர் வட்டம் உருவாகி அவர்களும், ஜெயமோகன் அவர்களும் இணைந்து தகுதி இருந்தும் இதுவரை கவனிக்கப்படாமல் இருக்கும் எழுத்தாளர்களுக்கு விருதுகளை வழங்கி அவர்களை கௌரவிப்பதுடன், அவர்களின் படைப்புகளை வாசிப்போர்களிடம் கொன்டு செல்வதுடன், ஆய்வுகளுக்கும் உட்படுத்தி எழுத்தாளருக்கும், அவரது படைப்புகளுக்கும் கௌரவத்தை ஏற்படுத்தித் தருகின்றனர்.

குன்றிலிட்ட விளக்கை வெளியில் கொண்டு வரும் ஒரு சிறிய முயற்சியே. இருப்பினும் இந்த அளவு இலக்கிய வாசகர்களை தனது எழுத்துமூலம் இணைத்து ”விஷ்ணுபுரம் விருது” வழங்கும் நிகழ்தலை சாத்தியப்படுத்தி இருக்கிறார் திரு.ஜெயமோகன். அவருக்கும், அவருடன் இணைந்து இலக்கியத்திற்காக தன்னாலான உழைப்பை நல்கும் விஷ்ணுபுர இலக்கிய வட்ட நண்பர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்வரும் காலங்களில் ”விஷ்ணுபுரம் விருது” இலக்கிய விருதை பெறுதல் ஒரு தகுதியாக ஆகும் காலம் கனிக எனவும் வாழ்த்துகிறேன்.



விஷ்ணுபுரம் விருது 2011

தமிழ் இலக்கிய ஆளுமைக்கான வாழ்நாள் விருது

மூத்த எழுத்தாளர் பூமணி அவர்களுக்கு

ஜெயமோகன் எழுதிய பூமணி படைப்புகளின் விமர்சன நூல்

பூக்கும் கருவேலம் நூல் வெளியீடு

டிசம்பர் 18 ஞாயிறு மாலை 6 மணி- கீதா ஹால்,ரயில்நிலையம் எதிரில் , கோவை

கலந்துகொள்ளும் ஆளுமைகள்


எழுத்தாளர் ஜெயமோகன்,

வே.அலெக்ஸ் – அயோத்திதாசர் ஆய்வு நடுவம்

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர்,

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்,

எழுத்தாளர் நாஞ்சில்நாடன்

கன்னட கவிஞர் பிரதீபா நந்தகுமார்,

இயக்குனர் பாரதிராஜா

எழுத்தாளர் பூமணி

உள்ளிட்ட ஆளுமைகள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வுக்கு நண்பர்களை அன்புடன் அழைக்கிறோம்
அன்புடன் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் – தொடர்புக்கு 094421 10123
(குறிப்பு:நிகழ்ச்சி குறித்த நேரத்தில் துவங்கும்)