Wednesday, December 30, 2015

பாஜக அரசின் வெளியுறவுத்துறை

சவுதிகளால் கொடுமைப்படுத்தப்பட்ட இந்தியர்கள் மூவர் கேரளம் திரும்பினர்.
சுஷ்மாவுக்கு வாழ்த்தும், நன்றிகளும் குவிகின்றன.
உண்மையில் சுஷ்மா தன் கடமையைத்தான் செய்துகொண்டிருக்கிறார். ஆனால், பாராட்டு மழையில் நனைகிறார்,
காங்கிரஸ் ஆண்ட காலங்களில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அதிலும் குறிப்பாய் மத்திய கிழக்கில் வாழும் இந்தியர்கள் எல்லாம் மனிதர்களாகவே மதிக்கப்பட்டதில்லை. 
ஒரு பாஸ்போர்ட் ரெனிவலில் ஆரம்பித்து, ஒரு போலிஸ் க்ளியரன்ஸ் சர்டிஃபிகேட் தேவைக்கும், முதலாளி சம்பளம் தராமல் கொல்கிறான், சாப்பாடு இல்லாமல் 3 மாதங்களாக கஷ்டப்படுகிறோம், ஊருக்கு போகக்கூட வழியில்லை என்ற கோர்க்கைகளோடு வரும் இந்தியர்களை இன்றைக்கு குறைந்தபட்ச மரியாதையோடு கையாளும் தூதரகங்கள் அன்றைக்கு அத்தனை கேவலமாய் நடத்தின.வெளியுறவுத்துறை அமைச்சர் என்றால் யாரென்றே தெரியாத அளவுதான் நிலைமை இருந்தது. அல்லது அனுகமுடியாத அளவு.
படித்த மக்களுக்கே அதுதான் நிலையாக இருந்தது. இன்றைக்கு மத்த்ய மந்திரியை ஒரு ட்வீட் மூலம் தொடர்புகொள்ள முடிகிறது. வேலையும் நடக்கிறது.
கடமையைச் செய்தவர்களையே கைதட்டி பாராட்டும் அளவு நாம் இருந்தால் காங்கிரஸ் எப்படி மக்களைக் கையாண்டிருக்கும் என்பதற்கு வேறு ஆதாரங்கள் வேண்டாம்.
இந்த பாராட்டுகளால் மெய்மறந்துவிடாமல் மக்களை காகும் அரசாங்கம் நாம் என்பதை எப்போதும் மனதில்கொள்ளவேண்டியது பாஜக அரசின் கடமை. அதைச் செய்வார்கள் என நான் நம்புகிறேன். ( 27.12.2015ல் எழுதியது)

Monday, December 28, 2015

பொறாமை பிடித்த காங்கிரஸ் Vs நரேந்திர மோதியும்

குண்டு துளைக்காத கூண்டிற்குள் நின்றுகொண்டு வீரவசனத்தையும் மென்று முழுங்கி் பேசிக்கொண்டிருந்த காங்கிரஸ்காரனுக்கு, அப்படியெல்லாம் இல்லாமல் தைரியமாய் என் நாட்டிற்குள் வந்து எவனடா என்னை என்ன செய்துவிடுவான் என தைரியமாய் திறந்த மேடையில் நின்று தேசியக்கொடியை ஏற்றும் நரேந்திரமோடியைக் கண்டால் பொறாமை வருவதும்...
அமெரிக்கா சென்று சொன்ன இடத்தில் கையெழுத்து போட்டுவிட்டு, கொடுத்த சாப்பாட்டை தின்றுவிட்டு அமெரிக்க அதிபரிடம் ஆட்டோகிராஃப் வாங்கி நாட்டை கேவலப்படுத்திய காங்கிரஸ்காரனுக்கு நீங்க சொல்ற இடத்திலெல்லாம் கையெழுத்து போட முடியாது, நாங்க சொல்றமாதிரி மாத்துங்க என ஆண்மையுடன் சொல்லும் நரேந்திர மோதியைக் கண்டால் பொறாமை ஊறுவதும்...
10 ஆண்டுகளாக பாக்கிஸ்தானை எதிர்த்து அறிக்கை விடுவதுகூட சிறுபான்மையின முஸ்லிம்களின் ஓட்டு வங்கியை பாதிக்குமோ என நம் நாட்டின் ராணுவ வீரர்களை சாகடிக்க விட்டு வேடிக்கை பார்த்த காங்கிரஸுக்கு, ஒரு குண்டு நம் எல்லையில் வீழ்ந்தால் 30 குண்டுகளை பாக்கிஸ்தானை நோக்கி செலுத்த உத்தரவிடும் நரேந்திரமோதியைக்கண்டால் பொறாமை வருவதும்..
ராஜதந்திரம் என்றால் கட்சித்தலைவியின் முந்தானையை பிடித்துக்கொண்டு அந்தம்மாள் சொல்லும் உளரல்களைக்கேட்டு நடந்து கொள்வதுதான் என இருக்கும் காங்கிரஸ்காரனுக்கு, உண்மையான ராஜரீக நடவடிக்கைகள் நாட்டில் நடப்பதைக்கண்டால் பொறாமை வருவதும் இயற்கையே..
உன் நாட்டிற்குள் நட்புடன் வருகிறேன் எனச் சொல்லிவிட்டு எதிரி நாட்டுக்குள் காலைவைக்கும் தைரியம் வேண்டும், அதையெல்லாம் மோடியை அகற்ற உதவி செய்யுங்கள் எனக்கேட்கும் மூளையற்ற, பதவி வெறி பிடித்த காங்கிரஸ்காரன் மூளைக்கு எட்டாத விஷயங்கள்..
எனவே அவர்களின் கட்சித்தலைவி சொல்வதைக் கேட்டுக்கொண்டு மீடியாவில் உளரிக்கொட்டுவதே அவர்கள் இப்போதைக்கு செய்ய வேண்டிய முக்கியமான பணி.
அதைச் செய்யுங்கள் காங்கிரஸ் கட்சியின் அடிமைகளே....

பாக்கிஸ்தானில் இரு வல்லவர்கள்

யு டியூபில் பார்த்தால் பாக்கிஸ்தான் டீவிக்களில் இந்தியா குறித்து நடந்த விவாதங்களில் 90 சதவீதம் நரேந்திர மோதியின் நல்லாட்சியை மரியாதையாக பார்ப்பதும், அதே சமயம் என்ன செய்வார் என்றே அனுமானிக்க முடியாத ஆள் என நரேந்திர மோதியைக் குறித்தும், அஜித் டோவல் என்ற மிகப்பெரிய எதிரி என்னென்ன செய்ய காத்திருக்கிறானோ என விவாதிப்பதுமே நிறைய கிடைக்கும்.
பாக்கிஸ்தான் மக்களுக்கும், பயங்கரவாத குழுக்களுக்கும், பாக்கிஸ்தானிய ராணுவத்திற்கும் அஜித் டோவல் மட்டும் கையில் கிடைத்தால் பச்சையாக தின்றுவிடும் அளவு வெறியேற்றப்பட்டிருக்கிறது. ஏனெனில், இந்தியாவில் பல பல்கலைக்கழகங்களிலும், கூட்டங்களிலும் பாக்கிஸ்தானுக்கு நேரடியாகவே எச்சரிக்கை விடுக்கிறார். அதிலும் குறிப்பாய் நீ என்னவெல்லாம் எனக்கு செய்கிறாயோ அதையெல்லாம் உனக்கும் செய்வோம், அதற்கு மேலும் செய்வோம் என பேசுகிறார்.
பாக்கிஸ்தானுக்கு சவாலாக “ மும்பையில் நடத்தியது போன்ற தாக்குதலை இன்னொருமுறை செய்து பார், நீ பலுச்சிஸ்தானத்தை இழப்பாய்” எனச் சொல்கிறார்.
இன்றைக்கு பாக்கிஸ்தானுக்கு சென்ற இருவர் யாரென பார்த்தால் நரேந்திர மோதியும், அஜித் டோவலும்தான். smile emoticon
எதிராளியின் குகைக்குள் சென்று எதிரியின் பிடறியை பிடித்து ஆட்டுவதென்பது இதுதான். ஆனால், எதிரிக்கும் நம் பிடறியை பிடித்து ஆட்டுகிறார்கள் என்பதே தெரியாமல் செய்துவிட்டு வந்திருக்கிறார்கள் இருவரும்..
ஒருசில பாக்கிஸ்தானிகள் மிகச்சரியாக பிடித்துவிட்டார்கள், இந்த விஷயத்தை.
இந்தியா வழக்கம்போல அட்டகாசமாக திட்டமிட்டு நவாஸ் ஷெரிப்புக்கு ஏர்போர்ட்டுக்கு வந்து அழைத்துச் செல்ல சம்மன் அனுப்பி அதில் வெற்றியும்கண்டிருக்கிறது என்கிறது ஒரு டிவீட்.
அதுதான் காங்கிரஸ் கட்சிக்கு எரிச்சலும், பொறாமையும்.

திருமாவளவன் சாதிவெறி பேச்சு





ஒரு சமூகம் முட்டிமோதி மேலெழ உறுதுனையாய் இருக்கவேண்டியது அந்த ஜாதி அல்லது ஜாதிகளின் கூட்டமைப்பின் தலைவர்கள். அவர்களுக்கு நல்ல வழிகாட்டியாய், எப்படி உயரவேண்டும் என்பதற்கு தன்னையே எடுத்துக்காட்டய் கொள்ளுமளவு வாழ்ந்து காட்டுதல் அச்சாதியினரை முன்னேற்ற உதவும்.
ஆனால், நாம் பார்க்கும் தலைவர்கள் ஜாதிக்கட்சியின் தலைவராய் தன்னை முன்னிறுத்திக்கொண்டு, அந்தச் சமூகத்தை குறித்து என்னென்ன குற்றச்சாட்டுகள் பொதுவில் உண்டோ அத்தனையையும் மெய்ப்பிக்கும் விதமாக மேடையில் கைதட்டலுக்காக பேசி இதர சமூகத்தினரிலிருந்து அந்நியப்படுத்தும் வேலையை கனகச்சிதமாக செய்கின்றனர்.
இந்தச் செய்கையை நான் நல்லா இருந்தா போதும், என்னை நம்பி வருபவர்கள் அழிந்தாலும் பரவாயில்லை என நினைக்கும் எண்ணம் கொண்ட தலைவர்கள் மட்டுமே செய்வர்.
இன்றைய எடுத்துக்காட்டு தொல்.திருமாவளவன்,
உண்மையில் தலித் சகோதரர்கள் இப்படிப்பட்ட தலைவர்களை நம்பி தங்கள் வாழ்க்கையையே இழந்துகொண்டிருக்கின்றனர்.
இனியேனும் நல்ல தலைவர்களை தேடாமல் அச்சமூகத்திலிருந்தே தன் சமூகத்தை காட்டிக்கொடுக்காத, பிற கட்சியினரிடம், பிற சமூகத்திடம் அடகு வைக்காத தலைவர்கள் உருவாவதே ஒரே வழி.
தொல்.திருமாவளவனின் வீடியோ கிடைத்ததால் நாம் இதை பேசுகிறோம். இதைப்போல இன்னும் யார் யாரெல்லாம் தங்கள் சமூகத்தை இவ்வாறாக “வழிநடத்தி”க்கொண்டிருக்கிறார்களோ...அவர்களுக்கே வெளிச்சம்.


நேபாளம் - நரகத்தில் வாழும் மக்கள்.

20.09.2015 - இடைக்கால அரசியலமைப்புச்சட்டத்தை நீக்கி புதிய அரசியலமைப்புச்சட்டத்தை அமல்படுத்திய நாள். எல்லோரும் மகிழ்வுடன் கொண்டாடவேண்டிய நேரத்தில் நேபாளத்தில் காலம்காலமாய் வாழ்ந்துவரும் மாதேசிகள் என்ற இந்திய வம்சாவழியை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் குதித்தனர். ஏற்கனவே பூகம்பத்தால் பல ஆயிரம் உயிர்களை பலிகொடுத்து, பல்லாயிரம்கோடி மதிப்புள்ள சொத்துக்களை இழந்து நிமிர முயற்சி செய்யும் நேரத்தில் மாதேசிகளின் கோரிக்கையான அரசியலமைப்பில் திருத்தம் வேண்டிய போராட்டம் விஸ்வரூபமெடுத்தது.
2015, செப்டம்பர் 23ம் தேதி ஆரம்பித்த இந்த போராட்டத்தால் நேபாள நாடே முழுதும் பாதிக்கப்பட்டது. நிலத்தால் சூழப்பட்ட நேபாள நாட்டின் 90 சதவிகித தேவைகளை இந்தியாவே தீர்க்கிறது. போராட்டக்காரர்களின் இலக்கு இந்தியாவிலிருந்துவரும் பொருட்களை நேபாளத்திற்குள் வரவிடாமல் செய்வதே. அதில் வெற்றியும் கண்டதால் நேபாளமே ஸ்தம்பித்தது. மிக மோசமாக அடிவாங்கியது நேபாள தொழில் துறையும், போக்குவரத்துமே. தொழில்களுக்கு தேவையான கச்சாப்பொருள் கிடைக்காததால் நேபாள தொழில்துறை காலவரையின்றி மூடப்பட்டன. எரிபொருள் எதுவும் கிடைக்காததால் வாகனங்கள் ஓடவில்லை, இருக்கும் எரிபொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்தது. வீடுகளில் மண்ணென்ணெய், கேஸ் என ஏதுமின்றி மக்கள் மீண்டும் பழைய முறையான விறகு அடுப்புகளில் சமைக்க வேண்டியிருக்கிறது.
இதன் பாதிப்பு நேபாளத்தின் வருவாயின் உயிர்நாடியான சுற்றுலாத்துறையிலும் எதிரொலிக்கிறது. ஆசிய வங்கியின் கணக்குப்படி இந்த ஆண்டு இருக்க வேண்டிய வளர்ச்சி விகிதமான 4.5 சதவீதம் இந்த போராட்டத்தினால் 1% வளர்ச்சி அடைவதே கடினம் என சொல்லி இருக்கிறது.
யார் இந்த மாதேசிகள்? அவர்களுக்கு என்ன வேண்டும்?
நேபாளத்தின் டெராய் பகுதியைச் சேர்ந்த மக்கள். பெரும்பாலும் இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் இருந்து குடிபெயர்ந்தவர்கள். நேபாள மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர்.
அவர்களின் கோரிக்கைகள் என்ன?
01. மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு இருக்கும் எங்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் அதிக பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும்.
02. மாநிலங்கள் பிரித்த வகையில் வேண்டுமென்றே எங்கள் மக்கள் வாழும் பகுதிகளை கூறுபோட்டு எங்களுக்கான பிரதிந்தித்துவம் கிடைக்காமல் செய்ததை திரும்பப்பெற்று மீண்டும் மாதேசிகள் வாழும் பகுதிகளை ஒன்றாக்க வேண்டும்.
மாதேசிகளை பொருத்தவரை புதிய அரசியலமைப்புச் சட்டம் மாதேசிகளின் கோரிக்கைகள், கருத்துகள் எதையும் கேளாமல் வலுக்கட்டாயமாக பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது என்பதே. அவர்களின் போராட்டம் உரிமைப்போராட்டம் என்கின்றனர்.
தற்போது இந்த உள்நாட்டுச் சண்டையில் அரசுக்கும், மாதேசிக்கும் நடுவில் பேச்சுவார்த்தை நடத்த முன் வந்திருப்பவர் நேபாள மாவோயிச கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிரச்சாந்தா. இவர் எப்போதுமே இந்திய எதிர்ப்பாளர். இவரால் பிரச்சினை அதிகரிக்கலாமே தவிர குறைய வாய்ப்பில்லை. போராட்டக்காரர்களுக்கும், அரசுக்கும் நடுவே பாலமாய் இருக்க விரும்புகிறேன் எனச் சொல்லி இந்த தரகு வேலையில் ஈடுபட்டிருக்கிறார்.
இந்திய அரசின் நிலைப்பாடு
இந்திய அரசாங்கத்தைப்பொருத்தவரை எந்தவித பொருளாதார தடையையும் விதிக்கவில்லை. நேபாளத்தில் நடக்கும் உள்நாட்டுக்கலவரத்தால் வாகனங்களில் பொருளைக்கொண்டு செல்வோர் அச்சப்படுவதால் நேபாளத்திற்குள் பொருட்கள் வரவில்லை. இந்த தடைகளுக்கும், இந்திய அரசுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என நிலையை தெளிவாக்கியுள்ளது. ஆனால், இது உண்மையா என்றால், பாதி உண்மை, பாதி உண்மை இல்லை.
நேபாளத்தின் மொத்த மக்கள் தொகை 2.8 கோடி மட்டுமே. ஒப்பீட்டுக்கு சொன்னால் சென்னையும் அதைச்சுற்றியுள்ள 8 மாவட்டங்களை சேர்த்தால் இருக்கும் மக்கள் தொகையே நேபாள நாட்டின் மக்கள் தொகை. இந்தியா நினைத்திருந்தால் உதவ வழி கண்டுபிடித்திருக்கலாம். ஆனால், கலவரத்தில் வழிபிறக்கட்டும் என விட்டுவிட்டனர். ஏனெனில், போராட்டக்காரர்கள் இந்திய வம்சாவழியினர் என்பதால்.
நேபாளத்தின் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பின்னர் பிரதமர் நரேந்திர மோடியைக்குறித்து நேபாள மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பும், இந்தியா என்ற பெரியண்ணன் நமக்கு நிறைய உதவுவார் என்ற எண்ணமும் இருந்தது. ஆனால், தற்போதைய அறிவிக்கப்படாத பொருளாதார தடையினால் இந்தியா மீதும், இந்திய மத்திய அரசாங்கத்தின் மீதும் பெரும் எரிச்சலையும், இந்திய விரோத மனப்பான்மையையும் கொண்டுவந்திருக்கிறது என்றால் அது மிகையில்லை.
இருதினங்களுக்கு முன்னர் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆன ஒரு ஹேஷ் டாக் ‪#‎BackofIndia‬ ‪#‎IndaSTOPbullyingNepal‬ என்பன.
கிட்டத்தட்ட மூன்றுமாதத்திற்கும் மேலான இந்த போராட்டத்தால் அரசியல் சாசனத்தில் சில திருத்தங்களை ஏற்படுத்த ஒத்துக்கொண்டுள்ளது நேபாள பாராளுமன்றம். ஆனால், நேபாள பாராளுமன்றம் செய்வதாக சொல்லி இருக்கும் திருத்தங்கள் தங்களுக்கு திருப்தி கிடையாது எனச் சொல்லி இருக்கிறார்கள் மாதேசிகள்.
இதற்கு நடுவே நிலைமையை சமாளிக்க நேபாளம் சீனாவுடன் சில நீண்டகால ஒப்பந்தங்களை கையெழுத்திட்டுள்ளது, குறிப்பாக தடையற்ற எரிபொருள் சப்ளையும் அதில் அடங்கும். சீனாவுடன் நேபாளம் பகிரும் எல்லைகளில் மேலும் பல எல்லைச்சாவடிகளை அமைத்தும், பழைய எல்லைச்சாவடிகளை புதிப்பிக்கவும் இருநாடுகளும் திட்டமிட்டுள்ளன. நேபாளம் இந்தியாவுடன் உறவு நன்றாக இருக்கும் காலத்திலேயே நேபாளத்தை சீனாவுடன் இணைக்கும் சாலையை இந்திய எதிர்ப்பையும் மீறி செயல்படுத்தியது. அதனால், இதை இந்தியாவுக்கான பின்னடைவு எனக்கொள்ளாமல், தற்காலிக கோபமாக கொள்ளலாம். ஏனெனில், கூப்பிடு தூரத்தில் இருப்பது இந்தியா மட்டுமே. நம்முடனே நேபாளிகள் கொண்டும், கொடுத்தும் வாங்கியும் இருந்திருக்கிறார்கள், நமது மதம், கலாச்சாரம் எல்லாம் பிண்ணிப்பிணைந்தது.
நேபாள பத்திரிக்கைகளின் தலையங்கங்களும் இந்தியா மீது நேபாளிகள் வைத்திருக்கும் நன்மதிப்பை இழந்துகொண்டிருக்கிறது. நேபாளத்தின் சுயமரியாதையை அளவுக்கு மீறி சீண்டினால் இந்திய வெறுப்பு எல்லை மீறும் எனவும் எச்சரிக்கும் வேளையில் ஆளும் அரசாங்கத்திற்கும் பிரச்சினைக்கு சுமூக தீர்வு விரைவில் கண்டு பிரச்சினையை தீர்க்கும்படியும் அறிவுறுத்துகிறது.
எழுதப்படிக்கத்தெரிந்த நேபாளிகள் ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் இந்தியாவுக்கு எதிராக எழுதிக்கொண்டுள்ளனர். அவர்களின் வார்த்தைகளில் தெரிவதெல்லாம் இயலாமையும், கோபமுமே. உங்களையே நாங்கள் சார்ந்து இருப்பதால்தான் இப்படி கேவலப்படுத்துகிறீர்கள், அத்யாவசியப்பொருட்கள்கூட கிடைக்காத அளவு எங்களை நெருக்கடிக்கு உள்ளாக்குகிறீர்கள் எனக்கேள்வி எழுப்புகின்றனர்.
இதில், எரியும்வீட்டில் பிடுங்கியது லாபம் என்ற எண்ணத்தில் மணிசங்கர் அய்யர் போன்றோர் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் வேலையை திறம்பட செய்கின்றனர். மாதேசிகள் பிரச்சினையைப்பற்றி ஒரு வார்த்தைக்கூட பேசாமல், நேபாளத்தில் இருக்கும் அறிவிக்கப்படாத பொருளாதாரதடை நரேந்திர மோடி உண்டாக்கியது என என்.டி.டிவியில் கட்டுரை எழுதுகிறார்.
மாதேசிகள் பிரச்சினை, கலவரம், மேலும் இந்திய வாகன ஓட்டுநர்கள் நேபாளத்திற்குள் செல்ல பயப்படுகிறார்கள் என்பதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், தனது தேவைகளுக்கு இந்தியாவையே நம்பியிருக்கும் ஒருநாட்டை இப்படி கையை முறுக்குவது சரியல்ல என்பதே எனது எண்ணம்.

லவ் ஜிகாத் எனும் சமூக பயங்கரம்.

”கழுத்தை நெறிச்சு கொன்னுடுவேன்...”
” தீ வச்சி கொளுத்திருவேன்...”
”கேவலமான படங்களை எடுத்து அனுப்பு...”
”இஸ்லாத்துக்கு மதம் மாறி என்னைய கல்யாணம் செஞ்சிக்கோ”
என காதலை முறித்துக்கொண்டு சென்ற பெண்ணை டார்ச்சர் செய்த ஒருவர் சொன்ன அன்பு மொழிகளே மேலுள்ளது.
வேலை செய்யப்போன பெண்ணை இவன் கொடுத்த டார்ச்சரால் பிரச்சினையை முடிப்போம் என ஊருக்கு வந்த பெண்ணை கடத்தி மூன்று நாட்களாக பாத்ரூமில் வைத்து சித்திரவதை செய்திருக்கிறான், இந்த கொடூரன்.
இஸ்லாமியர்களுக்கு படிப்பறிவில்லை, அதனால்தான் கள்ளக்கடத்தலிலும், குண்டுவைக்கவும் போகிறார்கள், என்போர்களுக்கு,
இந்த லவ் ஜிகாத்தை செய்தவர் டெல் கம்பெனியில் வேலை செய்பவர் என்பது உங்கள் தகவலுக்கு.
லவ் ஜிகாத்தா? அது எங்கையோ ஆஸ்த்ரேலியா, அமெரிக்கா பக்கம் இருக்கு என்போர் வழக்கம்போல கண்களைமூடிக்கொண்டு உலகில் எதுவும் நடந்துவிடவில்லை என அவர்களின் உலகில் மகிழ்ச்சியாய் இருக்கலாம்.

மேலுள்ளதைக்குறித்து வந்த செய்தி இங்கே

27.12.2015ல் எழுதியது