Monday, September 28, 2015

பாரதப்பிரதமர் அமெரிக்காவின் மேடிசன் ஸ்கொயர் பேச்சின் தமிழாக்கம்

பாரதப்பிரதமர் அமெரிக்காவின் மேடிசன் ஸ்கொயர் கார்டனில் பேசிக்கொண்டிருப்பதிலிருந்து சில துளிகள் .. எனக்குத் தெரிந்த மொழி பெயர்ப்பில்.. :) 

( இதை நான் அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே மொழி பெயர்த்து ஃபேஸ்புக்கில் இட்டுக்கொண்டிருந்தேன், 28, செப்டம்பர், 2014ல்)



உங்களிடமிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தூரத்தில் இருக்கிறேன், இருப்பினும் உங்கள் வலியை நான் அறிவேன். (ஏர்போர்ட் லஞ்சம், விசா வாங்குவதில் இருக்கும் லஞ்சம் இவைகாஇ வைத்து) அமெரிக்காவில் உலகம் முழுதும் உள்ள மக்கள் வந்து சேர்கிறார்கள், ஆனால், இந்தியர்கள் உலகம் முழுதும் சென்று சேர்கிறர்கள். இந்தியர்கள் இல்லாத இடம் உண்டா உலகில்? 

ஒவ்வொரு யுகத்திலும் மஹா புருஷர்கள் நாட்டுக்காக பலிதானமாக தன்னையே தந்திருக்கிறார்கள். அவர்கள் நாட்டுக்காக உழைத்தார்கள், வாரிசுகள் வந்தார்கள், போனார்கள். ஆனால் மஹாத்மா காந்தி இன்னொரு முறையில் நாட்டுக்காக உழைத்தார். குழந்தைக்கு பாடம் சொல்லிக் கொடுத்தாலும், ஒருவனுக்கு உண்ண உணவு தந்தாலும், கூட்டிப்பெருக்கினாலும், அவரது ஒவ்வொரு செயலும் நாட்டின் விடுதலைக்காக செய்வதாகவே செய்தார். அதேபோல நாம் நாட்டு மக்களும் என் குழந்தைக்கு நல்ல கல்வி கொடுக்கிறேன் அதன் மூலம் நாட்டுக்காக நானும் உழைக்கிறேன் என்பதை உணரவேண்டும். நாட்டின் பிரதமரைவிட நற்செயலை நானும் செய்கிறேன் என மகிழ்ச்சி கொண்டு செய்வதை நாட்டுக்காக சிறப்பாக செய்ய வேண்டும். 

125 கோடிப்பேர்களும் என்ன செய்தாலும் அதை நாட்டுக்காக செய்கிறேன் என உணர்ந்து செய்ய வேண்டும் எனது எந்த ஒரு செயலும் நாட்டுக்கு நன்மை பயக்க வேண்டுமே தவிர எந்த விதத்திலும் நாட்டுக்கு கெடுதலை உண்டாக்கிவிடக்கூடாது என்பதை உணர்ந்து செய்ய வேண்டும். உலகம் முழுக்க இன்றைக்கு வயதானவர்களே நிறைந்திருக்கிறார்கள். உலகம் முழுக்க உழைக்கும் மக்களுக்கு தேவை உள்ளது. நாம் நல்ல திறமையான உழைக்கும்வர்க்கத்தை உலகம் முழுக்க அனுப்புவோம். அஹமதாபாத்தில் ஒரு கிலோமீட்டர் ஆட்டோ ரிக்‌ஷாவில் செல்ல 10 ரூபாயாவது ஆகும். ஆனால், செவ்வாய்க்குச் செல்ல நாம் வெறும் 7 ரூபாய்தான் கிலோமீட்டருக்கு செலவழித்தோம். :) அதுமட்டுமல்ல, செவ்வாய்க்கு சென்று சேர்வதில் முதல் முறையிலேயே வெற்றியும் பெற்ற நாடும் நம்முடையது. தரையிலும், செவ்வாயிலும் இந்தியாவும் அமெரிக்காவும் ஒரே சமயத்தில் பேசிக்கொண்டிருக்கிறது. நம்முடைய செயற்கைக்கோளும், அமெரிக்க செயற்கைக்கோளும் இரு தினங்கள் வித்யாசத்தில் சென்று சேர்ந்ததை நகைச்சுவையாக குறிப்பிட்டார். மேலும் ஹாலிவுட் சினிமா தயாரிப்பு செலவை விட குறைந்த செலவில் செவ்வாய் சென்று சேர்ந்துவிட்டோம். இருவிதமான ஸ்கில் டெவலமெண்ட்டை குறி வைத்திருக்கிறோம். ஒருவர் வேலை கொடுக்கும் அளவு திறமைவாய்ந்தவராக்குவது. அப்படி முடியாதோருக்கு, சிறப்பாக வேலை செய்யத்தெரிந்தவராக்குவது...

தேர்தலில் கேட்டிருப்பீர்கள்.. நாங்கள் இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்தோம், அந்தச் சட்டத்தைக் கொண்டுவந்தோம் என சொல்பவர்களை...(காங்கிரஸை கிண்டல் செய்து) நான் வேறு வேலையை ஆரம்பித்தேன்.. நாட்டின் பழமையான சட்டங்களை ஒழிக்கும் வேலையை ஆரம்பித்தேன்.. ஒரு எக்ஸ்பர்ட் கமிட்டியை வைத்து தேவையில்லாத சட்டங்களை எடுத்துக்கொண்டிருக்கிறேன். ஒரு நாளைக்கு ஒரு சட்டத்தை நீக்க முடிந்தால் எனக்கு மிகவும் ஆனந்தமாய் இருக்கும்.

நீங்கள் பேப்பரில் படித்திருப்பீர்கள். தில்லியில் அரசாங்க ஊழியர்கள் சரியான நேரத்துக்கு வேலைக்கு வருகிறார்கள் என, நீங்களே சொல்லுங்கப்பா, இது ஒரு செய்தியாய்யா? இதை செய்தியாக்கும் அளவு நிலை. நேரத்துக்கு வேலைக்குச் செல்வது உங்களின் பொறுப்பில்லையா? இது ஒரு செய்தியா? ஆனால், நிலை அப்படி இருந்தது.. நாட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்திருக்கிறோம்.. எனக்கு தெரியும், நீங்கள் இதை வரவேற்பீர்கள்.. ( டெல்லியில் வேலைக்கு நேரத்துக்கு வராததைக் (இதற்கு முன்னால்) கிண்டல் செய்ய ஆரம்பித்து பின்னர் நாடை சுத்தம் செய்யும் பிரதமரின் திட்டத்தை அதன் பின்னால் சொல்லும் மோடியின் திறமை..

ஒரு பிரதம மந்திரி செய்யும் வேலையா இது என உலகம் நினைக்கலாம்.. ஆனால், மக்களுக்கு கழிப்பிட வசதி செய்து தருவதை நானே செய்ய ஆரம்பிப்பேன். சில சமயம் பலர் என்னிடம் கேட்பார்கள்.. மோடி ஜி, பெரிய விஷன் செய்யுங்களேன் என.. ( இதைக் கிண்டல் தொனியில் சொல்கிறார்) நான் அவர்களிடம், பாருங்கப்பா, நான் டீ வித்துக்கிட்டிருந்து மேல வந்தவன்.. ( கூட்டம் எழுந்து நின்று கைதட்டி ஆர்ப்பரிக்கிறது) நான் ரொம்ப சின்ன ஆளு, வெகு சாதாரனன், என் குழந்தைப்பருவமும் இப்படித்தான் இருந்தது. என் மனதும் சிறியது. அதனால்தான் சாமான்யர்களுக்கு உதவும் சிறு சிறு வேலைகளில் என் மனது செல்கிறது. ( டாய்லட் கட்டுவதை கிண்டல் செய்து பெரிய விஷயமா செய்யுங்கள் எனச் சொல்வோர்களுக்கு பதிலாக சொல்லியது) சிறு சிறு வேலைகள் செய்து பிழைப்பவர்களுக்கு பெரிய பெரிய வேலைகள் செய்துதர மனது விளைகிறது.

சொல்லுங்கள்.. உங்கள் அம்மா அப்பாவை கங்கையில் குளிக்கவைக்க ஒருமுறையாவது அழைத்துச் செல்லவேண்டும் என தோன்றியதில்லை என? ஒவ்வொருவர் மனதிலும் இருக்கும் ஆசை இது, (கங்கையில் ஒருமுறையாவது குளிப்பது) ஆனால் நாம் படிக்கிறோம், கங்கை மாசுபட்டிருக்கிறதென. நீங்கள் சொல்லுங்கள் கங்கையை சுத்தம் செய்ய வேண்டுமா வேண்டாமா? என்னுடன் நீங்களும் கங்கையை சுத்தம் செய்வதில் உதவ வேண்டுமா, வேண்டாமா? ( கூட்டம் வேண்டும் வேண்டும் எனச் சொல்கிறது) எனக்கு உதவுவீர்களா? (கங்கையை சுத்தம் செய்ய) செய்வோம் என கூட்டம் சொல்கிறது. சகோதர சகோதரிகளே, இன்றுவரை ஆயிரக்காணக்கான கோடிகள் செலவழிக்கப்பட்டுள்ளது. 

நான் இந்த விஷயத்தை கையில் எடுத்ததும் எல்லோரும் மோதிஜி உங்களை நீங்களே அடித்துக்கொள்கிறீர்கள். இதில் ஏன் கையை வைக்கிறீர்கள்? இப்படிப்பட்ட விஷயங்களில் நான் கையை வைக்காவிடில் மக்கள் என்னை பிரதமர் ஆக்கியிருக்க மாட்டார்கள். கஷ்டமான வேலைகளைச் செய்யத்தானே என்னைத்தேர்ந்தெடுத்துள்ளனர்? 125 கோடி மக்களுக்கு இருக்கும் ஆசைதான் எனக்குள்ளும் இருக்கிறது. (கங்கையை சுத்தம் செய்ய) உலகின் சுற்றுச்சூழல் பார்வையிலும் கங்கையின் சுத்தம் மிக அவசியமானது. அது மட்டுமல்ல கங்கையின் கரைகளில் இருக்கும் உத்தரகண்ட்டாகட்டும்,பீஹாராகட்டும், உத்திரப்பிரதேசமாகட்டும், வங்காளமாகட்டும் என கங்கை நதிபாயும் இடங்களில் 40 சதவீத மக்களின் வாழ்வாதாரமாக கங்கை திகழ்கிறது.. இதைச் சுத்தம் செய்யாவிடில் இந்தக் கரையில் வாழும் 40 சதவீத மக்களின் வாழ்க்கை சிதிலமாவதுடன், இதை வைத்து ஒரு பொருளாதார அஜெண்டாவும் உள்ளது. 

2019ல் மஹாத்மா காந்திஜி பிறந்து 150 ஆண்டுகள் ஆகின்றது. மஹாத்மா காந்தி நமக்கு சுதந்திரம் கொடுத்தார். நாம் மஹாத்மா காந்திக்கு என்ன திருப்பிக்கொடுத்தோம்? ஒவ்வொரு இந்தியனும் தன்னைத்தானே இதைக் கேட்டுக்கொள்ள வேண்டுமா, வேண்டாமா, நீங்களே சொல்லுங்கள்.. என்றைக்காவது காந்தி ஜியை சந்திக்க நேர்ந்தால் இந்தக்கேள்விக்கு நம்மால் பதில் சொல்ல இயலுமா? அதனால், அவரது 150 ஆண்டுவிழாவின்போது நாம் அவருக்கு பிரியமானதைச் செய்வோம். அவருக்கு பிடித்தமானதில் ஒன்று விடுதலை அல்லது சுதந்திரம். இன்னொன்று அவருக்கு பிடித்தது சுத்தம். காந்தியடிகள் சுத்தத்தில் சமரசம் செய்து கொண்டதில்லை. மிகப்பிடிவாதமாக இருந்தார். (சுத்தத்தை பேணுவதில்) காந்தியடிகள் பாரத மாதாவை அடிமைத்தளையிலிருந்து மீட்டார். பாரதமாதாவை அசுத்தத்திலிருந்து மீட்பது நமது கடமையா, இல்லையா? 

2019ம் ஆண்டு வரும் காந்தியடிகளின் 150வது பிறந்த நாளின்போது சுத்தமான இந்தியாவை காந்தியடிகளின் காலடிகளில் நாம் சமர்ப்பிக்க முடியாதா? எந்த மஹா புருஷர் நமக்கு விடுதலை வாங்கித்தந்தாரோ அவருக்கு நாம் இதைத்தரமுடியுமா, முடியாதா? கொடுக்க வேண்டுமா? வேண்டாமா? இந்த பொறுப்பை நாம் ஏற்க வேண்டுமா, வேண்டாமா? எப்போது இந்தியாவின் 125 கோடி மக்களும் நான் இந்தியாவை அசுத்தபடுத்தமாட்டேன் என உறுதி எடுத்துக்கொண்டால் இந்தியாவை வேறு எந்த சக்தியாலும் அசிங்கப்படுத்திவிட முடியாது.

2022ல் நாம் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் பூர்த்தியாகும். எனக்கு ஒரு கனவு இருக்கிறது. இந்தியாவின் சரித்திரத்தில் 75ஆண்டுகள் என்பது மிக முக்கியமான பகுதி. உங்களின் ஆசிர்வாதங்களுடன் இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் பூர்த்தியாகும் 2022ம் ஆண்டுக்குள் இந்தியாவின் எந்த ஒரு குடிமகனுக்கும் இருக்க இடமில்லை என்ற நிலையில் இருந்து மீட்போம். நான் உங்களுக்கு இது போன்ற சின்னச் சின்ன விஷயங்களைச் சொல்லிச் செல்கிறேன். ஆனால் இந்த சின்னச் சின்ன விஷயங்களே இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றப்போகின்றவைகள். இந்த தலையெழுத்தை மாற்றும் வேலையில் நாம் அனைவரும் இணைவோம்.

 2015, அடுத்த ஆண்டு, மிக முக்கியமான ஆண்டு. நீங்கள் அனைவரும் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள். இந்தியாவிலிருந்து வெளியே வந்திருக்கிறீர்கள். உங்களைப்போலவே மோகந்தாஸ் கரம் சந்த் காந்தியும் வெளிநாட்டில் வாழும் இந்தியராய் இருந்தார்.

ஜனவரி1915ம் ஆண்டு இந்தியா திரும்பி வந்தார். ஜனவரி 2015ம் ஆண்டு காந்தி இந்தியா திரும்பி வந்து 100 ஆண்டுகள் ஆகின்றது. ஜனவரி 8 மற்றும் 9 தேதிகளில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் தினம் கொண்டாடப்படுகிறது. உங்களைப்போன்றோர் பலர் வருகிறார்கள். இந்த ஆண்டு வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம் அடுத்த ஆண்டு அஹமதாபாத்தில் நடைபெற இருக்கிறது. காந்தியடிகள் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்து 100 ஆண்டுகள் ஆகிறது. அவரும் வெளிநாடு சென்றார், பாரிஸ்டர் ஆனார், நிறைய சாதித்தார், ஆனால், நாட்டுக்காக உழைக்கவே விரும்பினார். நனும் உங்களை திறந்த கைகளுடன் அழைக்கிரேன், வாருங்கள், நம் தாய் நாட்டிற்கு உழைக்க வாருங்கள் என அழைக்கிறேன். (நிறைய ஹிந்தி வார்த்தைகளின் அர்த்தம் இந்த இடத்தில் பிடிபடவில்லை) 

பி.ஐ ஓ கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஆயுட்கால விசா வழங்க தீர்மானித்திருக்கிறோம். (கூட்டத்தினரைப்பாத்து) மகிழ்ச்சிதானே? மேலும் இந்தியாவில் நீண்ட நாள் தங்கி இருப்போர் (பி ஐ ஓ கார்டு ஹோல்டர்ஸ்) காவல் நிலையம் செல்ல வேண்டியுள்ளது. இனிமேல் நீங்கள் காவல் நிலையம் செல்ல வேண்டியதில்லை. இன்னும் சில மாதங்களில் பி ஐ ஓ மற்றும் ஓ சி ஐ சி ஓ இரண்டையும் ஒன்றாக இணைத்து ஒன்றாக்கி விடுவோம். அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வரும் அமெரிக்க குடிமக்களுக்கு நீண்டகால விசாக்கள் வழங்கப்படும். இந்தியாவுக்கு பயணமாக வரும் அமெரிக்கர்களுக்கு விசா ஆன் அரைவல் வழங்கப்படும். 

இறுதியில் நன்றிஉரையில் நீங்கள் அனைவரும் எனக்கு மிக அதிகமாக அன்பை வழங்கியுள்ளீர்கள். இதுவரை எந்த தலைவர்களுக்கும் இதுபோன்றதொரு வரவேற்பு கிடைத்திருக்காது என நினைக்கிறேன். இதற்கு கைம்மாறாக நீங்கள் விரும்பும் இந்தியாவை உருவாக்கிக்காட்டுவேன் என உறுதி ஏற்கிறேன். நாம் இணைந்து பாரத அன்னைக்கு சேவை செய்வோம். நம்மால் முடிந்ததை நம் நாட்டு மக்களுக்கு சேவை செய்வோம். நாம் படித்த பள்ளி, கல்லூரி எல்லாவற்றுக்கும் நம்மால் முடிந்ததைச் செய்வோம். அனைவருக்கும் இதயபூர்வமான நன்றிகள். பாரத் மாதா கி ஜெய் பாரத் மாதா கி ஜெய் பாரத் மாதா கி ஜெய்


Sunday, September 20, 2015

Selfie from Hell ( த்ரில்லர் குறும்படம்)



ஒரு குறும்படம் என்பதற்கான இலக்கணம் அதிகபட்சம் 5 நிமிடங்கள் இருக்கலாம். சினிமா தவிர வேறெதையும் 5 நிமிடங்களுக்கு மேல் பார்க்க முடிவதில்லை, முதல் சீனிலேயே நம்மை கட்டிப்போட்டால்தான் அடுத்த 5 நிமிடங்களையும் பார்க்கும் அளவு பொறுமை குறைந்து போய்க்கொண்டிருக்கிறோம்.

ஒரு நிமிடம் 41 விநாடிகளுக்குள் ஒரு செமையான த்ரில்லர் குறும்படம். :)

கேபிள் சங்கர் ட்விட்டரில் ஷேர் செய்திருந்தார். அருமையாக இருந்ததால் நானும் என் பக்கத்தில் பதிந்துகொண்டேன்.