Monday, April 6, 2009

எதிர்பாரா சந்திப்புகள்

எதிர்பாரா சந்திப்புகள்..

திண்டுக்கல்லில் வேலை அஸ்தமனத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தபோது அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் என்னென்ன கம்பெனிகள் உண்டோ அத்தனைக்கும் விண்ணப்பம் அனுப்பிக் காத்துக்கொண்டிருந்தபோது வாராது வந்த மாமணீயாய் வெளிநாட்டில் வேலைக்கான ஒரு நேர்முகத்தேர்வுக்கு அழைப்பு வந்தது.

அதன் பின்னர் நேர்முகத்தில் தேர்வாகி பின்னர் ஓமானிலுள்ள மஸ்கட்டில் வேலைக்காக புறப்பட்டேன்.

அங்கு நடக்கும் ஆரம்பகால சடங்குகளுக்குப் பின்னர் எனக்கான குழுவும் பிரித்துக் கொடுக்கப்பட்டது. (தோட்டக்கலை மேற்பார்வையாளர்)

அதாவது நானும் எனது குழுவில் 15 தோட்டத்தொழிலாளர்களுமாக அமைந்தோம்..

எல்லாம் சரியாக போய்க்கொண்டிருந்தபோது ஒரு ஆள், சார், நீங்க வெள்ளரி கம்பெனி மேனேஜர்தான என்றார்.. ஆமா எப்படி கண்டுபுடிச்சீங்க அல்லது எப்படித்தெரியும் என்றேன்..

சார் நான் உங்க கூட சண்டை போட்டிருக்கேன் என்று அன்பாக அறிமுகம் செய்து கொண்டார்.

ஒரு சிறிய அறிமுகம்..

வெளிநாட்டுக்கு போவதற்கு முன்னர் நான் வெள்ளரிக்காயை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது கிராமங்களில் சென்று விவசாயிகளுக்கு எப்படிப் பயிர் செய்வது, என்னென்ன மருந்து எப்போது அடிக்கவேண்டும் இன்னபிற தகவலைத்தருவதுதான் எனது பணி. அதில் கிட்டத்தட்ட 100 விவசாயிகளுக்கு மேலேயே இருப்பார்கள். யாரைப்பார்த்தோம், யாரைப் பார்க்கவில்லை என ஞாபகம் வைத்துக் கொள்வது கடினம். அதில்தான் இந்த நபரும் ஒருவர். அவரது வெள்ளரிக்காய்களை தரத்தினடிப்படியில் நிராகரிக்க வேண்டியதாயிருந்தது. அதெப்படி செய்யலாம் என சண்டை.. அதைத்தான் அவர் குறிப்பிட்டு அறிமுகம் செய்து கொண்டார்..

வெரி ஸ்மால் வேர்ல்டுங்க.. என கமலஹாசன் சதிலீலாவதியில் சொல்வதுபோல எங்கோ பிறந்து திண்டுக்கல் நத்தத்திற்கு அருகில் ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவரை வேலை நிமித்தமாய் சந்தித்தது இரண்டாண்டுகளுக்கு முன்னர்...

அதே ஆளை வெளிநாட்டில் மீண்டும் சந்திப்பது என்பது வெரி ஸ்மால் வேர்ல்டுங்க என்பதை மீண்டும் கேட்டதுபோல உனர்ந்தேன்..

அவருக்கு நத்தத்தில் வெள்ளரிக்காயை நிராகரித்தத்தில் அவருக்கு ஏற்பட்ட இழப்பு 20 ரூபாய்கள் இருக்கலாம்..ஆனால் என்னிடம் வேலைக்கு சேர்ந்ததால் அவருக்கு ஓவர்டைம் மூலம் பலநூறுமடங்கு திருப்பிக் கொடுத்து விட்டேன் என நினைக்கிறேன்..

இதேபோல எத்தனையோ ரயில் ஸ்நேகங்களும், வெளிநாட்டில் வேலை செய்யும்போது ஏற்படும் நட்புகளும், என நட்பு வட்டாரங்கள் விரிவதும் கால ஓட்டத்தில் அவரவர் வாழவேண்டிய அவசரத்தில் நட்புகள் நினைவில் இல்லாமல் போவதும் சாதாரனமானது எனினும், இதுபோன்ற நிகழ்வுகள் அன்றைய தினத்தை சிறப்பானதாக மாற்றி விடுகிறது..

கொடுக்காமல் விட்ட கடன்காரனை மீண்டும் சந்திக்கும் நாட்கள் அவ்வளவு சிறப்பாக அமையாது என்றாலும்....

Saturday, April 4, 2009

சில புகைப்படங்கள்.

மனதை அள்ளிய புகைப்படங்கள் எனத் தலைப்பிட்டேன்.. பின்னர் என் மனதை அள்ளிய புகைப்படங்கள் எனப் பெயரிட்டு என் என்பதை அடைப்புக்குறிக்குள் இட்டேன்.. அப்படியும் மனம் ஒப்புக்கொள்ளாததால் வெறும் “சில புகைப்படங்கள்” எனப் பெயரிட்டுவிட்டேன்.


பாவனாவின் புகைப்படம் தவிர இதர படங்கள் எனது கைப்பேசியில் எடுத்தது.. எனவே தரம் சற்று முன்,பின்தான் இருக்கும்..

 


மனதை அள்ளும் சிரிப்பில் பாவனா..


 


ஃபெராரி ஒன்று கானக்கிடைத்தது..

 



 
Posted by Picasa


ஒரு மழை நாளின் தோஹாவின் கடற்கரை..